search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலி"

    • பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
    • ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர். 

    விளையாட்டு வீரர்களான மகிந்திரசிங் தோனி, விராட் கோலி, அஷ்வின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    விராட் கோலி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் பிரதிஷ்டை விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், விழாவிற்கு தோனியும் வரவில்லை.. விராட் கோலியும் வரவில்லை.

    இருவரும் விழாவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், ரசிகர்கள் காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் உள்ளனர்.

    • என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
    • கடினமாக ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாக அவர் வந்தார்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலியின் அதிரடி ஆட்டமே காரணம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விராட் கோலி இந்த போட்டியில் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் கோலியின் ஆட்டத்தை அவரது மனைவி அனுஷ்கா சர்மா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தமது இன்ஸ்ட்ரகிராம் வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

    நீங்கள் அழகு! அசத்தும் அழகு!! இன்றிரவு மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள்! நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்... என் அன்பே. உங்களின் மன உறுதியும், நம்பிக்கையும் மனதைக் கவரும்! என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

    அம்மா ஏன் அறையில் நடனமாடுகிறார், ஏன் கத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நம் மகள் மிகவும் சிறியவளாக இருந்தபோதிலும், அவளுடைய அப்பா அன்று இரவு தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் புரிந்துகொள்வாள். கடினமாக இருந்த ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் அவர் வெளியே வந்தார். உன்னை நினைத்து பெருமை படுகிறேன். உங்கள் வலிமை மிக சிறந்தது. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்?, சமீபத்திய டெஸ்ட் தோல்வி ஆகியவை குறித்து எம்.எஸ் தோனி பேசியுள்ளார். #MSDhoni #TeamIndia
    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டனாக தோனி இருந்த கால கட்டத்தில் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றை இந்திய அணி வென்றது. 2017-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

    மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு அணியின் முன்னேற்றத்துக்கு அவர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.

    இந்நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் பேசிய போது இதைப் பற்றி கூறியுள்ளார். "எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் விலகினேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

    “புதிய கேப்டன் சரியான நேரத்தை வழங்காமல் ஒரு வலுவான அணியை தேர்வு செய்வது சாத்தியமில்லை. நான் சரியான நேரத்தில் கேப்டனியை விட்டுவிட்டேன் என்று நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் 4-1 தோல்வி குறித்து பேசிய அவர், “இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டது. அதனால் தான் வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்தியா தற்போது தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது என்று நாம் மறந்துவிடக் கூடாது” என தோனி பேசினார். 
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இருவருக்கும் இது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. #ENGvIND

    இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை முதல் டி20 போட்டி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

    அப்போது, தோல்விக்கு கூறப்பட்ட முக்கிய காரணம் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் (மணிக்கட்டை சுழற்றி பந்து போடும் சுழற்பந்து வீச்சாளர்கள்) இல்லை என்பதே. அப்போது, அணியில் இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது பார்மில் இல்லாததால் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.

    அவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரையும்தான் கோலி மலைபோல நம்பியுள்ளார். இடைநிலை ஓவர்களில் நிச்சயமாக சுழற்பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியும் என விராட் கோலி இங்கிலாந்து டூருக்கு கிளம்பும் முன்னர் கூறியிருந்தார். 

    இருந்தாலும், இங்கிலாந்து அணி தற்போதுதான் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் அடித்து துவைத்தது. அதிலும், 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனையும் படைத்தது. இந்த வெற்றி இந்திய அணியை சற்றே கலங்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால், எந்த இடத்திலும் சறுக்கிவிடக்கூடாது என்பதில் கோலி திட்டவட்டமாக உள்ளார். இந்த தொடர் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இருக்கும். தட்ப வெப்ப நிலை, ஆடுகளத்தின் தண்மை என அனைத்தையும் வீரர்கள் புரிந்து கொள்ளலாம்.

    இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளையும், சாஹல் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

    கடந்தாண்டு இந்திய அணியில் அறிமுகமான குல்தீப் யாதவ் விளையாடிய 20 ஒருநாள் போட்டியில் 15 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல, சாஹல் விளையாடிய 23 போட்டிகளில் இந்தியா 19 போட்டிகளில் வென்றுள்ளது. 

    இங்கிலாந்து அணியில் உள்ள பட்லர், ஜேசன் ராய், பைர்ஸ்டோ ஆகிய அதிரடி வீரர்களை குல்தீய், சாஹல் இணை வீழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. 
    ஐபிஎல் 2018 சீசனில் ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. #IPL2018

    நடந்து முடிந்த ஐபிஎல் 2018 சீசனில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வீரர்களின் ஏலத்தின் போது வயது அதிகமான வீரர்களை சென்னை எடுக்கும் போது சென்னை சீனியர் கிங்ஸ் என பலரும் கிண்டல் செய்ய, விமர்சனங்களை உடைத்து தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    குவாலிபயர், பைனல், 2 லீக் போட்டிகள் என 4 போட்டிகளிலும் ஐதராபாத் அணி சென்னையிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிசொதப்பியது, ஆரம்பத்தில் தொடர்ந்து தோற்று பின்னர் அனைவரும் வியக்கும் வண்ணம் சில வெற்றிகளை பெற்று மீண்டும் முக்கியமான போட்டிகளில் தோல்வி என ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ரசிகர்களை ஏமாற்றியது என பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த சீசனில் நடந்தது.

    இளம் வீரர்களின் செயல்பாடும் இந்த சீசனில் சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில், வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை கொண்டு மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை ஹன்சா ரிசர்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.



    குறைந்தது 1 போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு வீரர் அடித்த ரன், அரைச்சதம், சதம், விக்கெட், பிடித்த கேட்ச் ஆகியவற்றை கொண்டு அந்த வீரருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்கின் படி நட்சத்திர வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிமாக இருப்பதால் அவர்கள் பட்டியலில் பின் தங்குகின்றனர்.

    ஒரு வீரர் பெறும் ஒரு புள்ளிக்கு அணி எவ்வளவு செலவு செய்கிறது என்பதே இந்த கணக்கீடு. அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக விராட் கோலியை எடுத்துக்கொண்டால் இந்த சீசனில் அவர் நான்கு அரைச்சதங்களுடன் 530 ரன்களை அடித்தார். அவர் பிடித்த கேட்ச் ஆகியவற்றை சேர்த்ததன் மூலம் 2225 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர், நேரடியாக ஏலம் எடுக்கப்படவில்லை என்றாலும் இந்த சீசனில் அவர் ரூ.17 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு 76,404 ரூபாயை அணி செலவளித்துள்ளது.

    இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பெற்ற புள்ளிகள் 2450. அவர் இந்த சீசனில் சம்பளமாக பெற்ற தொகை ரூ.15 கோடி. எனவே, அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.61,224 ஆயிரம் ரூபாயை அணி அவருக்காக செலவளித்துள்ளது.

    சென்னை அணியின் மற்றொரு வீரர் அம்பாதி ராயுடு 2734 புள்ளிகள் எடுத்துள்ளார். ஆனால், அவர் பெற்ற சம்பளம் ரூ.2.2 கோடி மட்டுமே. இதன் மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு அணி செலவளித்த தொகை வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதன் காரணமாக தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரராக அறியப்படுகிறார்.



    இறுதிப்போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய அணி வீரர் வாட்சன் 3330 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர் பெற்ற ஊதியம் 4 கோடி என்பதால், அவரது ஒரு புள்ளிக்கு அணி செலவளித்துள்ள தொகை ரூ.12 ஆயிரம். பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 1706 புள்ளிகளை பெற்றுள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

    15 கோடி ஊதியம் பெற்ற ரோகித் சர்மா எடுத்துள்ள புள்ளி 1252, அவரின் ஒரு புள்ளிக்கு செலவளிக்கப்பட்ட தொகை 1,19,808 ரூபாய். இதேபோல, பந்துவீச்சாளர்களில் டெல்லி அணியில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹர்சால் படேல் 2 கோடிக்கு எடுக்கப்பட்டு 830 புள்ளிகள் எடுத்துள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 860 ரூபாயை அணி செலவளித்துள்ளது. 

    இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய எல்லா வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
    ×