என் மலர்
நீங்கள் தேடியது "panruti young woman molested"
பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் இளம்பெண்ணை கற்பழித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 28), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
மோகன்ராஜுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அவரது நிலத்தின் அருகே 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.
அந்த பெண்ணை, மோகன்ராஜ் குண்டுக்கட்டாக அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். உடனடியாக அவர்கள் ஊர் பஞ்சாயத்தில் கூறினர். ஊர் பஞ்சாயத்தார், மோகன்ராஜை பிடித்து விசாரித்த போது, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.
உடனே அந்த பெண்ணை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகன்ராஜியிடம் ஊர் பஞ்சாயத்தார் கூறினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டு சென்றார்.
இந்த நிலையில் மோகன்ராஜ் திடீரென்று மாயமாகி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த இளம் பெண்ணின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாகி இருந்த மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 28), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
மோகன்ராஜுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அவரது நிலத்தின் அருகே 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.
அந்த பெண்ணை, மோகன்ராஜ் குண்டுக்கட்டாக அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். உடனடியாக அவர்கள் ஊர் பஞ்சாயத்தில் கூறினர். ஊர் பஞ்சாயத்தார், மோகன்ராஜை பிடித்து விசாரித்த போது, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.
உடனே அந்த பெண்ணை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகன்ராஜியிடம் ஊர் பஞ்சாயத்தார் கூறினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டு சென்றார்.
இந்த நிலையில் மோகன்ராஜ் திடீரென்று மாயமாகி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த இளம் பெண்ணின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாகி இருந்த மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






