என் மலர்
நீங்கள் தேடியது "Manapangam"
- குணா அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது.
- 4 பேர் திடீரென்று அந்த பெண்ணை தாக்கி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண். சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்ேபாது அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த கடலூர் ராசாப்பேட்டை பகுதியை சேர்ந்த குணா அந்த பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டு உள்ளார். அதற்கு அந்த பெண் தர மறுத்துள்ளார்.இதனால் குணா அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இதுகுறித்து அவரது தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதை கேட்ட அந்த பெண்ணின் தந்தை மகளுடன் சேர்ந்து குணாவிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது குணா அவருடைய நண்பர் திரு என்பவரது வீட்டில் இருந்தார். உடனே வீட்டிலிருந்த திரு உட்பட 4 பேர் திடீரென்று அந்த பெண்ணை தாக்கி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அப்பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசார் திரு, குணா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






