search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kedar jadhav"

    • இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
    • இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    மும்பை:

    இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.

    இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்துள்ளனர். கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும். இதேபோல ஹர்சல் படேல் 92 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    • இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் வகித்த ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    பெங்களூரு:

    16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இது வரை 42 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை அணிகள் 2 முதல் 4 இடங்களில் உள்ளன. மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடரை தொடங்கிய பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் வகித்த ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவை அந்த அணி சேர்த்துள்ளது.

    • ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார்.
    • இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள்.

    சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி தான் வாங்கிய புதிய எஸ்யூவி காரில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார்.

    ஐபிஎல் 2022 முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட்டில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சில இடங்களுக்குச் சென்றார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார் டோனி.

    இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) அடுத்த சீசனுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, ​​சிஎஸ்கே கேப்டன் சமீபத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் புதிதாக வாங்கிய எஸ்யூவியில் பயணம் மேற்கொண்டுள்ளார். டோனி சமீபத்தில் KIA SV6 என்ற காரை வாங்கியுள்ளார். இது முழுக்க மின்சார கார் ஆகும்.

    ஆன்லைனில் வைரலான அந்த வீடியோவில், ராஞ்சியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் அணி வீரர் கேதர் ஜாதவ் ஆகியோருடன் எம்எஸ் டோனி காணப்பட்டார். சிஎஸ்கே வீரர்கள் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்காக வந்திருந்தனர். இருவரும் டோனியை சந்தித்தது மட்டுமல்லாமல், அவரது புதிய எஸ்யூவியில் பயணம் செய்யும் வாய்ப்பையும் பெற்றனர்.

    இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள். மகாராஷ்டிரா தற்போது போட்டியில் தோல்வியடையாமல் உள்ளது மற்றும் சர்வீசஸ் அணியை வீழ்த்தினால் குழுவில் முதலிடத்தை பிடிக்க முடியும். ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார். 2021ல் சிஎஸ்கேயில் நிரந்தர உறுப்பினரானார். மறுபுறம் ஜாதவ் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் தற்போது உடல் தகுதி பெற்று, உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ், கடந்த 5ம் தேதி பஞ்சாப்புக்கு எதிரான  ஆட்டத்தில் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது (14-வது ஓவர்) இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக வெளியேறினார்.

    எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் (அதாவது பிளே-ஆப் சுற்றில்) விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். அதேபோல் அந்த தொடரின் கடைசி ஆட்டங்களில் விளையாடவில்லை.



    இதையடுத்து உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றிருந்தார். காயம் ஏற்பட்டதையடுத்து, அவரது உடல்நலம் குணமடைவதை பொருத்தே கேதருக்கு பதிலாக, யாரை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    கேதரின் உடல் நலனை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், அவர் குணமடைய பயிற்சி அளித்து வந்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல் தகுதி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கேதர் குணமடைந்தார் என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் 22ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் கேதரும் செல்ல உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிடும் என தெரிகிறது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது. #INDvWI #ViratKohli #MSDhoni #KedarJadhav
    மும்பை:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கவுகாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டனத்தில் நடந்த 2-வது ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. புனேயில் நடந்த 3-வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற சமநிலை உள்ளது.

    இன்றைய 4-வது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடுவதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட வெற்றியால் வெஸ்ட்இண்டீஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி இந்தியாவை வீழ்த்தி முன்னிலை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை மிகவும் மோசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலாவது மிடில் ஆர்டர் வரிசை எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் 4 வரிசையில் இந்திய அணி நன்றாக இருக்கிறது. தொடக்க வீரர்களான ரோகித்சர்மா, தவான், விராட்கோலி, அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் 5 முதல் 7-வது வரிசை தான் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த வரிசையின் சராசரி 28.68 ஆக இருக்கிறது.

    கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் கேதர்ஜாதவ் இடம் பெற்றுள்ளார். அவரது வருகையால் மிடில் ஆர்டர் வரிசை பலம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ரிசப்பண்ட் இடத்தில் கேதர்ஜாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மோசமான நிலையில் இருக்கும் டோனி சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அவர் நேற்று 45 நிமிடம் பயிற்சியில் ஈடுபட்டார். #INDvWI #ViratKohli #MSDhoni #KedarJadhav
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் இடம்பிடித்துள்ளார். #INDvWI
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடுபவர் கேதர் ஜாதவ். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேதர் ஜாதவ் விளையாடினார். முதல் போட்டியில் விளையாடும்போது அவருக்கு தொடைப்பகுதியில தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அப்போதும் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தற்போது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பெறவில்லை. கேதர் ஜாதவ் உடற்தகுதி பற்றி தெரிந்து கொள்ள தியோதர் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழு கேட்டுக்கொண்டது. தியோதர் டிராபியில் சிறப்பாக பேட்டிங் செய்ததன் உடன் பந்தும் வீசி தனது உடற்தகுதியை நிரூபித்தார் கேதர் ஜாதவ்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்த அணியில் கேதர் ஜாதவிற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் கேதர் ஜாதவ் அதிர்ச்சியடைந்தார். தன்னை தியோதர் டிராபியில் விளையாட சொல்லிவிட்டு அணியில் இடம் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

    ‘‘தேர்வுக்குழு என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை நான் ஆராய வேண்டியது அவசியம். அவர்களுடைய தற்போதைய திட்டம் என்ன வென்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் தற்போது நான் அணியில் இல்லை. நான் ரஞ்சி டிராபியில் விளையாட உள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதனுடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பிடித்துள்ளார்.

    ஏற்கனவே முரளி விஜய், கருண் நாயர் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் அணியில் இடம்பெறாததற்கு தேர்வுக்குழு மீது அதிக அளவில் விமர்சனம் எழும்பியது. தற்போது கேதர் ஜாதவ் விவகாரத்தில் விமர்சனத்திற்குள் சிக்க வேண்டாம் என்று தேர்வுக்கு நினைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பந்து வீச்சை வைத்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ட்வீட் போட, பாஜக பாகிஸ்தான் அணியை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளது. #INDvPAK #KedarJadhav
    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கிய காரணமான சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானை 162 ரன்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டியதன் காரணமாக இந்தியாவின் வெற்றி எளிதாகியது.

    இந்நிலையில், போட்டி முடிந்ததற்கு பின் ட்வீட் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திவ்யா ஸ்பந்தனா, “கேதர் ஜாதவின் பந்துவீச்சு வேகம் குறைந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பின் அளவுக்கு குறைந்துவிடவில்லை” என மத்திய அரசை கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.



    இதற்கு பதிலடி கொடுத்த அம்மாநில பாஜக, “கேதர் ஜாதவ் பந்து வீச்சை பற்றி எந்த கருத்தும் இல்லை. ஆனால், உங்கள் (திவ்யா ஸ்பந்தனா) அறிவுத்திறன் ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விட குறைவுதான்” என ட்வீட் செய்துள்ளது. 
    இந்திய அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். #AsianCup2018 #SunilGavaskar #KedarJadhav
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அவரை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

    கேதர் ஜாதவ் ஆல்-ரவுண்டராக திகழ்வதை செய்து காட்டினார்.

    அவரது பந்துவீச்சை எதிரணியினர் கணிக்க சிரமப்படுகின்றன. அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார். முதன்மை பந்து வீச்சாளர்கள் சிரமப்படும் போது கேப்டனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கேதர் ஜாதவ் உள்ளார். அவரை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என்றார். #AsianCup2018 #SunilGavaskar #KedarJadhav
    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #INDvPAK #RohitSharma
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் நேற்று மாலை நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஹாங் காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள நாங்கள் விரும்பினோம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது. ஆடுகளம் பந்துவீச்சு ஏற்ற வகையில் இல்லாவிட்டாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கள் பணியை செய்தனர்.

    ஹாங் காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து மேம்பட்டு விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு விளையாடினோம். பாபர் ஆசம்- சோயிப் மாலிக் ஜோடியின் ஆட்டம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஆனால் நாங்கள் அச்சம் அடையவில்லை. கேதர் ஜாதவின் பந்துவீச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எங்களது பேட்டிங்கும் நன்றாக இருந்தது. அம்பதி ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK #RohitSharma
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ‘ஏ’ மற்றும் ‘பி’ அணியில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இடம் கிடைத்துள்ளது.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ‘ஏ’ அணியில் சித்தேஷ் லாட், ‘பி’ அணியில் ரிக்கி புய் ஆகியோர் இடம்பிடித்திருந்தார்கள். தற்போது துலீப் டிராபி அணிக்கு செல்ல இருப்பதால், இவர்கள் இருவருக்கும் பதில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    அம்பதி ராயுடு ஏற்கனவே இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் சேர்க்கப்படவில்லை. அதன்பின் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தார். அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
    ×