search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha polls"

    • பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
    • கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இருந்த போதிலும் சில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    இந்நிலையில், அரியானா மாநில பாஜக தலைவராகவும், குருக்ஷேத்ரா தொகுதி எம்.பி ஆகவும் இருக்கும் நயாப் சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்றார்

    இன்று மாலை 5 மணியளவில் நயப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • ஜனநாயக ஜனதா கட்சி உடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பாஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இருந்த போதிலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    2019 மக்களவை தேர்தலில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஜேஜேபி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஏழு இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பின் சட்டமன்ற தேர்தலின்போது ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி வைத்தது.

    90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதாவுக்கு 41 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். 5 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் மற்றும் ஹெச்.எல்.பி எம்.எல்.ஏ. கோபால் கண்டா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டி.
    • பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது கட்சிக்கு 'தர்மம்' உள்ளது என்றும், ஆனால், 'தர்மம்' வேண்டுமா அல்லது 'அதர்மம்' வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    அரியானாவின் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர், அந்த தொகுதியில் இருந்து தனது கட்சி வேட்பாளர் சுஷில் குப்தாவுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

    அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிசும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. கூட்டணியின் கீழ், மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

    மேலும், கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், மகாபாரதத்தை எடுத்துரைத்து, "குருக்ஷேத்திரம் 'தர்மயுத்' போராடிய புண்ணிய பூமி" என்றார்.

    'கௌரவர்கள்' அனைத்தையும் கொண்டிருந்தாலும் 'பாண்டவர்கள்' வெற்றி பெற்றதாக கெஜ்ரிவால் கூறினார்.

    "பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார். இன்று, நம்மிடம் என்ன இருக்கிறது. நாம் மிகவும் சிறியவர்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார்?" என்றார்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசை குறிப்பிட்டு பேசிய கெஜ்ரிவால், "அவர்களிடம் எல்லாம் உள்ளது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அவர்களிடம் ஐபி, சிபிஐ, இடி உள்ளது" என்றார்.

    "எங்களுடைய 'தர்மம்' (நீதி) எங்களிடம் உள்ளது. இது 'தர்மம்' மற்றும் 'அதர்மம்' (அதர்மம்' (அதர்மம்) ஆகியவற்றிற்கிடையே நடக்கும் சண்டையாகும். மேலும், இதில் 'தர்மம்' அல்லது 'அதர்மம்' எது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

    நான் டெல்லியில் இருந்து கூப்பிய கைகளுடன் உங்கள் வாக்குகளை கேட்க வந்தேன். சுஷில் குப்தா ஜி வீடு வீடாக சென்று உங்கள் வாக்குகளை கேட்கிறார். தேர்தலில் வெற்றி பெற உங்கள் வாக்குகள் எங்களுக்கு தேவை. அவர்களுக்கு (பாஜக) உங்கள் வாக்குகள் தேவையில்லை" என்றார்.

    • டீப்ஃபேக் தற்போது டிரெண்டிங் ஆகி வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • சர்ச்சைக்குரிய வகையிலான பேச்சு, அறிக்கைகளை தவிர்க்கவும்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகளில் பிரதமர் மோடி முழுக்கவனம் செலுத்தி வருகிறார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்கிடையே வேட்பாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட கட்சிப் பணிகளிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்.

    இந்த நிலையில்தான் நேற்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தனது 2-வது முறை ஆட்சிக்காலத்தில் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இதுவே கடைசி முறையாகும்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மந்திரிகளை பார்த்து "செல்லுங்க்ள, வெல்லுங்கள், விரைவில் மீண்டும் சந்திப்போம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும் எந்தவொரு அறிக்கை விடும்போதும் தயது செய்து கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தவறாக ஏதும் கூறிவிடாதீர்கள். தற்போது டீப்ஃபேக் டிரெண்டிங்காக உள்ளது. இதனால் இந்த இரண்டு விசயங்களில் கவமானகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

    நம்முடைய திட்டங்கள் குறித்து பேசும்போது, சர்ச்சைக்குரிய அறிக்கைகளை தவிர்க்க வேண்டும். ஜூன் மாதம் நாம் தாக்கல் செய்யக் கூடிய முழு பட்ஜெட்டில் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) குறித்து முழு பார்வையையும் தெரியவரும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது.
    • பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா கருத்து தெரிவித்து உள்ளார். 90 வயதானவரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், பிராசாரத்தில் மட்டும் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், எங்கெல்லாம் தேவையோ, நான் அங்கு நிச்சயம் செல்வேன். பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது. மேலும் எனக்கு நினைவு திறனும் எஞ்சியுள்ளது. இதை கொண்டு நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன்," என தெரிவித்தார்.

     


    தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தெளிவுப்படுத்திய தேவகவுடா ஹெச்.டி. குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம் என்று தெரிவித்தார்.

    மேலும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் தான் தனது மனைவியுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் தேவகவுடா தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. 

    • கூட்டணி குறித்து பேசிய தேவகவுடா, தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார்.
    • மத்திய மந்திரி அமித் ஷா ஜனதா தளம் கட்சிக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கி இருப்பதாக தகவல்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்து இருக்கிறார்.

    ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவகவுடா சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் ஜனதா தளம் கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.

    "பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் கட்சி இடையே ஒற்றுமை இருக்கும். மத்திய மந்திரி அமித் ஷா ஜனதா தளம் கட்சிக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்து இருக்கிறார்," என்று பி.எஸ். எடியூரப்பா தெரிவித்து உள்ளார். ஜூன் 1996 முதல் ஏப்ரல் 1997 வரை இந்திய பிரதமராக இருந்துவந்த ஹெச்.டி. தேவகவுடா கர்நாடக மாநிலத்தில் ஐந்து தொகுதிகளை ஒதுக்கும் படி கேட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    கர்நாடக மாநிலத்தின் மண்டியா, ஹசன், தும்குரு, சிக்பெல்லாபூர் மற்றும் பெங்களூரு புறநகர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட ஜனதா தளம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. எனினும், பேச்சுவார்த்தைக்கு பிறகு நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜனதா தளம் ஒப்புக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.

    முன்னதாக ஜூலை மாத வாக்கில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய தேவகவுடா, தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார். "நாங்கள் ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் தான் தற்போது பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி உருவாகி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.  தமிழகம், கேரளா தவிர காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை கூடுகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது.

    இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர மற்ற 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

    இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 91 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக சுமார் 30 லட்சத்து 96 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், சுமார் 10 லட்சத்து 74 ஆயிரம் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 91 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

    இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த தடவைதான் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது 65.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை 1.16 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

    தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 542 தொகுதிகளிலும் சுமார் 2.70 லட்சம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், சுமார் 20 லட்சம் மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் பயனாக காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கணிசமான வாக்குகள் பதிவானது.

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதி இடைதேர்தலும், ஏப்ரல் 18, மே 19-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.

    7 கட்டமாக நடந்த ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. கட்சி முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகளும் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஓட்டு எண்ணப்படும் லயோலா கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு

    முதலில் தபால் வாக்குகள், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணப்படும். அது முடிந்ததும் 30 நிமிடங்கள் கழித்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருக்கும் வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கும். அதாவது 8.30 மணிக்குத்தான் மின்னணு எந்திரங்களின் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும். சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 14 முதல் 22 மேஜைகள் வரை போடப்பட்டு ஓட்டு எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றிய தகவல் ஒலி பெருக்கியில் வெளியிடப்படும்.

    காலை 10 மணி அளவில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிய வரும். இதைத்தொடர்ந்து முன்னணி நிலவரம் தெரிய வரும். பிற்பகலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புடன் இருக்கும் வேட்பாளர்கள், கட்சி பற்றி தெரிந்துவிடும்.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டு வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் 30 ஓட்டுச்சாவடிகளின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும். இப்படி ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிக்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.

    இந்தியா முழுவதும் 542 தொகுதிகளிலும் 20 ஆயிரத்து 625 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்க வேண்டியதுள்ளது. எனவே இந்த தடவை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சுமார் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று சொல்கிறார்கள்.

    என்றாலும் நாளை மாலை முதலே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் ஓட்டு எண்ணிக்கை வி‌ஷயத்தில் புதிய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட 22 எதிர்கட்சிகள் நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளன. அந்த மனுவில், “ஒவ்வொரு தொகுதி வாக்குகளும் எண்ணப்படுவதற்கு முன்பு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி முதலில் சரிபார்க்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளும், மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகளும் சரியாக இருந்தால் மட்டுமே ஓட்டு எண்ணிக்கையை தொடர வேண்டும். முரண்பாடு இருந்தால், எந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சினை உள்ளதோ அந்த சட்டசபை பகுதிக்குரிய வாக்குகள் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி வாக்குகளை எண்ணினால் தேர்தல் முடிவை வெளியிட 3 அல்லது 4 நாட்களாகி விடும் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய கோரிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற 6-வது கட்ட வாக்குப்பதிவை 10 நாடுகளின் தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற 6-வது கட்ட வாக்குப்பதிவை வெளிநாட்டு தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர். ரஷியா, மியான்மர், பூடான், கம்போடியா, போஸ்னியா, வங்காளதேசம், கென்யா, மெக்சிகோ, மலேசியா, இலங்கை ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

    அவர்கள் வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் 12 வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்த்தனர். ஓட்டுப்பதிவையும், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இயங்குவதையும் பார்த்து வியந்தனர்.

    இதுகுறித்து ரஷிய தேர்தல் கமிஷன் உறுப்பினர் செவ்செங்கோ கூறியதாவது:-

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இயங்குவதை பார்ப்பது சுவையாக இருந்தது. ரஷியாவில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களும் இதே போன்றவைதான். தேர்தல் பார்வையாளர்களுடனும் பேசினோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கேரளாவில் வாக்களிக்க வந்த முதியவர்கள் உள்பட 8 பேர் திடீரென இறந்தனர். மேலும் 4 அதிகாரிகள் மயக்கம் அடைந்தனர். #LokSabhaElections2019
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் 3-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. அந்த வகையில் கேரளாவில் நேற்று நடந்த தேர்தலில் அந்த மாநில மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

    கோட்டயம் மாவட்டம் வைக்கம் அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட வந்த ரோசம்மா (வயது 84) என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    இதேபோல் கண்டியூர் அருகே பிரபாகரன் (74), காசர்கோடு அருகே பாபுராஜ் (55), தளிபரம்பு என்ற இடத்தில் வேணுகோபால மாரர் (57), கொல்லம் அருகே பர்ஷன் (63), காலடி என்ற இடத்தில் தெரசாகுட்டி (87), தலசேரியில் முஸ்தபா (52), ரன்னி என்ற இடத்தில் சக்கே மேத்யூ (66) ஆகியோர் ஓட்டு போட வந்த இடத்தில் வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென மயங்கி விழுந்து இறந்தனர்.

    இதனிடையே சாளக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த 2 தேர்தல் அதிகாரிகள் திடீரென மயங்கி விழுந்தனர். இதேபோல் ஏனாதிமங்கலம், பிரலசேரி ஆகிய இடங்களில் தேர்தல் பணியில் இருந்த 2 அதிகாரிகளும் மயங்கினர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. #LokSabhaElections2019
    இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இணைந்திருக்கிறது. #LokSabhaElections2019 #ElectionCommission



    மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் கணக்கு துவங்கியிருக்கிறது. இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் துவங்க இருப்பதையொட்டி ட்விட்டர் சார்பில் சிறப்பு தேர்தல் எமோஜி (பாராளுமன்ற கட்டிடம்) ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

    புதிய தேர்தல் எமோஜியை கொண்டு தேர்தல் தொடர்பான விவாதங்கள், பொது மக்களிடத்தில் வாக்கு செலுத்துவதை ஆதரிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஊக்கப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. 12 மொழிகளில் கிடைக்கும் ஹேஷ்டேக்களில் இந்த தேர்தல் எமோஜி இணைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு (Systematic Voters' Education and Electoral Participation) எனும் திட்டத்தை துவங்கியிருக்கிறது. 



    இதுகுறித்து ட்விட்டர் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ட்விட்டரில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு திட்டத்தை ட்விட்டர் இந்தியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளது.

    "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு நடைபெற இருக்கும் தேர்தல் ட்விட்டரில் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தளத்தில் நேபர்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த கடந்த சில மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த்திருக்கிறோம். அந்த வகையில் ட்விட்டர் தளத்திற்கு தேர்தல் ஆணையத்தை வரவேற்கிறோம்," என ட்விட்டர் இந்தியாவின் மஹிமா கௌல் தெரிவித்திருக்கிறார்.

    ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தேர்தல் தொடர்பான உண்மை தகவல்களை நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும். 
    மாண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என்று தேவேகவுடா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இருகட்சிகள் இடையே நீண்ட நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே, ஹாசன் மற்றும் மாண்டியா ஆகிய தொகுதிகளில் தேவேகவுடா பேரன்கள் போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதாவது ஹாசனில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும், மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இதனால் அவர்களும் தங்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.

    இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மாண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் தேவேகவுடா கலந்துகொண்டு, மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி தான் வேட்பாளர் என்று அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசியதாவது:-

    கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவர் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு என்னை அழைத்துள்ளனர். நான் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன். நான் பிரதமராக இருந்தபோது தான், ராணுவத்தில் முஸ்லிம்களை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தேன்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.



    இதைதொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

    மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியின் வெற்றியை கட்சி நிர்வாகிகள் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறேன், பணம் சம்பாதிப்பதற்காக அல்ல.

    கர்நாடக மக்களாகிய நீங்கள் தான் எனது சொத்து. பணம் சம்பாதிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அம்பரீஷ் இறந்தபோது, அவரது உடலை மாண்டியாவுக்கு எடுத்து வந்து இறுதி அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்தேன். இதை அம்பரீசின் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    ராணுவத்துறை மந்திரியிடம் பேசி, ஹெலிகாப்டரை பெற்று அம்பரீசின் உடலை இங்கு கொண்டு வந்தேன். ஆனால் என்னையும், எனது மகனையும் பற்றி அம்பரீசின் ரசிகர்கள் தவறான முறையில் கருத்து தெரிவித்தனர். இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy

    ×