search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullying"

    • முசிறியில் இளைஞர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • முசிறி போலீசார் நடவடிக்கை

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பாலகுமார் மகன் ராகுல் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அமர்ந்து இருந்தபோது, உமையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்த கௌரிதாசன் (28), புதுராஜா (33) ஆகிய இருவரும் குடிபோதையில் ராகுலை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதனை கண்டி ராகுலின் அண்ணன் ராஜேஷ் தடுத்துள்ளார். அவரை கெளரிதாசன் மற்றும் புதுராஜா இருவரும் சேர்ந்து குவாட்டர் பாட்டிலால் தாக்கியும், மேலும் உடைந்த பாட்டிலில் ராகுலின் உடலில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராகுல் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கௌரி ராஜன் மற்றும் புதுராஜா கைது செய்யப்பட்டனர்.

    • அரியலூர் ஊராட்சி குழு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர்.எம்.ஏ. பட்டதாரி, கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து அ.தி.மு.க.வில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார், பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சொந்தஊரான பொய்யாதநல்லூரில் கோவில் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.அரியலூர் ரயில்வே ஸ்டேசன் செல்லும் வழியில் சொந்தமான லாட்ஜில் அவர் இருந்துள்ளார். அப்போது 3 பேர் அங்கு வந்துள்ளனர். சந்திரசேகரையும் அவரது டிரைவர்ராக்கியையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சந்திரசேகர்கொடுத்த புகாரின் பேரில் செல்லக்கண்ணு, விக்கி என்கிற விக்னேஸ்வரன், சக்தி ஆகிய 3 பேர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதே போல செல்லக்கண்ணு என்பவர்கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகர், ராக்கி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து அரியலூர் போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலாயுதம்பாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்
    • பொதுமக்களை பார்த்ததும் தப்பி ஓட்டம் பிடித்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- மலைக்காவல்அய்யன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது55). இவரது மகன் பாலகுமரன் (28). இவர் நேற்று முன் தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3பேர் பாலக்குமரனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 நபர்களும் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் பாலகுமரனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாலகுமரன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது பால குமரனை பார்த்து உன்னை என்னைக்கு இருந்தாலும் கொல்லாமல் விடமாட்டோம் என்றுகூறி கொலை மிரட்டல் விடுத்து மூன்று பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு பாலகுமாரனை கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து பாலமுருகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கத்தியால் குத்திக் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று மர்மநபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
    • திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    மதுரை

    பெருங்குடி கணபதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முத்துராஜா (வயது 30). இவருடைய சகேகாதரர் அங்கு குமார் (32). இவர்கள் இருவரும் பெண்கள் தனியாக குளிக்கும் போதும் அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்த னமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தனர்.

    இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் விஷேசத்தில் அவர்கள் கலந்துகொண்டனனர்.அங்கு கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்தது.அவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அந்தப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரி டம் கூறினார். அவர்கள் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துராஜா, அங்கு குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் அவர்கள் பலபெண்களை வீடியோ படம் எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளி யானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கலை நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சோழங்குறிச்சி கிராமத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீஸ்காரர்கள் ராமலிங்கம், அருள்ஜோதி ஆகியோர் அங்கு சென்றனர்.பின்னர் கலை நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீஸ்காரர் அருள்ஜோதியை அதே ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 38) மற்றும் கீர்த்தி வாசன் (21) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கல்லை எடுத்து காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து உடையார்பாளையம் போலீசில் அருள்ஜோதி புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, கீர்த்திவாசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • திருச்சியில் காதலை துண்டித்த கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் காதலன் மிரட்டல் விடுத்தார்
    • தப்பி சென்ற காதலனுக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவிலை சேர்ந்தவர் தனஸ்ரீ (வயது 21). கல்லூரி மாணவியான இவரும், திருச்சி தில்லைநகர் வடவூரை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த மாணவி காதலை துண்டித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தனஸ்ரீ உறையூரில் அவர் படித்த கல்லூரிக்கு சென்று படிப்பு முடித்த சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு ஜெயந்தி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த காதலன் பாலமுருகன் என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.தனஸ்ரீ உறையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • திருச்சியில் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல சென்ற இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
    • கொலை மிரட்டர் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்

    திருச்சி, 

    திருவானைக்காவல் மணல்மேடு ஐந்தாம் பிரகாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா (வயது 27). கடந்த 26.10.2000ம் ஆண்டு சத்யாவின் தந்தை முருகனை திருவனைக்காவல் மேலகொண்டையம் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சச்சிதானந்தம் (வயது 25) என்பவர் கொலை செய்துவிட்டார்.இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சத்யா ஸ்ரீரங்கம் சன்னதி வீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது சச்சிதானந்தம் சத்யாவை தடுத்து நிறுத்தி கத்தியைச் காட்டி மிரட்டி தந்தை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.இது குறித்து சத்யா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியலூரில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
    • கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்கு, அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மகன் பிரேம்ராஜ் (32) என்பவர் வந்து தகராறு செய்துள்ளார். அதை தட்டிக்கேட்ட தம்பதியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது
    • போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா(வயது 36). இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அவர் வீட்டுக்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக அந்தப் பகுதியில் உள்ளவர்களை மிரட்டி சத்தம் போட்டு உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து, டவர் மீது ஏறி அவரிடம் சமாதானம் பேசி கீழே இறங்க செய்தனர். இதனால் நீண்ட நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • திருச்சி மணப்பாறையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
    • புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை

    மணப்பாறை, 

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நல்லாம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலராக கணபதி ராஜ் உள்ளார். இவரின் அலுவலகத்திற்கு வந்த வீ.பூசாரி பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் வீரசங்கர் என்பவர், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து உள்ளார். முனியப்பன் இறந்து விட்டதாக கூறி, வாரிசு சான்றிதழ் கொடுத்து வீரசங்கரின் அண்ணன் விண்ணப்பித்து உள்ளது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கணபதி ராஜ் எடுத்து கூறி உள்ளார். இதனை ஏற்க மறுத்த வீரசங்கர், கிராம நிர்வாக அலுவலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் கண்டிக்கவே வீரசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கணபதிராஜ் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இலையூர் கிராமத்தில் மது குடிப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் பணத்தை பறித்து சென்றார்
    • குடிப்பதற்காக பணம் பறித்து சென்ற வாலிபர் கைது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம் சாலையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவர் அவரது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது வாகனத்தில் வந்த ஒரு வாலிபர், மது குடிப்பதற்கு பணம் கேட்டு கத்தியை காட்டி சூரியபிரகாஷை மிரட்டியுள்ளார். மேலும் பணம் தர மறுத்த சூரியபிரகாஷை தாக்கி, அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து சென்றார். இதனால் சூரியபிரகாஷ் சத்தம் போட்டார். அதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த பஜருல்லா மகன் முகமது யாசிக் (20) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆபாச படங்களை வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு, மிரட்டல்
    • ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த முன்னாள் காதலனுக்கு, போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 22). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த சில ஆண்டுகளாக தியாகராஜன் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவருடன் பேசுவதை, பழகுவதை நிறுத்திக் கொண்டார்.

    இந்த நிலையில் பிருந்தாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட தியாகராஜன் நீ இப்போது வரவில்லை என்றால் உன்னுடைய ஆபாச போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். ரூ. 5 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிருந்தா பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை தேடி வருகிறார்.

    ×