என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காஞ்சீபுரம் அருகே லாரி ஏற்றி தொழிலாளி கொலை - வடமாநில டிரைவர் கைது
காஞ்சீபுரம்:
வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள், தமிழக எல்லைக்கு வந்ததும் தங்களுக்கு வழிகாட்டு வதற்காக ஒருவரை தங்களுடன் அழைத்து வருவது வழக்கம்.
நேற்று, கொல்கத்தாவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றுக் கொண்டு ஒரு லாரி காஞ்சீபுரம் வந்தது. இதை தரண்ஷானி (34) என்பவர் ஓட்டி வந்தார்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்த இந்த லாரி காஞ்சீபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் என்ற இடத்தில் நின்றது. அதை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஷோரூம் செல்வதற்கு வழிகேட்டார்.
அப்போது, துலுங்கும் தண்டலம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கங்கன் (55) என்பவர் வழிகாட்டு வதற்காக லாரியில் ஏறினார். அதற்கு பணம் தர வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, அவர் அந்த லாரியில் சென்று இருசக்கர வாகனங்களை இறக்க வேண்டிய கடையை கட்டினார். லாரி புறப்படும் போது தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டார். அப்போது டிரைவருக்கும் கங்கனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பணம் தராவிட்டால் லாரியை விடமாட்டேன் என்று கங்கன் லாரியை வழிமறித்தார். அப்போது டிரைவர் தரண் ஷானி அவர் மீது லாரியால் மோதினார். இதில் கங்கன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும், பாலு செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகான் சம்பவ இடம் சென்று வழக்கும் பதிவு செய்தார். டிரைவர் லாரியை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று ரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பி விட்டார்.
போலீசார், அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருந்த டிரைவர் தரண்ஷானியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்