search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் கோவில் விழாவிற்கு அழைப்பு விடுத்தும் தோனி, கோலி பங்கேற்காதது ஏன்?
    X

    ராமர் கோவில் விழாவிற்கு அழைப்பு விடுத்தும் தோனி, கோலி பங்கேற்காதது ஏன்?

    • பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
    • ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.

    விளையாட்டு வீரர்களான மகிந்திரசிங் தோனி, விராட் கோலி, அஷ்வின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    விராட் கோலி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் பிரதிஷ்டை விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், விழாவிற்கு தோனியும் வரவில்லை.. விராட் கோலியும் வரவில்லை.

    இருவரும் விழாவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், ரசிகர்கள் காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் உள்ளனர்.

    Next Story
    ×