search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver arrest"

    • கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது.

    மேலூர்:

    இச்சைக்கும், ஆசைக்கும் இணங்க வற்புறுத்தி எத்தனையோ இளம்பெண்கள், சிறுமிகளின் வாழ்வை தொலைத்து வீதியில் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறினாலும், தடுத்த பாடில்லை. அதிலும் சமீப காலமாக சிறுமிகள் அதிகம் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ளது.

    சரியான வழிகாட்டுதல், புரிதலின்றி இனக்கவர்ச்சியாலும், நீயின்றி நான் இல்லை... என்று கூறும் பசப்பு வார்த்தைகளாலும் ஈர்க்கப்படும் பள்ளி பருவக்குழந்தைகளும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அப்படியொரு சம்பவம் மதுரை அருகேயும் நடந்துள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் தம்பதியின் 16 வயது மகள், திருமோகூர் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பை கடந்த ஆண்டு படித்து முடித்தார். மேற்படிப்பு படிக்க விரும்பியபோதும், குடும்ப வறுமையால் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அதன்படி தனக்கு தெரிந்த நபரின் பரிந்துரைப்படி அங்குள்ள ஒரு ஓட்டலில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காசாளராக வேலைக்கு சேர்ந்தார். பெற்றோருக்கு அவரது வருவாய் உதவிகரமாக இருந்த நிலையில், மகளின் எதிர்கால திருமண தேவைக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

    இதற்கிடையே திருவாதவூரை அடுத்த வெள்ளமுத்தான்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). தண்ணீர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், ஓட்டலுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை வந்து சென்றுள்ளார். அப்போது அவரது பார்வை 16 வயது சிறுமியின் மீது விழுந்தது.

    மெதுவாக பேச்சுக்கொடுத்து தன்பால் ஈர்த்த ராஜ்குமார், சிறுமியிடம் இந்த வேலை உனக்கு வேண்டாம், நான் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். அதனை நம்பிய சிறுமியும் ராஜ்குமார் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எண்ண தொடங்கினார்.

    சாவி கொடுத்த பொம்மையாக சிறுமியை மாற்றிய ராஜ்குமார் தனது காம இச்சைக்கு அவரை ஆளாக்க நினைத்து, வெள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். முன்னதாக நாம் கணவன், மனைவியாகி விடுவோம் என்று கூறி கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணமும் செய்துள்ளார்.

    பின்னர் கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது. பின்னர் ராஜ்குமார் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். ஆசை வார்த்தையால் வாழ்வை தொலைத்த சிறுமி சைல்டு லைன் உதவியை நாடினார்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறையினர் சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களின் வழிகாட்டுதல்படி, மேலூர் அனைத்து மகளிர் போலீசில் இந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கொடி மலர் ஆகியோர் விசாரணை நடத்தி ராஜ்குமார் மீது திருமண சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து தலைமறைவான ராஜ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சித்தியையும் மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதபோல் ராணிப்பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று குழந்தைகளின் தந்தையான மோகன்தாஸ் என்பவர் வேலூரில் ஒரு இனிப்பகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

    அவரிடம் ஏற்பட்ட மாற்றம் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. மாஸ்டரின் மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில் சிறுமியை குறிவைத்து பாலியலுக்கு உட்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    • மாணவியை பால்ராஜ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்தார்.
    • சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அப்போது மாணவியை பால்ராஜ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்தார். இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இந்த தொல்லை அத்துமீறி போகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 9-ம் வகுப்பு மாணவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் பால்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கருப்பையா கவுண்டர் வீதியை சேர்ந்த கன்னியப்பன் (31). ஆட்டோ டிரைவர். மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த விவகாரம் கன்னியப்பன் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியின் கன்னத்தில் அடித்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் 12-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கன்னியப்பன், அவரை தாக்கிய அவரது மனைவி மகாலட்சுமி (25) ஆகியோரை கைது செய்தனர்.

    தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது.

    விசாரணையில் டிரைவர் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (வயது35) என்பதும் நடுக்காவிரி பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து லாரியை பறிமுதல் செய்து தீபன் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
    அண்ணா நகரில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    அண்ணாநகர் ஏ.ஏப். பிளாக்கில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார்.

    சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர் ஏ.டி.எம். மையத்தை வாலிபர் ஒருவர் உடைப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அண்ணாநகர் ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் விரட்டி சென்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த வாலிபர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மடக்கி பிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் கெங்கைவல்லியை சேர்ந்த சங்கர் என்பதும், சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் ஒப்பந்த லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட சங்கர் வேறு எங்காவது ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    காஞ்சீபுரம் அருகே லாரி ஏற்றி தொழிலாளி கொலை செய்த வடமாநில டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள், தமிழக எல்லைக்கு வந்ததும் தங்களுக்கு வழிகாட்டு வதற்காக ஒருவரை தங்களுடன் அழைத்து வருவது வழக்கம்.

    நேற்று, கொல்கத்தாவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றுக் கொண்டு ஒரு லாரி காஞ்சீபுரம் வந்தது. இதை தரண்ஷானி (34) என்பவர் ஓட்டி வந்தார்.

    சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்த இந்த லாரி காஞ்சீபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் என்ற இடத்தில் நின்றது. அதை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஷோரூம் செல்வதற்கு வழிகேட்டார்.

    அப்போது, துலுங்கும் தண்டலம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கங்கன் (55) என்பவர் வழிகாட்டு வதற்காக லாரியில் ஏறினார். அதற்கு பணம் தர வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து, அவர் அந்த லாரியில் சென்று இருசக்கர வாகனங்களை இறக்க வேண்டிய கடையை கட்டினார். லாரி புறப்படும் போது தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டார். அப்போது டிரைவருக்கும் கங்கனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பணம் தராவிட்டால் லாரியை விடமாட்டேன் என்று கங்கன் லாரியை வழிமறித்தார். அப்போது டிரைவர் தரண் ஷானி அவர் மீது லாரியால் மோதினார். இதில் கங்கன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    தகவல் அறிந்ததும், பாலு செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகான் சம்பவ இடம் சென்று வழக்கும் பதிவு செய்தார். டிரைவர் லாரியை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று ரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பி விட்டார்.

    போலீசார், அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருந்த டிரைவர் தரண்ஷானியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்தி சென்ற லாரியை போலீசார் விரட்டி சென்று மடக்கினர். மேலும் டிரைவரை கைது செய்தனர்.
    முஷ்ணம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் மணல்பேடு பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக லாரியில் மணல் எடுத்துக் கொண்டு செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் பகுதி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயற்சித்தபோது டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிசென்றார்.

    உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று லாரியை மடக்கினர். அந்த லாரியில் நாகப்பட்டினம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டிவந்த குமராட்சி ஒன்றியம் இளங்காப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் கருணாகரனை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் இளம்பெண்ணை கற்பழித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 28), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    மோகன்ராஜுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அவரது நிலத்தின் அருகே 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.

    அந்த பெண்ணை, மோகன்ராஜ் குண்டுக்கட்டாக அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். உடனடியாக அவர்கள் ஊர் பஞ்சாயத்தில் கூறினர். ஊர் பஞ்சாயத்தார், மோகன்ராஜை பிடித்து விசாரித்த போது, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.

    உடனே அந்த பெண்ணை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகன்ராஜியிடம் ஊர் பஞ்சாயத்தார் கூறினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டு சென்றார்.

    இந்த நிலையில் மோகன்ராஜ் திடீரென்று மாயமாகி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த இளம் பெண்ணின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாகி இருந்த மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    ×