search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambati Rayudu"

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது. #ICC #AmbatiRayudu
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு. பகுதி நேர பந்து வீச்சாளரான இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார்.

    அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு, தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்திருந்தது.

    ஆனால் இன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. இதனால் 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி அதிரடி தடைவிதித்துள்ளது. இனிமேல் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச இயலாது. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பந்து வீசலாம்.
    சிட்னியில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

    இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி  இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி, அம்பதி ராயுடு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் கலீல் அஹமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினார். 4-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 8 ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது ஓவரை நர்ஸ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். தவான் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்தார்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. 25-வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி 56 பந்தில் அரைசதம் அடித்தார்.

    விராட் கோலியைத் தொடர்ந்து அம்பதி ராயுடு 61 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின்னர் அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 80 பந்தில் 8 பவுண்டரியுடன் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.



    விராட் கோலி - அம்பதி ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு ஆட்டமிழந்ததும் எம்எஸ் டோனி களம் இறங்கினார். இவர் 25 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் 13 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். இதற்கிடையில் விராட் கோலி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 106 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது அவரின் 37-வது ஒருநாள் சதம் ஆகும்.

    சதம் அடித்த பின்னர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47-வது ஓவரில் இரண்டு சிக்சரும், 48-வது ஓவரில் ஒரு சிக்சரும், இரண்டு பவுண்டரியும் விளாசினார்.

    49-வது ஓவரில் இந்தியா பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை. ஜடேஜா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    விராட் கோலி 129 பந்தில் 157 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷமி கடைசி பந்தை சந்தித்து அதில் ரன் அடிக்கவில்லை.
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தவான், அம்பதி ராயுடு ஆட்டத்தால் ஹாங் காங் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #AsiaCup2018 #Dhawan #Rayudu
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.


    அரைசதம் அடித்த அம்பதி ராயுடு

    தொடர்ந்து விளையாடிய தவான் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. அதன் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது.

    கேதர் ஜாதவ் தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 28 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    எந்தவொரு வீரரும் எளிதாக அணுகக்கூடிய நபர் எம்எஸ் டோனி என்று இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். #MSDhoni2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங்கை வரும் 18-ந்தேதி எதிர்கொள்கிறது. 19-ந்தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அம்பதி ராயுடு இடம்பிடித்துள்ளார்.

    இந்த தொடர் குறித்து அம்பதி ராயுடு கூறுகையில் ‘‘விராட் கோலி இல்லாதது உண்மையிலேயே அணிக்கு பெரிய இழப்புதான். எனினும், சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் திறமையை நாங்கள் பெற்றுள்ளோம். டோனி கேப்டனாக இருந்தவர். எந்தவொரு வீரரும் அணுகக்கூடிய நபராகவே டோனி உள்ளார். அவர் எனக்கு அதிக அளவில் உதவி புரிந்துள்ளார்.



    நான் மிடில் ஆர்டர் தரவரிசையில் களம் இறங்கி விளையாடுவதையோ, அணியில் இடம் பிடிக்க போட்டி இருப்பதையோ பற்றி சிந்திக்கவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன். அதை விட்டுவிட்டு எனக்கு நானே நெருக்கடியை உருவாக்கிக் கொள்ளமாட்டேன்.

    உலகக்கோப்பை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக வந்துள்ளோம். தற்போது இது மட்டுமே மனதில் உள்ளது’’ என்றார்.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா ‘ஏ’வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.4 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 34 ரன்களும், டிரெவிஸ் ஹெட் 28 ரன்களும் சேர்த்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுக்களும், கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. டாப் வீரர்கள் ரவிக்குமார் சமரத் (4), சூர்யகுமார் யாதவ் (15), சஞ்சு சாம்சன் (0), ஷ்ரேயாஸ் அய்யர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ‘ஏ’ அணி 29 ரன்கள் அடிப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்ககு அம்பதி ராயுடு உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குருணால் பாண்டியா 49 ரன்களும், அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 38.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ‘ஏ’ மற்றும் ‘பி’ அணியில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இடம் கிடைத்துள்ளது.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ‘ஏ’ அணியில் சித்தேஷ் லாட், ‘பி’ அணியில் ரிக்கி புய் ஆகியோர் இடம்பிடித்திருந்தார்கள். தற்போது துலீப் டிராபி அணிக்கு செல்ல இருப்பதால், இவர்கள் இருவருக்கும் பதில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    அம்பதி ராயுடு ஏற்கனவே இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் சேர்க்கப்படவில்லை. அதன்பின் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தார். அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
    யோ-யோ சோதனையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அம்பதி ராயுடுவுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AmbatiRayudu #YoYotest #SureshRaina

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 

    இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடு இந்திய அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்நிலையில், ராயுடுவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளது. 

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.டோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ். #AmbatiRayudu #YoYotest #SureshRaina
    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்படும் யோ-யோ சோதனையில் அம்பதி ராயுடு தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #AmbatiRayudu #YoYotest

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும். 

    இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 



    இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ராயுடு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmbatiRayudu #YoYotest
    ஐபிஎல் 2018 சீசனில் ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. #IPL2018

    நடந்து முடிந்த ஐபிஎல் 2018 சீசனில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வீரர்களின் ஏலத்தின் போது வயது அதிகமான வீரர்களை சென்னை எடுக்கும் போது சென்னை சீனியர் கிங்ஸ் என பலரும் கிண்டல் செய்ய, விமர்சனங்களை உடைத்து தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    குவாலிபயர், பைனல், 2 லீக் போட்டிகள் என 4 போட்டிகளிலும் ஐதராபாத் அணி சென்னையிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிசொதப்பியது, ஆரம்பத்தில் தொடர்ந்து தோற்று பின்னர் அனைவரும் வியக்கும் வண்ணம் சில வெற்றிகளை பெற்று மீண்டும் முக்கியமான போட்டிகளில் தோல்வி என ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ரசிகர்களை ஏமாற்றியது என பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த சீசனில் நடந்தது.

    இளம் வீரர்களின் செயல்பாடும் இந்த சீசனில் சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில், வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை கொண்டு மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை ஹன்சா ரிசர்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.



    குறைந்தது 1 போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு வீரர் அடித்த ரன், அரைச்சதம், சதம், விக்கெட், பிடித்த கேட்ச் ஆகியவற்றை கொண்டு அந்த வீரருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்கின் படி நட்சத்திர வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிமாக இருப்பதால் அவர்கள் பட்டியலில் பின் தங்குகின்றனர்.

    ஒரு வீரர் பெறும் ஒரு புள்ளிக்கு அணி எவ்வளவு செலவு செய்கிறது என்பதே இந்த கணக்கீடு. அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக விராட் கோலியை எடுத்துக்கொண்டால் இந்த சீசனில் அவர் நான்கு அரைச்சதங்களுடன் 530 ரன்களை அடித்தார். அவர் பிடித்த கேட்ச் ஆகியவற்றை சேர்த்ததன் மூலம் 2225 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர், நேரடியாக ஏலம் எடுக்கப்படவில்லை என்றாலும் இந்த சீசனில் அவர் ரூ.17 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு 76,404 ரூபாயை அணி செலவளித்துள்ளது.

    இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பெற்ற புள்ளிகள் 2450. அவர் இந்த சீசனில் சம்பளமாக பெற்ற தொகை ரூ.15 கோடி. எனவே, அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.61,224 ஆயிரம் ரூபாயை அணி அவருக்காக செலவளித்துள்ளது.

    சென்னை அணியின் மற்றொரு வீரர் அம்பாதி ராயுடு 2734 புள்ளிகள் எடுத்துள்ளார். ஆனால், அவர் பெற்ற சம்பளம் ரூ.2.2 கோடி மட்டுமே. இதன் மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு அணி செலவளித்த தொகை வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதன் காரணமாக தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரராக அறியப்படுகிறார்.



    இறுதிப்போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய அணி வீரர் வாட்சன் 3330 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர் பெற்ற ஊதியம் 4 கோடி என்பதால், அவரது ஒரு புள்ளிக்கு அணி செலவளித்துள்ள தொகை ரூ.12 ஆயிரம். பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 1706 புள்ளிகளை பெற்றுள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

    15 கோடி ஊதியம் பெற்ற ரோகித் சர்மா எடுத்துள்ள புள்ளி 1252, அவரின் ஒரு புள்ளிக்கு செலவளிக்கப்பட்ட தொகை 1,19,808 ரூபாய். இதேபோல, பந்துவீச்சாளர்களில் டெல்லி அணியில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹர்சால் படேல் 2 கோடிக்கு எடுக்கப்பட்டு 830 புள்ளிகள் எடுத்துள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 860 ரூபாயை அணி செலவளித்துள்ளது. 

    இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய எல்லா வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
    சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரோகித் சர்மா சாதனையுடன் ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு இணைந்துள்ளனர். #IPL2018
    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று பேரையும் இடம்பிடித்துள்ளார்.

    இவர்தான் அதிக கோப்பையை வென்ற வீரராக இருந்தார். இவருடன் தற்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தனர். அப்போது மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தது.



    இந்த முறை இரண்டு பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்கள். 2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்பதி ராயுடும், ஹர்பஜன் சிங்கும் நான்கு முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்துள்ளனர்.

    2009-ம் ஆண்டு டெக்கார் சார்ஜர்ஸ் அணியும், 2013, 2015 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். #IPL2018 #DDvCSK #VIVOIPL #AmbatiRayudu

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சென்னை அணி பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். நேற்றைய போட்டியில் ராயுடு 49 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் போட்டிகளில் 3 ரன்களை கடந்தார். இதுவரை 127 போட்டிகளில் விளையாடியுள்ள அம்பதி ராயுடு 3001 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 585 ரன்கள் குவித்துள்ளார். #IPL2018 #DDvCSK #VIVOIPL #AmbatiRayudu
    ×