search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பகம்"

    • காப்பகத்தில் தங்கி உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது.
    • காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்தநிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த பெண் ஒருவருக்கு காப்பக உரிமையாளர் வீரமணி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்தார்.

    இந்த பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த புகாரில் உண்மை தன்மை இருப்பது உறுதியானது. இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவுப்படி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காப்பகத்தில் மேலும் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் காப்பகத்தில் தங்கி உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து வீரமணியை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காப்பகத்தை போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்பட்டு வந்ததால் காப்பகத்திற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    • மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்பதற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.
    • அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    பெற்றெடுத்தது முதல் குழந்தைகளை படிக்க வைத்து, ஆளாக்கி நல்ல பணியில் அமரச் செய்து திருமணமும் செய்து வைத்து தனது குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வந்த எத்தனையோ பெற்றோர் இன்று மகனிடமும், மருமகளிடமும் ஒரு ஊதியமில்லாத ஊழியராக வாழ்ந்து வருகின்றனர்.

    மனைவியின் சொல்லை கேட்டு அப்பா வெளியே போய் வரலாம் என்று கூட்டிக்கொண்டு போய் ரெயில் நிலையத்திலோ, கோவில் அருகிலோ நிற்க வைத்து விட்டு இதோ வருகிறேன் என்று சொல்லி சென்று விடுகின்றனர். இப்படி சென்றுவிட்ட தனது மகனை நினைத்து முதியோர்கள் அலைந்து திரிகின்றனர். அப்பா, அம்மா என்று பின்னாலேயே அலைந்த மகன் இன்று மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்ப தற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.

    ஆட்டை விற்று, மாட்டை விற்று, நகைகளை நிலங்களை பிள்ளைக்காக விற்று படிக்க வைத்து உயரச் செய்து எனது மகன் இப்படி இருக்கிறான், அப்படி இருக்கிறான் என்று கர்வம் கொண்டு பெருமையடையும் பெற்றோர்கள் பலர் தற்போது முதியோர் இல்லத்தில் உள்ளனர். உணவிலிருந்து உறக்கம் வரை குழந்தைகளுக்காகவே வாழ்பவர்கள் பெற்றோர்கள்.

    தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்மானத்தைகூட தூக்கி எறிபவர்கள்தான் பெற்றோர்கள். அப்படிப்பட்ட பெற்றோர் இன்று வீட்டிலிருந்து தூக்கி எறியப்படுகின்றனர்.

    அவ்வாறு அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    1 மாதத்திற்கு குறைந்தது 30 பேர் அனாதையாக விடப்பட்டு மீட்கப்பட்டு காப்பகத்தில் அரவணைக்கப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்படுவது விதவை பெண்கள்தான். கணவன் இருக்கும்வரை அவர் ஆதரவுடன் இருந்த பல பெண்கள் கணவன் இறந்த பின்னர் நிர்கதியாக நிற்பது அதிகமாகி வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த கமலேஷ் குமாரி (75), சமீரா அப்ரோஜ் (70), புஷ்பா (60), சுரேந்தர் சவுத்ரி (57), சவ்ஹான் (50) ஆகிய 5 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை கோட்ட சீனியர் கமாண்டர் முத்துக்கும் ரேசன் மற்றும் அதிகாரிகள் ரோகித்குமார், சைனி, போலீஸ் ஏட்டு பாண்டி தலைமையில் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு இவர்கள் முதியோர் காப்பகத்தில் விடப்பட்டுள்ளனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தவித்தவர்களில் எண்ணூரை சேர்ந்த 75 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை கமலேஷ் குமாரியும் ஒருவர். இவர் இரண்டு முதுகலை பட்டங்களை படித்தவர். 7 மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர். சென்னையில் உள்ள இவரது சொத்தை யாரோ ஏமாற்றி அபகரித்துவிட்டதாலும், உறவினர்கள் யாரும் இவரை கண்டு கொள்ளாததாலும் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்தார். அவர் மீட்கப்பட்டு ஒரு முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஊருக்கு சென்று வருவோம் என தந்தையையோ, தாயையோ ரெயிலில் கூட்டி வந்து ரெயில் நிலையங்களில் விட்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் பெண் ஒருவர் 3 நாட்களாக ரெயில் நிலையத்தில் ஒரு ஓரத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்து கொண்டிருப்பதை அறிந்து மீட்க சென்றோம்.

    எங்களை கண்டதும் கதறி அழுத மூதாட்டி ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் என் மகன்... அவனை ஒன்னும் செஞ்சிடாதீங்க என்று கெஞ்சி கேட்டு கதறினார்.

    அவரை சமாதானப்படுத்தி வாருங்கள், நாங்கள் அழைத்து செல்கிறோம் என்று அழைத்து சென்று அவருக்கு உணவளித்து உடைகளை வழங்கி அருகில் உள்ள காப்பகத்தில் சேர்த்தோம். நன்றாக வாழ்ந்தவர். அவர் முகவரியை கூட சொல்ல மறுத்துவிட்டார் என்றார்.

    வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் அனாதையாக ஆதரவின்றி தவிக்கவிடப்படுகின்றனர்.

    தள்ளாத சூழ்நிலையில் விடப்பட்ட முதியோர்களை காப்பகங்கள் அரவணைத்து பாதுகாக்கின்றன. பெரிய மேட்டில் சென்னை மாநகராட்சி மற்றும் இந்திய சமுதாய நிறுவனம் இணைந்து ஆதரவற்ற வர்களை பாதுகாத்து வருகிறது. இங்குள்ள காப்பக நிர்வாகி கிருத்திகா கூறியதாவது:-

    உறவுகளால் அதிகம் கைவிடப்படுபவர்களில் 55 வயதில் இருந்து 85 வயதானவர்களே அதிகம். குடும்பத்தினரின் கடும்சொல் தாங்காமல் கண்ணீர் ததும்ப வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தங்கியிருந்தோரை மீட்டு எங்கள் காப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம். உணவு, உடை வழங்கி மருத்துவ வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை மறந்து காப்ப கத்தில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்க ஏற்பாடு செய்கிறோம்.

    முடிந்தளவு அவர்களின் உறவுகளுடன் பேசி கவுன்சிலிங் கொடுத்து சேர்த்தும் வைக்கிறோம்.

    பெரியமேடு ஸ்டிரிஸ்கர்ஸ் தெரு காப்பகத்தில் 25 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதரவின்றி வந்தவர்கள் தான் என்றார்.

    தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமாக ஆதரவற்றோர் விடப்படுகின்றனர். அதிகமாக சென்னையில் வருடத்திற்கு 2000-க்கும் மேற்பட்டோர் ஆதரவின்றி கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் காணப்பட்டு மீட்கப்படுவதாக முதியோர் காப்பகங்கள் தெரிவிக்கின்றன.

    கண் விழித்து இரவு பகலாக நமக்காக உழைத்த பெற்றோரை கண் கலங்க வைத்து ஏதோ அறியாத புது இடத்தில் தவிக்கவிட்டு செல்லும் இவர்களை கல் நெஞ்சம் கொண்டவர் என்பதா? இல்லை பிறர் கண் கலங்குவதை வேடிக்கை பார்க்கும் நன்றி கெட்ட மனிதர் என்பதா? காலமே பதில் சொல்லும்.

    • குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை.
    • 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி 3 மாத பெண் சிசுவை போட்டுவிட்டு தாயார் சென்று விட்டார்.

    குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அந்த பெண் குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு மற்றும் சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த லைப் லைன் டிரஸ்ட், தத்துவள மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகங்கை காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகளை தேடி வருகிறார்கள்.
    • பொறுப்பாளர் ஜெயா சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்படும் வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதர வற்ற குழந்தைகள் தங்கி இருந்து படித்து வருகின்ற னர். மேலும் குற்ற வழக்கு களில் கைதான மைனர் சிறுமிகள் கோர்ட்டு அனுமதி யுடன் இங்கு தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

    இந்த காப்பகத்தில் கடந்த மாதம் காரைக்குடி போலீ சார் ஒரு வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரையும், தேவகோட்டை போலீசார் 16 வயது சிறுமி ஒருவரையும் கோர்ட்டு அனுமதியுடன் தங்க வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த 2 சிறுமிகளும் நேற்று காலையில் கழிவறை செல்வ தாக கூறிவிட்டு சென்றனர். பின்னர் காப்பகத்தில் பின்புறம் உள்ள சுவர் மீது ஏறி அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்ப கத்தின் பொறுப்பாளர் ஜெயா இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 2 சிறுமிகளும் எங்கு உள்ளனர்? என்று விசா ரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என்று கருதுவதால் போலீசார் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்றும் போலீசார் கருது கின்றனர். அதனடிப்படை யிலும் சிறுமிகளை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

    • 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் வழங்கல்.
    • காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருப்பாலைத்துறை ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் ஓ.எஸ்.ஜெ. சார்பாக தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முதியோர் காப்பகத்திற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, உள்பட 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை முதியோர் இல்ல நிர்வாகியும், காப்பாளருமான எஞ்ஜினியர் நடராஜனிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பேசும்போது, பிறருக்கு உதவும் மனப்பாண்மை நாம் வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவ வேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டனர்.

    இறுதியில் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
    • 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    சமூகசேவகர் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் சுமார் 11 வருடங்களாக சாலையோரம் ஆதரவின்றி வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினந்தோறும் 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கி மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களை முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.

    அதன்படி நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

    அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வழங்கினார்.

    இதில் பாரதிமோகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தன்னார்வ தொண்டு அமைப்பினர் உதவியுடன் மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை போலீசார் மீட்டனர்.
    • திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

     திருப்பூர் :

     தமிழகம் முழுவதும் கோவில்கள் முன்பும், சாலைகளில் ஆங்காங்கே இருக்கும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்குமாறு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூர் குமரன் சாலை,ரெயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் , அதே போல் கோவில்கள் முன்பும், கோவில்களை சுற்றியுள்ள சாலைகளிலும், சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்றவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பினர் உதவியுடன் மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை போலீசார் மீட்டனர்.

    இப்பணிக்காக போலீசார் வந்தபோது அவர்களை பார்த்ததும் கோவில்கள் முன்பு இருந்தவர்கள் ஓட முயற்சித்தனர். அவர்களை பிடித்து அறிவுரைகள் கூறி வாகனத்தில் ஏற்றினர்.

    பின்னர் அவர்களைஆம்புலன்சுகள் மூலமாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.
    • காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி மனநலம் பாதிக்கப்பட்ட பட்டம் படித்த பெண் மீட்பு நம்பிக்கை மனநல காப்பகத்தில் இரவோடு இரவாக ஒப்படைப்பு

    திருவாரூர் அரசினர் மருத்துவக்கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த கனகவல்லி (வயது 32) என்பதும், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவுப் படி இன்ஸ்பெக்டர் மணிமேகலை, காவலர்கள் மீனாட்சி, சத்யா ஆகியோ ர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் ஆலோசனை பெற்று மீட்டெடுத்து நம்பிக்கை மனநல காப்பகம் கொண்டு வந்த சேர்த்தனர் .

    நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் இவரை மனநல காப்பகத்தில் சேர்த்துக் கொண்டு கூறுகையில் ,காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.

    இந்நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் சரவணன், செவிலியர் சுதா, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விருதுநகரில் காப்பகத்திலிருந்து வீடு திரும்பிய சிறுமி மீண்டும் மாயமானார்.
    • இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த மைனர் பெண் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரியாபட்டியை சேர்ந்த முனியசாமி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அந்த சிறுமியை மீட்டு முனியசாமியை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி விருதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்த சிறுமி வீட்டுக்கு திரும்பினார். சம்பவத்தன்று காரியா பட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து திருச்சுழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் நீராவி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் ஊர், ஊராக சென்று பலகாரம் தயார் செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஈரோட்டுக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற செந்தில்குமார் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி முத்துமீனா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவி.
    • உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மு.பி.சாமிநாதன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் தங்கி இருந்த காப்பகத்தில் ஆய்வு செய்தனர். இப்போது மாணவர்கள் தங்கி இருந்த அறை, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம், இடங்களை ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவியாக அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    இந்நிலையில், காப்பகத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவ கல்லூரி வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கண் பார்வை தெரியாத மீனா என்ற மூதாட்டி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
    • மனநல சிகிச்சை, உணவு, உடை, சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல் அளித்து மீனாவின் முகவரியை கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்ப்பதே லட்சியம் ஆகும் என்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்படி திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கண் பார்வை தெரியாத மீனா (வயது 61) என்ற மூதாட்டி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

    அவரை சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம், காவல்துறை, திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகம் ஒருங்கிணைப்புடன் இணைந்து மீட்டெடுத்து மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க ப்பட்டது.

    இதையடுத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை அறிவுரை யின் பேரில் குழந்தைகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை, ஓ. எஸ் .சி. நிர்வாகி சுமிதா மற்றும் பணியாளர்கள், தலைமை காவலர்கள் மீனாட்சி, அகிலா, முதி யோர் உதவி மைய ரவி , மற்றும் காவலர்கள், திருத்து றைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் உரிய பாதுகாப்பிற்காகவும் தகுந்த மனநல சிகிச்சை கொடுத்து, மறுவாழ்வு அளிப்பதற்காகவும் சேர்த்தனர்.

    நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக சமூக சேவகர் சுபாலட்சுமி, கோகிலா, சரவணன், செவிலியர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டதுடன் கண்பார்வை தெரியாத மூதாட்டியை வைத்து பராமரிப்பது மிகவும் சிரமம் .மனநல மருத்துவர் கொண்டு மனநல சிகிச்சை, உணவு, உடை, சுகாதாரம்," ஆற்றுப்படுத்துதல் அளித்து கொஞ்சம் கொஞ்சமாக அன்பாக அனைவரும் பேசி, பழகி மூதாட்டி மீனாவின் முகவரியை எப்படியாவது கண்டுபிடித்து அவரது குடும்பத்தினருடன் திருவா ரூர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சேர்த்து வைப்பதே எங்களது குறிக்கோளும் லட்சியம் ஆகும் என்றார்.

    • இரவு 11 மணிக்கு பொதுமக்கள் சிறுவனை மீட்டு சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்
    • சைல்டு லைன் உதவியோடு சிறுவனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரியாண்டிபாளையம்செல்லும் ரோட்டில் இடுவம்பாளையம் அரசு பள்ளி அருகே இரவு 11 மணிக்கு, சிறுவன் ஒருவன் நீண்ட நேரமாக நின்றிருந்தான். இதனை பார்த்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்கு சென்ற போலீசார்சிறுவனைமீட்டு அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். விசாரித்த வரை,சிறுவன் பெற்றோர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

    இதனையடுத்து சைல்டு லைன் உதவியோடு சிறுவனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் சோதனையில் சிறுவன் உடம்பில் சில இடத்தில் சூடுவைத்ததுக்கான பழைய தழும்பும்,கன்னத்தில் நக கீறல்களும் இருந்தது.இதனால் குழந்தைகள் நலக்குழுவில்ஆஜர்படுத்தி, ஈரோட்டில் உள்ள தத்து வள மையத்துக்கு அனுப்பப்பட்டான். சிறுவனின் பெற்றோர் யார் ? என சென்ட்ரல் போலீசார்தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ×