search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி"

    • வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் ஹசரங்கா இடம் பெற்றிருந்தார்.
    • நடுவரை கேலி செய்ததால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கையும் ஒருநாள் தொடரை வங்காளதேசமும் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கடந்த வருடம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா இடம்பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் ஹசரங்காவுக்கு 2 டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது நடுவரிடம், தான் கொடுத்து வைத்திருந்த தொப்பியை பிடுங்கியதுடன், அவரை கேலியும் செய்தார். இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும்.

    இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன. ஏற்கனவே 5 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றிருந்த ஹசரங்காவுக்கு அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 8 தகுதி இழப்பு புள்ளி என்பது 4 இடைநீக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளப்படும்.

    4 இடைநீக்க புள்ளி என்பது 2 டெஸ்ட் அல்லது 4 ஒரு நாள் அல்லது நான்கு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமமானது. அவருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் முதலில் வங்காளதேசத்துக்கான இரு டெஸ்ட் நடக்க இருப்பதால் அவர் அதில் விளையாட முடியாது. இதனால் ஹசரங்கா ஐ.பி.எல். தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    • விதிமுறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்தது.
    • கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை (Stop Clock) பயன்படுத்தும் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. 2024 ஏப்ரல் மாதம் வரை இந்த முறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.

    எனினும், இது தொடர்பாக போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக போட்டிகளை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். அதாவது ஒரு ஓவர் பந்து வீசியதும், அடுத்த ஓவரில் பந்து வீசுவதற்கு அந்த அணி 60 நொடிகளுக்குள் தயாராக வேண்டும்.

    இதற்கு உடன்பட மறுக்கும் வகையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பந்துவீசும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். தொடர்ந்து பந்து வீச தாமதமாக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டு விடும். சோதனை முறையில், இது போட்டிகளை விரைந்து முடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

    புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது, மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்படும். அதில் ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம்பெறும். இவ்வாறு செய்யும் போது இரு அணி வீரர்களும் ஓவர்களின் இடையில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று பார்க்க முடியும். 

    • வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
    • ரோகித் சர்மா விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து ஐ.சி.சி. வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் 2 இடங்கள் சரிந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிடுகிடுவென முன்னேறி மற்றொரு இந்திய வீரரான விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2-வது இடத்தில் உள்ளார். இந்த தரவரிசையில் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார்.

    • பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
    • இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்தார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.

    சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 11-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் 2-ம் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். டாப் 10 2 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 10-ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். விராட் கோலி 1 இடம் முன்னேறி 8-வது இடத்தையும் ரோகித் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் இரு இடங்களை தக்கவைத்துள்ளனர். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசில்வுட் 4-ம் இடத்திற்கும், நாதன் லையன் 6-ம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    மேலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.

    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
    • இரு அணிகள் மோதும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் நியூயார்க்கில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமான பணிகள் ஒரு மாதம் நிறைவடைந்ததையடுத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த மைதானம் 34,000 பார்வையாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. 12,500 ரசிகர்கள் இருக்கும் வகையில் ஸ்டேடியத்தின் ஈஸ்ட் ஸ்டாண்ட், கடந்த ஒரு மாதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கிரேன்களுடன் இந்த கட்டுமான பணி நடைபெறும் வீடியோவை பார்க்க சுவாரஸ்மாக உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

    நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதான அட்டவணை:

    ஜூன் 3: இலங்கை vs தென்னாப்பிரிக்கா

    ஜூன் 5: இந்தியா vs அயர்லாந்து

    ஜூன் 7: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 9: இந்தியா vs பாகிஸ்தான்

    ஜூன் 10: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்

    ஜூன் 11: பாகிஸ்தான் vs கனடா

    ஜூன் 12: அமெரிக்கா vs இந்தியா

    2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

    • ஆஸ்திரேலிய அணி 59.09 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
    • வங்காளதேசம் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தது. தற்போது முதல் இடத்துக்கு முன்னேறியது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோற்றது. ஆஸ்திரேலியாவின் வெற்றியால் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்தது. இந்திய அணி 64.58 சதவீத புள்ளிகளுடன் இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் நியூசிலாந்து அணி 60.00 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு பின் தங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியா முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளும்.

    ஆஸ்திரேலிய அணி 59.09 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 6-து இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 7-வது இடத்திலும், இங்கிலாந்து 8-வது இடத்திலும், இலங்கை 9-வது இடத்திலும் உள்ளன.

    அடுத்த ஆண்டு வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    2019-2021 வரை நடந்த முதல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்தும், 2021-2023 வரை நடைபெற்ற இரண்டாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை நியூசிலாந்தும் கைப்பற்றின. இந்திய அணி 2 முறையும் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது.

    • விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 12 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.

    இந்த தரவரிசையில் வில்லியம்சன் முதல் இடத்தில் (818) யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். 2 முதல் 10 இடங்கள் முறையே டேரி மிட்செல், பாபர் அசாம், ஜோ ரூட், கவாஜா, விராட் கோலி, கருரத்ணே, ஹரி புரூக், மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் உள்ளனர்.

    • முகமது நபி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் பும்ரா.
    • நம்பர் ஒன் பிடித்த நிலையில் அவரின் பதிவு, கிரிக்கெட் விமர்சகளிடம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்த சிறப்பான பந்து வீச்சு மூலம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். 30 வயதான அவர் 4-வது இடத்தில் இருந்து முன்னேறி 'நம்பர் 1' இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். அதாவது இந்திய வேகப்பந்து வீரர்களில் இதுவரை யாரும் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது கிடையாது.

    1979-80-ம் ஆண்டுகளில் கபில்தேவ் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்து வீரர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன்சிங் பெடி ஆகியோர் முதல் இடத்தில் இருந்தனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடித்தது குறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில் "நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவர் இருவரை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து சொல்ல ஆயிரக்கணக்கில் வருவார் என்று பதிவிட்டு இருக்கிறார்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக தாக்கி இந்த மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று பும்ரா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் குஜராத் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்காக அவரை வாழ்த்தியும், புகழ்ந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா இந்த மீம் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது.

    மேலும் இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைத்தும் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

    ரபடா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4-வது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

    • இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.

    இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

    கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

    ×