search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்- போக்சோவில் வாலிபர் கைது
    X

    ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்- போக்சோவில் வாலிபர் கைது

    • சோனாத்துக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சோனாத் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் சோனாத்(வயது 21). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை கடந்த 2 வருடமாக அமல்ராஜ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிறுமியை நேரில் பார்த்து பேசவேண்டும் என்று கூறி அமல்ராஜ் அவரை நேரில் அழைத்துள்ளார். அதனை நம்பிய சிறுமி ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சோனாத், ஆசை வார்த்தை கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சோனாத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சோனாத்திடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    Next Story
    ×