search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archives"

    • 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் வழங்கல்.
    • காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருப்பாலைத்துறை ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் ஓ.எஸ்.ஜெ. சார்பாக தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முதியோர் காப்பகத்திற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, உள்பட 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை முதியோர் இல்ல நிர்வாகியும், காப்பாளருமான எஞ்ஜினியர் நடராஜனிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பேசும்போது, பிறருக்கு உதவும் மனப்பாண்மை நாம் வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவ வேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டனர்.

    இறுதியில் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.
    • காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி மனநலம் பாதிக்கப்பட்ட பட்டம் படித்த பெண் மீட்பு நம்பிக்கை மனநல காப்பகத்தில் இரவோடு இரவாக ஒப்படைப்பு

    திருவாரூர் அரசினர் மருத்துவக்கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த கனகவல்லி (வயது 32) என்பதும், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவுப் படி இன்ஸ்பெக்டர் மணிமேகலை, காவலர்கள் மீனாட்சி, சத்யா ஆகியோ ர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் ஆலோசனை பெற்று மீட்டெடுத்து நம்பிக்கை மனநல காப்பகம் கொண்டு வந்த சேர்த்தனர் .

    நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் இவரை மனநல காப்பகத்தில் சேர்த்துக் கொண்டு கூறுகையில் ,காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.

    இந்நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் சரவணன், செவிலியர் சுதா, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×