search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல்"

    • ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ருதுராஜ் களமிறங்கினர். ரகானே முதல் ஓவரிலேயே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ருதுராஜ் - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். அதிரடி காட்டிய துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரரான டிகாக் 3 பந்துகள் சந்தித்து 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேஎல் ராகுல் 16 ரன்னிலும் படிக்கல் 13 ரன்னிலும் வெளியேறினர்.

    அந்த நேரத்தில் ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினர். குறிப்பாக ஷர்துல் தாகூர் வீசிய 16-வது ஓவரில் பூரன் 2 சிக்சர் 1 பவுண்டரி என 17 ரன்கள் குவித்தார். சென்னை அணிக்கு பயத்தை காட்டிய பூரனை (15 பந்தில் 34 ரன்கள்) பத்திரனா வீழ்த்தினார்.

    கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்ற ஸ்டோய்னிஸ் நான்கு பந்துகளில் 18 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஸ்டோய்னிஸ் 124 ரன்னிலும் தீபக் ஹூடா 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார்.
    • மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய சென்னை அணிக்கு அஜிங்க்யா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    போட்டி முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களையும், துபே 27 பந்துகளில் 66 ரன்களை குவித்தனர். லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சென்னை அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.
    • லக்னோ அணி இதுவரை மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை சென்னை அணி விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. லக்னோ அணியும் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது.

    சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    லக்னோ அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பாதையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
    • இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தேதி அறிவிகப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்தில் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3, 4, 5-வது இடங்கள் முறையே சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி காலை 10:40 மணிக்கு தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது.
    • இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் சந்தித்து புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம், யாக்கர் பந்துகளை தங்களால் வீச முடியாது என நினைத்து, தங்களை ஏமாற்றிக் கொள்வதால்தான். அதனால்தான் சிஎஸ்கேவில் பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு பவுலர்களையும் 12 - 14 யாக்கர் பந்துகளை வீசச் சொல்லுவேன்.

    யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களான லசித் மலிங்கா, பும்ரா அல்லது பத்திரனா, நான் விளையாடியபோது நானே, இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம். முடிந்தவரை அதிக யார்க்கர்களை வீச முயற்சி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவு வலுவாகவே உள்ளது.
    • இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 3 தோல்வி (டெல்லி, ஐதராபாத், லக்னோவுக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    லக்னோ ஸ்டேடியத்தில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இதே லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சென்னை அணி எதிர்கொண்டது. அதில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவு வலுவாகவே உள்ளது. ஆனால் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து தடுமாறுவது பின்னடைவாக உள்ளது. அவர் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை பலமடையும். இதே போல் 8-வது வரிசையில் இறங்கும் மூத்த வீரர் டோனி 42 வயதிலும் சர்வசாதாரணமாக சிக்சர்களை விரட்டுகிறார். அவர் முன்வரிசையில் ஆடினால் இன்னும் நன்றாக இருக்கும். பந்து வீச்சில் தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான் பவர்-பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமாகும்.

    சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் சிக்கலின்றி வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.

    லக்னோ அணியும் 4 வெற்றி, 3 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி 177 ரன்னை இலக்காக நிர்ணயித்த போதிலும், கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக் அரைசதம் அடித்து லக்னோவை எளிதில் வெற்றி பெற வைத்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி அல்லது டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ் பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

    லக்னோ: குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா அல்லது தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொசின்கான், யாஷ் தாக்குர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி, மும்மை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். தொடர்ந்து, நேஹல் வதேரா 49 ரன்களும், முகமது நபி 23 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 6 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவித் 3 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனால், 180 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் இறங்குகிறது.

    • இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது
    • ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் 3வது இடத்தில உள்ளது.

    இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் எடுத்து ஹைதராபாத் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. குறிப்பாக ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

    இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சந்தித்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஹைதராபாத் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 1 ரன்னில் தோல்வியடைந்தது.
    • தோல்வியடைந்ததை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆர்சிபி அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகி உள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

    இந்நிலையில் ஆர்சிபி அணி 1 ரன்னில் தோல்வியடைந்ததை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு அருகில் இருந்த காவலர் ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நேற்று போட்டியில் நடந்ததா அல்லது மற்ற ஐபிஎல் சீசனில் நடந்ததா என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை.

    இதனை பார்க்க எங்களுக்கே கஷ்டமாக உள்ளது என சிஎஸ்கே அணி ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். மேலும் விராட் கோலிக்காகவாவது ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அணி வீரர்கள் பயிற்சி செய்து விட்டு ஓய்வு எடுக்க ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பஸ் டிராபிக்கிள் சிக்கியது.

    அப்போது அந்த இடத்திற்கு ஹூரோ மாதிரி வந்த சன்னி என்ற ரசிகர் டிராபிக்கை சரி செய்தார். அவரது செயலை பஸ்சில் இருந்து பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

    இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவில் நன்றி சன்னி பாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    ×