search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானபங்கம்"

    • குணா அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது.
    • 4 பேர் திடீரென்று அந்த பெண்ணை தாக்கி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண். சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்ேபாது அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த கடலூர் ராசாப்பேட்டை பகுதியை சேர்ந்த குணா அந்த பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டு உள்ளார். அதற்கு அந்த பெண் தர மறுத்துள்ளார்.இதனால் குணா அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இதுகுறித்து அவரது தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதை கேட்ட அந்த பெண்ணின் தந்தை மகளுடன் சேர்ந்து குணாவிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது குணா அவருடைய நண்பர் திரு என்பவரது வீட்டில் இருந்தார். உடனே வீட்டிலிருந்த திரு உட்பட 4 பேர் திடீரென்று அந்த பெண்ணை தாக்கி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அப்பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசார் திரு, குணா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
    • அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    கடலூர்:

    :கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூர்யா, அவரது மனைவி அருளரசி மற்றும் உறவினர் செல்வகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கடலூர் அடுத்த கண்ணாரப்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வழி மறித்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.    மேலும் அருளரசியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா மற்றும் அவரது உறவினர் செல்வகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரண மாக அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அருளரசி கொடுத்த புகாரின் பேரில் சுகுமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பரத் (28) குமரன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூர் பகுதியில் செம்மண் குவாரிக்கு லை அமைப்பதற்காக தனியார் கம்பெனி ஊழியர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூங்கொடி சம்பந்தப்பட்ட ஊழியரிடம் சென்று கேட்டார். அப்போது பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் தனியார் கம்பெனி மேலாளர் டெல்லி பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இளையராஜாவிடம் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் குடிபோதையில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மகளை காதலிப்பதாக கூறி தாயை மானபங்கம்படுத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (வயது 42). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலர் வீட்டுக்கு நேரில் சென்று அவரது மகளை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறினார். பின்னர் மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மலர் கொடுத்த புகாரின் பேரில் சக்தி ஆகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசில் புகார்
    • 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவரது மனைவி கிஜிலா (43). இவர் அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி இவர் வேலை முடிந்து ஆற்றின்கரை பகுதியில் நடந்து செல்லும்போது கல்லடிவிளையை சேர்ந்த வினு, கோபகுமார் உள்பட 5 பேர் கிஜிலாவை வழிமறித்து தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் திட்டினார்கள்.

    பின்னர் அவரை கீழே தள்ளி தாக்கி னர். மேலும் அவரை மானபங்கப்படுத்த முயற்சித்தனர்.

    இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×