search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பந்து வீச்சை வைத்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ட்வீட் போட, பாஜக பாகிஸ்தான் அணியை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளது. #INDvPAK #KedarJadhav
    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கிய காரணமான சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானை 162 ரன்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டியதன் காரணமாக இந்தியாவின் வெற்றி எளிதாகியது.

    இந்நிலையில், போட்டி முடிந்ததற்கு பின் ட்வீட் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திவ்யா ஸ்பந்தனா, “கேதர் ஜாதவின் பந்துவீச்சு வேகம் குறைந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பின் அளவுக்கு குறைந்துவிடவில்லை” என மத்திய அரசை கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.



    இதற்கு பதிலடி கொடுத்த அம்மாநில பாஜக, “கேதர் ஜாதவ் பந்து வீச்சை பற்றி எந்த கருத்தும் இல்லை. ஆனால், உங்கள் (திவ்யா ஸ்பந்தனா) அறிவுத்திறன் ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விட குறைவுதான்” என ட்வீட் செய்துள்ளது. 
    Next Story
    ×