search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் போலீஸ்
    X

    பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் போலீஸ்

    • திருச்சி பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் பெண் போலீஸ் மீது வழக்கு
    • இரு குடும்பத்தினரிடையே ஏற்கனவே குடும்பதகராறு இருந்து வந்துள்ளது

    ராம்ஜிநகர்,

    திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது 40). இவர் 58-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார். இவரது மனைவி தேவிகா (39). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் குழந்தைவேல். இவரது மனைவி அன்பு மலர். இவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.இந்த இரண்டு குடும்பத்திற்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைவேல், கிருஷ்ணராவ் வீட்டு படுக்கையறையை நோட்டமிடும்படி தனது வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்தினாராம். தொடர்ந்து கிருஷ்ணராவின் காம்பவுண்ட் சுவரை குழந்தைவேல் இடித்து இருக்கிறார். இதனை பார்த்த கிருஷ்ணராவும், தேவிகாவும் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குழந்தைவேல் - அன்பு மலர் தம்பதி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தேவிகா மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் குழந்தைவேல் மற்றும் இவரது மனைவி அன்பு மலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

    Next Story
    ×