search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவ கவுடா"

    • பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது.
    • பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா கருத்து தெரிவித்து உள்ளார். 90 வயதானவரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், பிராசாரத்தில் மட்டும் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், எங்கெல்லாம் தேவையோ, நான் அங்கு நிச்சயம் செல்வேன். பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது. மேலும் எனக்கு நினைவு திறனும் எஞ்சியுள்ளது. இதை கொண்டு நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன்," என தெரிவித்தார்.

     


    தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தெளிவுப்படுத்திய தேவகவுடா ஹெச்.டி. குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம் என்று தெரிவித்தார்.

    மேலும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் தான் தனது மனைவியுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் தேவகவுடா தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. 

    • கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
    • வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும்.

    எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

    குமாரசாமியின் கருத்துக்கு நேர்மாறாக தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் டிக்கெட் வாங்குவது தொடர்பாக தேவ கவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.

    இதற்கிடையே, ஹாசன் தொகுதியில் தனது மனைவி பவானிக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று ரேவண்ணா கேட்டு வருகிறார். இதற்கு குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த தொகுதியில் கட்சி தொண்டர் ஒருவருக்கு டிக்கெட் வழங்குவதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேவ கவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இந்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு ஓரிரு நாளில் வீடு திரும்புவேன். எனது உடல்நிலை குறித்து யாரும் பயப்பட தேவை இல்லை என பதிவிட்டுள்ளார்.

    ×