என் மலர்
நீங்கள் தேடியது "archive"
- மருத்துவ கல்லூரி வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கண் பார்வை தெரியாத மீனா என்ற மூதாட்டி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
- மனநல சிகிச்சை, உணவு, உடை, சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல் அளித்து மீனாவின் முகவரியை கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்ப்பதே லட்சியம் ஆகும் என்றார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்படி திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கண் பார்வை தெரியாத மீனா (வயது 61) என்ற மூதாட்டி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
அவரை சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம், காவல்துறை, திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகம் ஒருங்கிணைப்புடன் இணைந்து மீட்டெடுத்து மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க ப்பட்டது.
இதையடுத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை அறிவுரை யின் பேரில் குழந்தைகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை, ஓ. எஸ் .சி. நிர்வாகி சுமிதா மற்றும் பணியாளர்கள், தலைமை காவலர்கள் மீனாட்சி, அகிலா, முதி யோர் உதவி மைய ரவி , மற்றும் காவலர்கள், திருத்து றைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் உரிய பாதுகாப்பிற்காகவும் தகுந்த மனநல சிகிச்சை கொடுத்து, மறுவாழ்வு அளிப்பதற்காகவும் சேர்த்தனர்.
நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக சமூக சேவகர் சுபாலட்சுமி, கோகிலா, சரவணன், செவிலியர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டதுடன் கண்பார்வை தெரியாத மூதாட்டியை வைத்து பராமரிப்பது மிகவும் சிரமம் .மனநல மருத்துவர் கொண்டு மனநல சிகிச்சை, உணவு, உடை, சுகாதாரம்," ஆற்றுப்படுத்துதல் அளித்து கொஞ்சம் கொஞ்சமாக அன்பாக அனைவரும் பேசி, பழகி மூதாட்டி மீனாவின் முகவரியை எப்படியாவது கண்டுபிடித்து அவரது குடும்பத்தினருடன் திருவா ரூர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சேர்த்து வைப்பதே எங்களது குறிக்கோளும் லட்சியம் ஆகும் என்றார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த அருங்கால் கிராமத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பரமசிவம்(65) காரணை புதுச்சேரியை சேர்ந்த சங்கர்(45), சிதம்பரம்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பரமசிவத்தின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு இரும்பு கூரை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் சங்கரும், சிதம்பரமும், வேலை பார்த்தனர். அப்போது அங்கு வந்த சிறுமியை பரமசிவம் மிரட்டி கற்பழித்து உள்ளார். இதனை பார்த்த சங்கரும், சிதம்பரமும் இது பற்றி வெளியில் சொல்லாமல் இருக்க தங்களது ஆசைக்கும் சிறுமியை இணங்க வைக்கும் படி கூறி உல்லாசமாக இருந்து இருக்கிறார்கள். கடந்த 3 மாதத்துக்கு மேலாக சிறுமிக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.
தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் கர்ப்பத்தை கலைப்பதா? அல்லது வேறு எந்த முடிவு எடுப்பது என்று டாக்டர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியை கற்பழித்த பரமசிவம் உள்பட 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் சூரமங்கலம், பாரதி தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி பிரியாதேவி (வயது 29). இவர் சமூக பாதுகாப்பு இயக்கம் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 3-ந்தேதி ஜங்சன் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுவனை மீட்டு ரெயில்வே போலீசார் இந்த காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவன் தனது பெயர் ரஞ்சித்(14) என்றும் தந்தை பெயர் ராமகிருஷ்ணன் என்றும் 5-ரோடு பகுதியில் வசிப்பதாக விசாரணையில் தெரிவித்தான்.
அந்த பகுதியில் போலீசார் சென்று விசாரித்தபோது, சிறுவன் கூறியது தவறான தகவல் என தெரியவந்தது. இதனிடையே காப்பகத்தின் பின்பக்க மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடி விட்டான். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறுவனை தேடி வருகிறார்கள்.