search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil God"

    • உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.
    • பிரமேசுரம் (தென்கரை) - பிரம,அக்னி, லட்சுமி,தேவ,சங்க,தாரா,வேத,வாயு,வன்னி,நரசிங்க தீர்த்தங்கள்.

    1. பொதியமலை - ஸ்ரீதர தீர்த்தம் முதல் துர்கா தீர்த்தம் வரை 18 தீர்த்தங்கள்.

    2. பாபநாசம் - முக்கூடல் தீர்த்தம்.

    3. திருமூல நகரம் (அம்பை, மேலப்பாளையம் வட்டாரம், திருமூலநாதர் கோவில்) - சாலா தீர்த்தம்.

    4. காசிபேசுரம் (அம்மைஎரிச்சாவுடையார் கோயில்) - காசிப தீர்த்தம், தீப தீர்த்தம்.

    5. திருக்கோட்டீச்சுரம் - முக்கூடல், கண்ணுவேசர், விசுவ, பிரம, சர்வ, தட்சிண தீர்த்தங்கள்.

    6. கரிகாத்தபுரி (அத்தாளநல்லூர்) - சித்த, மாண்டவ்ய, பிரமதண்ட தீர்த்தங்கள்.

    7. திருப்புடைமருதூர் -துர்கா தீர்த்தம், ரிஷி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்.

    8. பொருநையாற்றின் தென்கரையில் -சோம தீர்த்தம்.

    9. உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.

    10. துருவாச நகரம் (அரியநாயகிபுரம்) -துருவாச , காந்தர்வ தீர்த்தங்கள், பச்சையாறு, முக்கூடல்.

    11. மந்திரேசுரம் (ஓமனுவர்) - தேவதீர்த்தம், ருத்ர தீர்த்தம்.

    12. திரு அக்கினீச்சுரம் (தருவை)- அக்கினீச்சுர தீர்த்தம்.

    13. துர்கேசுரம் -துர்கா தீர்த்தம்.

    14. சிந்துபூந்துறைத் தீர்த்தம்.

    15. சிந்துபூந்துறைக்கு வடபால் -சப்தரிஷி தீர்த்தம்.

    16. சிந்துபூந்துறைக்கு கீழ்பால் -குட்டத் துறைத் தீர்த்தம்.

    17. ராமேசநல்லுவர் -ஜடாயு தீர்த்தம்.

    18. மணலுவர் (அ) மணவாள நல்லுவர்- மங்கள தீர்த்தம்.

    19. அழகர் கோயில் (சீவலப்பேரி)- முக்கூடல், பிதிர், கோதண்ட, தட்சிண, வியாக்ரம, வியாச தீர்த்தங்கள்.

    20. ஸ்ரீவைகுண்டம்- வைகுந்தத் தீர்த்தம்.

    21. காந்தீசுரம் -காந்தீசுரத் தீர்த்தம்.

    22. ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூர் -சக்கர, சங்க, பஞ்சகேத்ர தீர்த்தங்கள்.

    23. நவலிங்கபுரம் (பொருநை தென்கரை) - நவதீர்த்தம்.

    24. பிரமேசுரம் (தென்கரை) - பிரம, அக்னி, லட்சுமி, தேவ, சங்க, தாரா, வேத, வாயு, வன்னி, நரசிங்க தீர்த்தங்கள்.

    25. சோமேசுரம் (தென்கரை) - சோம தீர்த்தம்.

    26. திருச்செந்துவர் -சங்கமுகம்.

    27. சங்கமத் துறை -பொருநையாறு கடலில் கலக்குமிடம்.

    • பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
    • பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை மாநகரில் இருந்து தெற்கே

    சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது கிணத்துக்கடவு.

    இந்த ஊரின் நடுவே உள்ள பொன்மலையில் மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும்

    பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    ஞானப்பழத்திற்காக பெற்றோரான சிவ பெருமான் உமையாளுடன் கோபித்துக் கொண்டு

    பழனியில் குடிகொண்ட முத்துக்குமார சுவாமி இந்தபொன்மலையில் பாதம் பதித்ததாக இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

    எனவே இங்கு மூலவரான வேலாயுத சுவாமிக்கு பூஜை நடத்துவதற்கு முன்பாக,

    பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

    தனி மண்டபத்தில் உள்ள முருகப் பெருமானின் திருப்பாதங்களை தரிசித்தால்,

    விரைவில் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

    மேலும் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

    ×