search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YSR Congress"

    • சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.
    • சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார்.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் குமார் ரெட்டி கூறியதாவது:-

    கடப்பா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளாவுக்கு சந்திரபாபு நாயுடு ரூ.60 கோடி வழங்கி உள்ளார்.

    சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.

    சந்திரபாபு நாயுடுவின் நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    அவரது ஏற்பாட்டின் பேரிலேயே சர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

    சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார். கடப்பா மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சர்மிளாவிற்கு பணம் கொடுத்து போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    • தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
    • மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி-பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    தற்போது ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் பல்நாடு மாவட்டம், நரச ராவ் பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சதல வாடா அரவிந்த் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அப்போது 2 கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 கட்சியினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    மேலும் காயமடைந்தவர்களை மீட்டு நரசராவ் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன.
    • பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என தேர்தல் பிரசார வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார்.

    அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன. பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் வழங்கப்படுவதால் பரிசு பொருட்கள் குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரகாசம் மாவட்டம், கனிகிரி நகராட்சி மண்டலத்தில் தன்னார்வலராக 500 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று தன்னார்வலர்கள் 500 பேரையும் பொது இடத்திற்கு வரவழைத்தனர்.

    தன்னார்வலர்களுக்கு பரிசு பை ஒன்று வழங்கினர். ஜெகன்மோகன் ரெட்டி உருவபடம் பொறிக்கப்பட்ட அந்த பையில் ரூ.5 ஆயிரம் பணம், ஹாட் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் மற்றும் டின்னர் செட் உள்ளிட்டவை இருந்தன.

    திடீர் அதிர்ஷ்டமாக பணத்துடன் பரிசு பொருட்கள் கிடைத்ததால் தன்னார்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பையை பெற்றுச் சென்றனர்.

    இதே போல் மற்ற கட்சியினரும் வேட்பாளர்களை வெகுவாக கவரும் வகையில் என்னென்ன பரிசு பொருட்களை வழங்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆந்திராவில் உள்ள வாக்காளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன்.
    • எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி. யாக இருப்பவர் ரகு ராமகிருஷ்ண ராஜி. இவர் தனது எம்.பி. பதிவையே ராஜினாமா செய்து முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார்.

    நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போன்று பல்வேறு முயற்சிகளை செய்தீர்கள். அந்த முயற்சிகள் எதுவும் உங்களுக்கு பயன் தரவில்லை. என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நர்சாபுரம் தொகுதிக்காகவும், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் போற்றத்தக்க நேர்மையான செயல்களை செய்து இருக்கிறேன்.

    கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன். இவ்வாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பி.க்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்பதி ராயுடு கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.
    • கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமராவதி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு. 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனுடன் அவர் ஓய்வுபெற்றார்.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடனேயே அம்பதிராயுடு ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைய உள்ளார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.

    இந்தநிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

    • 39 கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் 363 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன.
    • பிஆர்எஸ் கட்சி சுமார் 90 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    2022-23-ல் பா.ஜனதா மட்டும் தேர்தல் நன்கொடையாக 250 கோடி ரூபாய் பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற நன்கொடைகளில் பா.ஜனதா மட்டும் 70 சதவீதம் பெற்றுள்ளது.

    39 கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் 363 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன.

    தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சி மொத்த நன்கொடை தொகையில் 25 சதவீதம் நன்கொடை பெற்றுள்ளது. சுமார் 90 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் 17.40 கோடி ரூபாய் பெற்றுள்ளன.

    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல்.
    • ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-இல் தன்னை இணைத்து கொண்டார்.

    ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி மற்றும் ராஜம்பேட்ட மக்களவை உறுப்பினர் பி. மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

     


    இது தொடர்பான அறிவிப்பை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கட்சியில் இணைந்த அம்பதி ராயுடுவை வரவேற்கும் விதமாக ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஐ.பி.எல். தொடரில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பல்வேறு மாநிலங்களில் கிரிக்கெட் சங்கங்களிலும் விளையாடி இருக்கிறார்.

    • டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.
    • பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் 'மாற்றி யோசி' என வித்தியாசமாக தசரா பண்டிகை கொண்டாடி உள்ளனர்.

    விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான டொட்டி பாபு ஆனந்த். இவர் தெற்கு மண்டல் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி வார்டு 31-ல் தசரா பண்டிகையை கொண்டாடினர்.

    அப்போது டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.

    பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார். அவர் தெருவில் நின்று கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் கூவி கூவி அழைத்து உயிருள்ள கோழி மற்றும் குவாட்டர் சரக்கை கைகளில் திணித்து தசரா பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த கோழி, மது விவகாரம் ஆந்திரா அரசியலில் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.

    • ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடிகை ரோஜா முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

    செம்பருத்தி படத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை.

    இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

    ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.

    ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வரவேண்டும் என்றார்.

    இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.
    • 2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இவர் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்காக பல கட்டங்களாக தெலுங்கு தேசம் கட்சியினரிடம் ரூ.1400 கோடியை பெற்றுள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சியினரிடம் பெற்ற பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.

    இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளது. அதனால்தான் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து தேர்தலில் சந்திக்க போவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

    2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்பதும் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போவதும் ஒரே சமயத்தில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
    • ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.

    திருப்பதி:

    ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று நடந்த விழாவில் பேசியதாவது:-

    எங்கள் ஆட்சியில் தொழிலதிபர்களுடன் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஆனால், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்ததாக தொழிலாளர்கள், டிரைவர்களுடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொண்டார்.

    சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மதுபான ஆலை தொழிலில் தான் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து பெரிய தொழிலதிபர்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய வரிசையில் நிற்கிறார்கள்.

    அதன் மூலம் ரூ.13 லட்சம் கோடி மதிப்பீலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இதனால், மாநிலம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

    ஆனால், சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி நடப்பதை பார்த்து அனைவரும் பாராட்டுகின்றனர். ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.

    அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 175 தொகுதிகளில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இதற்காக மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×