என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "student molested"
- ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
- நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் கதிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகைய்யா மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அவரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரெட்டி நாகையா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந்தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஷேஷ்(வயது19)என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கும், மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அங்கு அழைத்துச் சென்றேன்.
அப்போது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் அவர் கர்ப்பமானார்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தருமபுரியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
பெரியகுரும்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் என்கிற முனியப்பன் (வயது28) என்பவர் மாணவி பள்ளிக்கு வரும்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த மாணவி முனியப்பனை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் முனியப்பனை தேடி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணேசன் என்கிற முனியப்பனை தேடி வருகின்றனர்.
- பாலமுருகன், மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
- தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
புதுச்சேரி:
புதுவை தவளக்குப்பம் பகுதியில் பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்த 17 வயது மாணவி கடந்த 3-ந்தேதி மாயமானார்.
அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவியை காதலித்து வந்த டிரைவரான பூரணாங்குப்பம் காமராஜ் நகரை சேர்ந்த புண்ணியக்கோடி மகன் பாலமுருகன் (21). மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
குழந்தைகள் திருமண தடை சட்டம், கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
- பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
- ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆங்கிலோ இந்தியனான இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர்.
பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி, கல்லூரி மாணவர் ஒருவரிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் கோவை கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் 2 பேரும், கடந்த 23-ந்தேதி மாணவி தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கிருந்த மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவுவதாக கூறினர். இதையடுத்து மாணவியை அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.
இந்த நிலையில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதே நேரத்தில் ஓட்டல் அறையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்தநிலையில், ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.
போலீசாரை பார்த்ததும் தாங்கள் வந்த மோட்டர்சைக்கிளை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் 2 பேரும் ரவுடிகள் என்பதும், கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்ததில் ரவுடிகள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
- பிடிப்பட்ட இருவரும் வேறு யாரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகினார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 18-ந் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு வாலிபர் அழைத்தார்.
வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் சென்று விடலாம் என்று மாணவியிடம் வாலிபர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவி அன்று மாலை வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் வாலிபரின் நண்பரும் இருந்தார். அவரை மாணவிக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவருடனும் மாணவி பேசினார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த வாலிபர்கள், பின்னர் மது அருந்த தொடங்கினர்.
மாணவியையும் மது குடிக்குமாறு கூறினர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பரின் வற்புறுத்தலால் சிறிது மது குடித்தார். இதில் போதை தலைக்கேறியதால் மாணவி மயங்கி விழுந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாலிபர்கள் இருவரும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அன்று இரவு முழுவதும் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி மாணவி, தனது தோழி ஒருவரிடம் கூறி அழுதார்.
நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவி மன உளைச்சலுடன் காணப்பட்டார். எனவே கல்லூரி ஆசிரியைகள், மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி ஆசிரியைகளிடம் தெரிவித்தார்.
அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை தேடினர்.
மேலும் மாணவர்களின் செல்போன் எண்களை கொண்டு அவர்கள் பதுங்கி இருந்த இடத்தையும் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் இன்று அதிகாலை அவர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிடிப்பட்ட இருவரும் இதுபோல வேறு யாரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக அவர்களை பிடித்த போலீசார் தெரிவித்தனர்.
- மாணவியின் தாயார் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டுமாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இவர் தனது வீட்டுக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது வழுக்கம்பாறை சகாயபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் (வயது 30) என்பவர் மாணவியை தான் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர், மாணவியை அந்தப் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
பின்னர் அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு இருந்து தப்பி ஓடி தனது வீட்டுக்கு வந்த சிறுமி நடந்தது பற்றி தனது தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இது பற்றி அவரது தாயார் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக கட்டிடத் தொழிலாளி ஜான்சனை போலீசார் கைது செய்தனர். ஜான்சனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.
- பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார்.
- வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மாணவி மிகவும் சோர்வாக இருந்தார். மேலும் சில நாட்களுக்குமுன்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
இதுபற்றி ஆசிரியர்கள் விசாரித்தபோது வீட்டின் உரிமையாளரின் மகன் விக்கி (22) என்பவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார். வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி விக்கி மாணவியுடன் நெருங்கி பழகினார்.
மேலும் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று அதே பகுதி யில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அப்போது மாணவிக்கு குளிர்பானத்தில் போதை பவுடர் கலந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போதைக்கு மாணவியை அடிமையாக்கி அடிக்கடி அழைத்து சென்று அத்துமீறி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியிடம் அவரது பெற்றோரை தீர்த்து கட்டி விடுவதாகவும் விக்கி மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.
கைதான விக்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. அவரது நண்பர் இதற்கு உடந்தையாக இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர்.
- கவின்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள முத்து கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கவின்ராஜ். கறிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செல்போன் மூலம் கவின்ராஜுக்கு லக்காபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவின்ராஜ் அடிக்கடி அந்த மாணவியுடன் செல்போனில் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கவின்ராஜ் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த கல்லூரி மாணவி கர்ப்பமானார். தற்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை கவின்ராஜ் ஈரோடுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.