search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "molested"

    • மகாராஜன் நேற்று அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.
    • குளிக்க வந்த பெண்ணிடம் மகாராஜன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளை திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 46). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆற்றில் குளிக்க வந்தார். அந்த பெண்ணிடம் மகாராஜன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.

    • சோனாத்துக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சோனாத் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் சோனாத்(வயது 21). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை கடந்த 2 வருடமாக அமல்ராஜ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிறுமியை நேரில் பார்த்து பேசவேண்டும் என்று கூறி அமல்ராஜ் அவரை நேரில் அழைத்துள்ளார். அதனை நம்பிய சிறுமி ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சோனாத், ஆசை வார்த்தை கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சோனாத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சோனாத்திடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    மேல்மலையனூர் அருகே 3-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம்வகுப்பு படித்து வருகிறாள்.

    அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் டியூசன் சென்டர் நடத்தி வந்தனர். அந்த டியூசன் சென்டரில் 3-ம் வகுப்பு மாணவி டியூசன் படித்து வந்தாள். சம்பவத்தன்று அந்த மாணவி டியூசன் சென்றாள். டியூசன் முடிந்து அவள் வீட்டுக்கு வந்தாள்.

    வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் கதவை பூட்டிக்கொண்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றுவிட்டார். அந்த சிறுமி வீட்டுக்கு வந்த தனது பெற்றோரிடம் அழுதுகொண்டு நடந்த விவரத்தை கூறினாள். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மாணவி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அவலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மும்பை நட்சத்திர ஓட்டலில் கனடா நாட்டை சேர்ந்த 29 வயது பெண்ணை மானபங்கம் செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #CanadianWomen #Molested #Mumbai #5StarHotel
    மும்பை:

    கனடா நாட்டை சேர்ந்த 29 வயது பெண் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் அடிக்கடி மும்பை வருவது வழக்கம். அவர் ஜூகுவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். இதன்படி கடந்த 3-ந் தேதி மும்பை வந்திருந்த அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.

    சம்பவத்தன்று அந்த பெண் தனது அறையில் இருந்தபோது, ஓட்டல் ஊழியர் சுமித் ராவ் என்பவர் நேற்று ஒரு பரிசு பொருளை கொடுத்தார். ஏற்கனவே சுமித் ராவ் தனக்கு அறிமுகமானவர் என்பதால் அவர் கொடுத்த பரிசு பொருளை வாங்கிக் கொண்டார். இந்த நிலையில், சுமித் ராவ் அந்த பெண்ணுடன் செல்பி எடுத்து உள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் அந்த பெண்ணை மானபங்கம் செய்து உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை கடுமையாக திட்டி அனுப்பினார். மேலும் இதுபற்றி சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் சுமித் ராவை கைது செய்தனர். #CanadianWomen #Molested #Mumbai #5StarHotel 
    பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. #Students #Harassment
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.

    இவர்களில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.

    இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஒருநாள் 13 வயது மாணவி பலகாரம் வாங்குவதற்காக இட்லி கடைக்கு சென்றபோது இட்லி கடை உரிமையாளரான செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி (வயது 40) தனது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் (24) உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது லீலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி, ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தாள். அதன்பிறகு ஆனந்தராஜ் பலமுறை மிரட்டி அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, தனது நண்பர்களான திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (28), மதிவாணன் (23) ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கினான்.

    இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி தனலட்சுமியிடம் கூறி கதறி அழுதார். பின்னர் தனலட்சுமி மிரட்டியதால் தனது 14 வயது தோழியையும் தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அந்த மாணவியும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையானாள்.

    பின்னர் தனலட்சுமி மாணவிகள் இருவரையும் விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினாள்.

    அதன்பிறகு கலா இருவரையும் திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அங்கு அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார்.



    இதேபோல் கலாவும், தனலட்சுமியும், சக புரோக்கர்களும் இரு மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று லாட்ஜிலும், வாடகை வீடுகளிலும் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.

    கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தனர்.

    இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. சதீஷ்குமார் (28), அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் இடையாக்குறிச்சியை சேர்ந்தவர்.

    2. தமிழரசி (27), சதீஷ்குமாரின் மனைவி.

    3. கலா (48), விருத்தாசலம் நாச்சியார்பேட்டை.

    4. தனலட்சுமி, திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி.

    5. மதபோதகர் அருள்தாஸ்

    6. ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி

    7. பாத்திமா (35), வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி.

    8. மகா என்ற மகாலட்சுமி (20) பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி.

    9. ராதா என்ற கிரிஜா (35), நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை.

    10. ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.

    11. கவிதா என்ற ராஜலட்சுமி (34), வடலூர் ஆபத்தராணபுரத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவரின் மனைவி.

    12. அன்பழகன் (28), சேலம் அயோத்தியாபட்டணம்.

    13. அமுதா (28), அன்பழகனின் மனைவி.

    14. மோகன் என்ற மோகன்ராஜ் (28), திட்டக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்.

    15. மதிவாணன் (23), திட்டக்குடி.

    16. அன்பு என்ற செல்வராஜ், விருத்தாசலம்.

    17. டவர் என்ற ஆனந்தராஜ், திருக்கண்டேஸ்வரம்.

    18. பாலசுப்பிரமணியன் (42), விருத்தாசலம் புதுப்பேட்டை பாரதிநகர்.

    19. ராதா என்ற ராதிகா (30) பண்ருட்டி செக்கு மேட்டுத்தெருவைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி.

    மேற்கண்ட 19 பேர் மீதும் ‘போக்சோ’ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4-7-2016 அன்றைய தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் கடலூர் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் கோர்ட்டில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள். மேலும் சிறைச்சாலையில் நடந்த அடையாள அணி வகுப்பிலும் இரு மாணவிகளும் 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி மேல்படிப்பு படிக்கிறார்.

    எனவே இரு மாணவிகளுக்கும் அரசு சார்பில் இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசு வக்கீல் க.செல்வபிரியா கடலூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கஸ்வேரன் இரு மாணவிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 17 பேரும் நேற்று கடலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நீதிபதி லிங்கேஸ்வரன் மாலை 4 மணி அளவில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமி என்பவர் சதீஷ்குமாரால் பாதிக்கப்பட்டவர் என்பதால் மகாலட்சுமியை மட்டும் விடுதலை செய்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். மதபோதகர் அருள்தாஸ் உள்பட மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார். #Students #Harassment
    கும்பகோணத்தில் வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. #GoondasAct
    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி வங்கி பயிற்சி பணிக்காக மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையம் வந்தார்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே வந்த ஒரு ஆட்டோவில் இளம்பெண் ஏறி, தான் செல்ல வேண்டிய ஓட்டலில் இறங்கி விடுமாறு கூறினார்.

    ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண் சொன்ன முகவரிக்கு செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டி சென்றார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டதால் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

    நள்ளிரவில் தனியாக ரோட்டில் நடந்து சென்ற அந்த இளம்பெண்ணை 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த் (21), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (19) ஆகிய 4 பேர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த், தினேஷ்குமார், அன்பரசன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 வாலிபர்களிடம் அதன் நகலை போலீசார் வழங்கினர். #GoondasAct
    அரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலியானது தொடர்பான வழக்கை விசாரித்த கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மாற்றப்பட்டார். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

    இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களை தப்பவிட்டதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் மாணவி கற்பழிக்கப்பட்டதை வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த மாணவியின் பெற்றோரை போலீசார் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    போலீசாரை கண்டித்து சிட்லிங் கிராம மக்கள் கடந்த 2 நாட்களாக மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக 24 கிராம மக்கள் திரண்டனர். இதனால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மாணவியின் பிணத்தையும் வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி சிட்லிங் மலை கிராமத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடன்பாடு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் களை 48 மணி நேரத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதேபோல சிட்லிங் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், வெளிமாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும். வெளிமாவட்ட டாக்டர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் மலைவாழ் மக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் தண்டர்சீப் என்பவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டார்.

    இந்த நிலையில் பா.ம.க. தரப்பில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்கள் செல்வகுமார், பராசக்தி ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் நேற்று மாலையும், இன்று காலையும் மாணவியின் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

    பா.ம.க.வினர் குறிப்பிட்ட சென்னை டாக்டர் செல்வகுமார் தற்போது மாநாட்டிற்காக வெளியூர் சென்று உள்ளார். அவர் நாளை தான் ஊருக்கு திரும்புவார். அவர் வந்த பிறகுதான் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிகிறது. என்றாலும் இன்றே பிரேத பரிசோதனை நடத்தி மாணவியின் உடலை ஒப்படைத்து பதட்டத்தை தணிக்க வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படுமா என்பது தெரியவில்லை.

    மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஏற்காட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    மேலும் தலைமறைவாக உள்ள ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிட்லிங் கிராமத்தில் இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி வழக்கை கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் விசாரித்து வந்தார். இன்று அதிரடியாக அவர் மாற்றப்பட்டார். விசாரணை அதிகாரியாக அரூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். அவரை சஸ்பெண்டு செய்யவேண்டும் என்றும் விசாரணை அதிகாரியாக அவர் தொடரக்கூடாது என்றும் கிராம மக்கள் கூறி இருந்தனர்.

    மேலும் குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களை தப்பவிட்டு அவர்களிடம் பணம் வாங்கியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மாற்றப்பட்டார். கோட்டப்பட்டி போலீசார் ஏற்கனவே மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கை கற்பழிப்பு என்று பதிவு செய்யாமல் பாலியல் பலாத்கார முயற்சி என்று பதிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் நடந்த அன்று புகார் கொடுத்ததை ஏற்காமல் மறுநாள் தாமதமாக வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் தான் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கிராம மக்கள் கோபமாக இருந்தனர். இதனால் கிராம மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு உள்ளார்.

    அடுத்தகட்டமாக போலீசாரின் அத்துமீறல் குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியகோடி விசாரணை நடத்தி வருகிறார். அவர் விசாரணை நடத்தியபிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #DharmapuriGirlStudent #GirlMolested
    சென்னை தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று சிறை வைத்து கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சாமியார் சதுர்வேதியை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #Chaturvedi
    சென்னை:

    சாமியார் பிரேமானந்தா போல, சென்னையில் தொழில் அதிபரின் மனைவி- மகளையும் வீட்டில் சிறை வைத்து, பின்னர் ஆந்திராவுக்கு கடத்தி சென்று கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சாமியார் சதுர்வேதி.

    இவர் சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார். முதுகலை பட்டதாரியான இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவார். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி வந்தார்.

    அரிசியை வெண்பொங்கலாக மாற்றி காட்டி, பல்வேறு சித்து விளையாட்டுகளை இவர் செய்து வந்தார். இவருக்கு ஏராளமான பெண் பக்தர்கள் உண்டு.

    சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தொழில் ரீதியாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க சாமியார் சதுர்வேதியை நாடினார். தொழில்அதிபரின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி அவரது வீட்டிற்கு சென்ற சாமியார் சதுர்வேதி பல்வேறு பூஜைகளை செய்தார்.

    அப்போது தொழில் அதிபரின் மனைவியும், 16 வயது மகளும் சாமியாருக்கு பக்தர்கள் ஆனார்கள். பிரச்சினையை தீர்ப்பதாக கூறி தொழில் அதிபரின் வீட்டிற்குள் புகுந்த சாமியார் சதுர்வேதி, தொழில் அதிபரின் வீட்டின் கீழ்தளத்தை நாளடைவில் அபகரித்துக்கொண்டார்.

    வீட்டை அபகரித்ததோடு நிற்காமல், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் தனக்கு வசியப்படுத்திக் கொண்டார். மேலும் அவர், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    தனது அறைக்குள்ளேயே அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து, விசேஷ பூஜை என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதை தெரிந்துகொண்ட தொழில் அதிபர், சாமியார் சதுர்வேதியை தனது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினார். வீட்டை காலி செய்ய மறுத்த சாமியார் சதுர்வேதி தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தொழில்அதிபர் தனது மனைவியையும், மகளையும் மீட்டுத்தரும்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    கற்பழிப்பு, கடத்தல், சிறை வைத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 18 சட்டப்பிரிவுகளின் கீழ் சாமியார் சதுர்வேதி மீது 2004-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 3 பேர் கைது ஆனார்கள். தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் அபகரித்தது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சதுர்வேதி பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. சாமியார் சதுர்வேதியிடம் இருந்து தொழில்அதிபரின் மனைவியும், மகளும் மீட்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் சாமியார் சதுர்வேதி மீதும், அவருடன் கைதானவர்கள் மீதும் சென்னை மகளிர் கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    ஆனால் ஜாமீனில் வெளிவந்த சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. ஆனால் போலீசாரால் சாமியார் சதுர்வேதி எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் மகளிர் கோர்ட்டு சாமியார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கடந்த அக்டோபர் 9-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது. அந்த காலக்கெடுவும் முடிந்துவிட்டது.

    சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணையை சந்திக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை தேடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்தனர். தற்போது அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடாமல் இருக்க விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  #Chaturvedi
    புதுக்கோட்டை அருகே 3 வயது குழந்தை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகாயி. இவர்களது மகள் ஷாலினி (வயது 3). நேற்று மாலை இவள், விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஷாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷாலினியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் மர்ம நபர்கள் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. நேற்றிரவு சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நைசாக பேச்சு கொடுத்து, அவளை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் விசாரணை முடிவில் சிறுமி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    சிறுமியின் பெரியப்பா மகளுக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பாரை பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் சதீஷ் (20). இவருக்கும், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டது.

    அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். பின்னர் மாணவியை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அதை செல்போன் மூலம் மாணவிக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ பதிவை வாட்ஸ்-அப் மூலம் தங்களது நண்பர்களுக்கு சதீஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்-அப் வீடியோ அந்தபகுதிகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு பரவியது. இந்த நிலையில் வாட்ஸ்-அப் வீடியோ பற்றிய தகவல் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரனுக்கு மாணவியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்து விசாரித்தார். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் ஜெயந்தி ரவிச்சந்திரன் புகார் செய்தார். இதையொட்டி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சதீஷ் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து சதீஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் சிறையில் சதீஷ் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பணம் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த பெண், கள்ளக்காதலன் மயக்க மருத்து கொடுத்து கற்பழித்ததாக மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
    குமாரபாளையம்:

    கோவை பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சேகர். இவரது மனைவி பார்வதி. இவர்களிடம் குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார்.

    அப்போது பார்வதிக்கும், கார் டிரைவர் ஈஸ்வரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சேகர் மனைவியிடம் தகராறு செய்து பிரிந்து சென்றுவிட்டார்.

    இதனால் பார்வதி கோவையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சடையம்பாளையம் காந்தி நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கும் இருவரின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    அப்போது பார்வதியிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பணத்தை ஈஸ்வரன் வாங்கினார். பின்னர் அவர் வீட்டுக்கு வராததால் பார்வதி பணத்தை திருப்பி கேட்டார். அவர் தர மறுத்ததால் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பார்வதி குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு தான் கொடுத்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த போலீசார் அவர் மேல் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.


    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பார்வதியிடம், ஈரோடு 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு, மரண வாக்குமூலம் பெற்றார்.

    ஈஸ்வரன், எங்கள் வீட்டுக்கு காரில் மாற்று டிரைவர் பணிக்கு வந்த போது அறிமுகம் ஆனார். முதலில் சகஜமாக பழகிய அவர், ஒரு கட்டத்தில் மயக்க மருந்தை கொடுத்து என்னை கற்பழித்து விட்டார். பின்னர் அவர் என்னுடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி பணம் பறித்தார்.

    இதனால் எனது கணவர் பிரிந்து சென்ற நிலையில், எனது சொத்துகளை விற்க வைத்து அதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை ஈஸ்வரன் வாங்கி கொண்டார். அதை கேட்ட போது அவர் தரமறுத்து விட்டதுடன், என்னுடன் பேச மறுத்து விட்டார். இதனால் இழந்த எனது பணத்தை திரும்ப பெறுவதற்காக குமாரபாளையம் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் வழக்கு மட்டும் பதிவு செய்து விட்டு விசாரணை நடத்தவில்லை.

    அதே நேரத்தில் ஈஸ்வரனும், அவருடைய மனைவி மலர்க்கொடி, ஈஸ்வரனின் அண்ணன் ஜம்பு மற்றும் நண்பர்கள் 2 பேர் என்னை எவ்வாறு புகார் கொடுக்கலாம் என்று மிரட்டியதால் வேறு வழியின்றி நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். எனது இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

    இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஈஸ்வரன், அவருடைய மனைவி மலர்க்கொடி, ஈஸ்வரனின் அண்ணன் ஜம்பு மற்றும் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் ஈஸ்வரனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    போலீஸ் நிலையம் முன்பு பெண் குளித்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
    கூடுவாஞ்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 3 பேர் சேர்ந்து கற்பழித்த வழக்கில் கர்ப்பமாகிய சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரியை அடுத்த அருங்கால் கிராமத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பரமசிவம்(65) காரணை புதுச்சேரியை சேர்ந்த சங்கர்(45), சிதம்பரம்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    பரமசிவத்தின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு இரும்பு கூரை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் சங்கரும், சிதம்பரமும், வேலை பார்த்தனர். அப்போது அங்கு வந்த சிறுமியை பரமசிவம் மிரட்டி கற்பழித்து உள்ளார். இதனை பார்த்த சங்கரும், சிதம்பரமும் இது பற்றி வெளியில் சொல்லாமல் இருக்க தங்களது ஆசைக்கும் சிறுமியை இணங்க வைக்கும் படி கூறி உல்லாசமாக இருந்து இருக்கிறார்கள். கடந்த 3 மாதத்துக்கு மேலாக சிறுமிக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.

    தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    எனினும் சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் கர்ப்பத்தை கலைப்பதா? அல்லது வேறு எந்த முடிவு எடுப்பது என்று டாக்டர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே சிறுமியை கற்பழித்த பரமசிவம் உள்பட 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    ×