search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
    X

    இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி

    • திருச்சியில் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல சென்ற இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
    • கொலை மிரட்டர் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்

    திருச்சி,

    திருவானைக்காவல் மணல்மேடு ஐந்தாம் பிரகாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா (வயது 27). கடந்த 26.10.2000ம் ஆண்டு சத்யாவின் தந்தை முருகனை திருவனைக்காவல் மேலகொண்டையம் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சச்சிதானந்தம் (வயது 25) என்பவர் கொலை செய்துவிட்டார்.இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சத்யா ஸ்ரீரங்கம் சன்னதி வீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது சச்சிதானந்தம் சத்யாவை தடுத்து நிறுத்தி கத்தியைச் காட்டி மிரட்டி தந்தை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.இது குறித்து சத்யா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×