search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலன்"

    • அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது47). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமாறன் தான் பழகி வந்த பெண்ணின் மூத்த மகளான கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். இதனை மாணவி கண்டித்து தனது தாயிடம் முறையிட்டார்.

    இந்நிலையில் மணிமாறன் 2-வது முறையாக அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    • சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம், பாளையக்கார தெருவை சேர்ந்தவர் சசிகலா (வயது33). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சசிகலா உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து காயமும் இருந்தது.

    உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். விசாரணையில் கள்ளக்காதலில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக முத்து கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சசிகலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து இருந்தபோது எனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் ரூ.2 ½ லட்சம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் சசிகலா அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றபோது என்னை தாக்கி தள்ளிவிட்டார். கோபம் அடைந்த நான் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தும், சரமாரியாக குத்தியும் விட்டு தப்பி ஓடிவிட்டேன். இதில் பலத்த காயம் அடைந்த சசிகலா இறந்து போனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சரவணம்பட்டி:

    கோவை சரவணம்பட்டியில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சுகிர்தா (35) என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கால் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். சுகிர்தாவும் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து சுகிர்தா விடுதிக்கு வந்து மீண்டும் பணியில் சேர்ந்து கொண்டார். அப்போது உரிமையாளர் அவரிடம் முந்தைய வரவு, செலவு கணக்குகளை கூறுமாறு தெரிவித்தார். அதற்கு அவர் எதுவும் கூறவில்லை.

    பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே சுகிர்தா, தனது சித்தி இறந்துவிட்டதாகவும், ஊருக்கு சென்று வருவதாகவும் கூறி விட்டு சென்றார்.

    தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹாஸ்டல் உரிமையாளர் ஒரு விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்வதற்காக திறந்து பார்த்த போது பெரும்பாலான அறைகள் காலியாக இருந்துள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் தங்கி இருந்த பெண்கள் விட்டுச் சென்ற உடைமைகள் அனைத்தும் காணாமல் போய் இருந்தது. சுகிர்தாவை, உரிமையாளர் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பை துண்டித்து வந்துள்ளார். சில நாட்கள் கழித்து சுகிர்தாவின் கள்ளக்காதலன் பிரபு என்பவர் விடுதி உரிமையாளருக்கு செல்போன் மூலம் அழைத்து விடுதியின் வரவு செலவு கணக்குகளை கேட்டால் ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

    இதை தொடர்ந்து விடுதி உரிமையாளர் தங்கியிருந்த பெண்களின் விண்ணப்ப படிவங்களை எடுத்து பார்த்த போது அதில் இருந்த செல்போன் எண்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விடுதி உரிமையாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஏராளமான பெண்களை தங்க வைத்து கட்டணம் அதிகம் பெற்றுள்ளதும், பெற்ற தொகைக்கு ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரூ.31 லட்சம் மோசடி செய்யப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிலிருந்து காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தெரிய வந்தது.

    தொடர்ந்து விடுதி உரிமையாளர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலர்களான பிரபு, ஜெயகுமார் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் ஜெயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு சென்று பதுங்கி இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட சுகிர்தா குறித்த திருக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுகிர்தாவுக்கு ஏற்கனவே நெல்லையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகிர்தா தனது கணவருடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்தார்.

    அப்போது அவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்த பிரபுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தனது கணவர் வெளியில் செல்லும் நேரங்களில் சுகிர்தா, பிரபுவை அழைத்து தனிமையில் ஜாலியாக இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து நகை மற்றும் பணத்துடன் வெளியேறினர். அப்போது சுகிர்தா தனது 5 வயது மகனையும் அழைத்து சென்றார்.

    இதை பார்த்த கள்ளக்காதலன் பிரபு மகனை எதற்கு அழைத்து வந்தாய் என கேட்கவே மகனின் சட்டை பாக்கெட்டில் கணவரின் பெயர் மற்றும் முகவரியை எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சுகிர்தா தலைமறைவானார்.

    கள்ளக்காதலனுடன் வெளியேறிய சுகிர்தா பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றிவிட்டு மீண்டும் கோவை சரவணம்பட்டி பகுதிக்கு வந்து விடுதியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு ஜெயக்குமாருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுகிர்தா பணிபுரிந்த மகளிர் விடுதியில் ரூ.31 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு கள்ளக்காதலர்களுடன் தலைமறைவானதும் தெரியவந்தது. தற்போது போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    • மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், நரசராவ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்பி (வயது40). இவர் தனது கணவனை இழந்த நிலையில் மகன் அப்பாஸ்(20) என்பவருடன் வசித்து வந்தார்.

    ஜான்பிக்கும், அதேபகுதியை சேர்ந்த பாஜி(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஜான்பியின் மகன் அப்பாசுக்கு தெரியவந்தது.

    இதனையடுத்து அப்பாஸ் தனது தாய் ஜான்பி மற்றும் பாஜியை கண்டித்துள்ளார். அதன்டி ஜான்பி, பாஜியிடம் பழகுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாஜி, அதே பகுதியை சேர்ந்த அல்லாகசம் என்பவருடன் சேர்ந்து, அப்பாைசை திட்டமிட்டு கொலை செய்தனர். மகன் பிணத்தை பார்த்து கதறிய ஜான்பி கொலையாளிகளை, கொலை செய்து பழி தீர்ப்பேன் என சத்தியம் செய்து சபதம் எடுத்துள்ளார்.

    இந்த கொலை நிரூபிக்கப்பட்ட நிலையில், பாஜி மற்றும் அல்லாகசம் ஆகியோர் கைது செய்து, ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 6 மாத காலம் சிறை தண்டனைக்கு பிறகு 2 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

    இதில் பாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.

    ஜான்பி தனது உறவினர்கள் சிலரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, 2 பேரையும் கொலை செய்ய பல நாட்கள் திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜான்பி தனது உறவினர்களுடன் சேர்ந்து, அல்லாகசமை குத்தி கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான்பிக்கு, ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. 3 மாத காலம் ஜெயில் தண்டனை அனுபவித்தார். பிறகு, ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

    தலைமறைவாக இருந்த பாஜியை தேடி ஜான்பி அலைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜி, சொந்த ஊரான நரசராவ்பேட்டைக்கு வந்தார்.

    இந்த தகவல் அறிந்த ஜான்பி, தனது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து பாஜியையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாச போராட்டம் தோல்வி
    • தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நட்டாலம் இடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 29). இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அர்ஜுனன் (27) என்பவருடன் மோனிஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என கூறி விட்டு மோனிஷா கள்ளக்காதலனுடன் சுற்றி திரிந்துள்ளார்.

    இந்நிலையில் திடீரென 2 குழந்தைகளையும் அழைத்து சென்று தாயாரின் வீட்டில் விட்டுள்ளார். மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என தாயாரிடம் கூறிவிட்டு சென்ற மோனிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிஷாவின் தாயார் லதா தனது மகளை காணவில்லை என மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார், அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது கேரளாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், மோனிஷாவையும் அவருடன் இருந்த அர்ஜுனனையும் பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது லதா 2 பச்சிளம் குழந்தைகளையும், அழைத்து சென்று கண்ணீ ருடன் மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் மோனிஷா தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார். போலீசார் குழந்தைகளின் நிலை குறித்து யோசிக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் மோனிஷா வாழ்ந்தால் அர்ஜுனனுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக கூறியதை தொடர்ந்து, வேறு வழியின்றி கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்தனர். தாயாரை பார்த்ததும் குழந்தைகள் கதறி அழுதது. ஆனால் மோனிஷா கண்டுகொள்ளவே இல்லை. இச்சம்பவம் மார்த் தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
    • சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. எனவே அவருக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாணவியின் தாய்க்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (வயது35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதனையடுத்து சிறுமியின் தாய் தனது கணவரை பிரிந்தார். அவர் தனது மகள் மற்றும் மகனை தனது தாய் வீட்டில் விட்டார். பின்னர் அவர் வேட்டைக்காரன் புதூரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அப்போது சுரேஷ் அடிக்கடி அங்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது தாயின் கள்ளக்காதலன் அங்கு சென்றார்.

    அவர் கதவை சாத்தி தாழிட்டார். பின்னர் அவர் மாணவியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக்கினார். தொடர்ந்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக கூலித்தொழிலாளி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    தனது தாய் வேலை முடிந்து வந்ததும் நடந்த சம்பவங்களை மாணவி அவரது தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் 11-ம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு
    • குலசேகரம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே அண்ணாநகர், சானல்கரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு மனைவியும், 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

    தொழிலாளியின் மனைவி மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் பஸ்சில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.அப்போது ஆற்றூர்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அதன்பிறகு தனிமையில் வசித்து வந்தார். இதனால் தொழிலாளியின் மனைவியும், வாலிபரும் நெருங்கி பழகினர். அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்தனர். இதற்காக கணவருக்கு தெரியாமல் அருகில் உள்ளவர்களிடம் இருந்து சுமார் ரூ. 8 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி கள்ள காதலனுடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தார்.

    கடன்காரர்கள் இவரிடம் கடன் கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்தவுடன் கணவர் தலையிட்டு 4 லட்சம் பணத்தை கடன்காரர்களுக்கு திருப்பி கொடுத்தார்.கடந்த ஒரு வருடத்துக்கு முன் அந்த பெண் கணவர், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்றார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து கண்டுபிடித்து கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கணவர் வேலைக்கு சென்ற பிறகு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கள்ள காதலனுடன் மாயமானார்.கணவர் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த பார்த்த போது வீட்டில் மனைவி இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை உடனே அவர் குலசேகரம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தேடி வந்தனர். இவர்களின் செல்போன் நம்பரை வைத்து தேடிய போது நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் இருந்தனர். உடனே உள்ளுர் போலீசார் உதவியுடன் மீட்டு குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    அங்கு கணவருடன் செல்ல மாட்டேன், கள்ள காதலனுடன் தான் செல்வேன் என்று அந்த பெண் அடம் பிடித்தார். போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி பிறகும் அவரது முடிவு மாறவில்லை. அதன் பிறகு குழந்தைகளின் பாச போராட்டம் நடத்தியும் பலன் அளிக்கவில்லை

    அதன் பிறகு இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு அந்த பெண் கள்ள காதலுடன் காரில் ஏறி சென்றார்.

    இதனால் குலசேகரம் போலீஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×