search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
    X

    கடலூர் அருகே பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

    • ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார்.
    • ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தொட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 28). புவனகிரி சூர்யா மங்களம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (27). இவர்கள் 2 பேரும் கடலூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார். இதனால் சுஜாதா ஜெயக்குமாரிடம் போனில் பேச வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×