search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quadrangular Series"

    மணிஷ் பாண்டே சதம் அடித்தும் இந்தியா ‘பி’ அணி ஆஸ்திரேலியா ‘ஏ’விடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. #INDA
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா பி - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘பி’ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் களம் இறங்கினார்கள். மயாங்க் அகர்வால் 36 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷுப்மான் கில் 4 ரன்னில் வெளியேறினார். ஆனால் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 109 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 117 ரன்கள் குவிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்தது.



    பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 24.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் நீண்ட நேர ஆட்டம் தடைபட்டது.

    பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 40 ஓவரில் 247 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 93 பந்தில் 101 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஏ 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    முதுகு வலியால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. #Bhuvi #BCCI
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இயலவில்லை.

    கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. காயம் அடைந்த புவனேஸ்வர் குமார் இந்தியா திரும்பி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி அடைந்து விட்டார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக பந்து வீசினால், ஐந்தாவது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது.



    இந்தியா ‘ஏ’ அணி அடுத்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியை 29-ந்தேதி எதிர்கொள்கிறது. இதனால் புவனேஸ்வர் 30-ந்தேதி தொடங்கும் 4-வது டெஸ்டில் பங்கேற்க முடியாது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 7-ந்தேதி லண்டன் கியா ஓவலில் நடக்கிறது.
    இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி அபார பந்து வீச்சால் நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் சூர்ய குமார் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும், ஈஸ்வரன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஜோடி சொதப்பியதால், அதன்பின் வந்த முன்னணி வீரர்களால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. ஷ்ரேயாஸ் அய்யர் (7), அம்பதி ராயுடு (19), நிதிஷ் ராணா (19), குருணால் பாண்டியா (5) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


    கலீல் அஹமது

    அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 38 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 37.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 157 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குளேயெட் (24), பீட்டர் மலன் (47), சரேல் எர்வீ (20) சிறப்பான தொடக்கம் கொடுக்க 37.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ஏ அணிகள் வெற்றி பெற்றன.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன, ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘பி’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணாவின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ ரன் குவிக்க திணறியது. அம்பதி ராயுடு 48 ரன்னும், சஞ்சு சாம்சன் 32 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 35 ரன்களும் அடிக்க 49 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஷ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘பி’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 114 பந்தில் 124 ரன்கள் குவித்தார். இளம் வீரர் ஷுப்மான் கில் 42 ரன்கள் அடிக்க இந்தியா ‘பி’ 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


    டிராவிஸ் ஹெட்

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ டிராவிஸ் ஹெட் (110), மார்கஸ் லபுஸ்சேக்னே (65), ஆர்கி ஷார்ட் (49), ரென்ஷா (42) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது.

    பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கிஹான் (50), கயா சோண்டா (117) ஆகியோர் சிறப்பான ஆடினாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 48.4 ஓவரில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா ‘ஏ’வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.4 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 34 ரன்களும், டிரெவிஸ் ஹெட் 28 ரன்களும் சேர்த்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுக்களும், கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. டாப் வீரர்கள் ரவிக்குமார் சமரத் (4), சூர்யகுமார் யாதவ் (15), சஞ்சு சாம்சன் (0), ஷ்ரேயாஸ் அய்யர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ‘ஏ’ அணி 29 ரன்கள் அடிப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்ககு அம்பதி ராயுடு உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குருணால் பாண்டியா 49 ரன்களும், அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 38.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ‘ஏ’ மற்றும் ‘பி’ அணியில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இடம் கிடைத்துள்ளது.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ‘ஏ’ அணியில் சித்தேஷ் லாட், ‘பி’ அணியில் ரிக்கி புய் ஆகியோர் இடம்பிடித்திருந்தார்கள். தற்போது துலீப் டிராபி அணிக்கு செல்ல இருப்பதால், இவர்கள் இருவருக்கும் பதில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    அம்பதி ராயுடு ஏற்கனவே இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் சேர்க்கப்படவில்லை. அதன்பின் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தார். அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
    ×