search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
    X

    உடுமலை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    • பொள்ளாச்சி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய கரிச்சிக்குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • மீண்டும் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சற்று மன வளர்ச்சி குன்றியவர். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக சிறுமி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்து நின்றுள்ளார்.

    அப்போது காய்கறி வியாபாரியான சின்ன பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவரது மகன் கரிச்சிக்குமார் (வயது 29) அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    பொள்ளாச்சி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய கரிச்சிக்குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மீண்டும் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டுக்கு தாமதமாக வரவே, அவரது தாய் விசாரித்த போது சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கரிச்சிக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×