நள்ளிரவில் அனாதையாக தவித்த 3 வயது சிறுவன் - போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

இரவு 11 மணிக்கு பொதுமக்கள் சிறுவனை மீட்டு சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்சைல்டு லைன் உதவியோடு சிறுவனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 நள்ளிரவில் அனாதையாக தவித்த சிறுவன்.
 நள்ளிரவில் அனாதையாக தவித்த சிறுவன்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் பெரியாண்டிபாளையம்செல்லும் ரோட்டில் இடுவம்பாளையம் அரசு பள்ளி அருகே இரவு 11 மணிக்கு, சிறுவன் ஒருவன் நீண்ட நேரமாக நின்றிருந்தான். இதனை பார்த்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்கு சென்ற போலீசார்சிறுவனைமீட்டு அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். விசாரித்த வரை,சிறுவன் பெற்றோர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

இதனையடுத்து சைல்டு லைன் உதவியோடு சிறுவனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் சோதனையில் சிறுவன் உடம்பில் சில இடத்தில் சூடுவைத்ததுக்கான பழைய தழும்பும்,கன்னத்தில் நக கீறல்களும் இருந்தது.இதனால் குழந்தைகள் நலக்குழுவில்ஆஜர்படுத்தி, ஈரோட்டில் உள்ள தத்து வள மையத்துக்கு அனுப்பப்பட்டான். சிறுவனின் பெற்றோர் யார் ? என சென்ட்ரல் போலீசார்தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com