search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று போதைக்கு அடிமையாக்கி கற்பழித்த வாலிபர் கைது
    X

    தாம்பரம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று போதைக்கு அடிமையாக்கி கற்பழித்த வாலிபர் கைது

    • பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார்.
    • வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மாணவி மிகவும் சோர்வாக இருந்தார். மேலும் சில நாட்களுக்குமுன்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

    இதுபற்றி ஆசிரியர்கள் விசாரித்தபோது வீட்டின் உரிமையாளரின் மகன் விக்கி (22) என்பவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார். வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி விக்கி மாணவியுடன் நெருங்கி பழகினார்.

    மேலும் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று அதே பகுதி யில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அப்போது மாணவிக்கு குளிர்பானத்தில் போதை பவுடர் கலந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து போதைக்கு மாணவியை அடிமையாக்கி அடிக்கடி அழைத்து சென்று அத்துமீறி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியிடம் அவரது பெற்றோரை தீர்த்து கட்டி விடுவதாகவும் விக்கி மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.

    கைதான விக்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. அவரது நண்பர் இதற்கு உடந்தையாக இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×