search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLAs case verdict"

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சபாநாயகர் தனபாலுடன் அவரது அறையில் ஆலோசனை நடத்தினார். #TNCM #Edappadipalaniswami #Dhanapal

    சென்னை, நவ. 1-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 12.30 மணி அளவில் சபாநாயகர் தனபாலை அவரது அறைக்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர்களுக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து இருவரும் ஆலோசித் ததாக கூறப்படுகிறது.

    தர்மம் வெல்லும் என்பது நீதிமன்றம் மூலம் உண்மையாகி உள்ளதாக கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalaniswami #18MLAsCaseVerdict
    கோவை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

    ஈச்சனாரி செல்லும் வழியில் சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் எண்ணங்கள் இன்றைக்கு தவிடு பொடியாகி உள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு சில எட்டப்பர்கள் எதிரியோடு சேர்ந்து இந்த இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். அதை மக்களின் துணையோடு ஜெயலலிதா தவிடுபொடியாக்கினார்.

    ரத்தத்தை வியர்வையாக சிந்தி, தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து மீண்டும் தமிழகத்திலே எம்.ஜி.ஆர். ஆட்சியை உருவாக்கினார். எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றினார்.

    இந்த ஆட்சி கலைந்து விடும் என்று சிலர் கனவு கண்டனர். ஆனால், இறைவன் அருளால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. சில துரோகிகள், எதிரிகளோடு இணைந்து கொண்டு கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் முயன்றனர். ஆனால் அவர்களின் சதி முறியடிக்கப்பட்டு விட்டது.

    நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது தான் நடக்கும். எப்போதும் தர்மம், உண்மையே வெல்லும் என்பது நீதிமன்றம் மூலம் உண்மையாகி உள்ளது. துரோகத்திற்கு இறைவன் தக்க தண்டனை வழங்கி உள்ளார். ஆட்சியைக் கலைக்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்று சதிகாரர்களோடு கூட்டு சேர்ந்து சதி செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்துள்ளது.

    அனைத்து தரப்பின் ஆதரவுடன் முதல்-அமைச்சராக பணியாற்றி வருகிறேன். கழகத்தில் நான் வகிக்காத பதவிகளே கிடையாது. தொண்டன் நடத்தும் ஆட்சி இது. மக்களின் தேவை என்ன என்று எனக்கு தெரியும். மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறோம் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.

    இந்த ஆட்சி பதவிஏற்ற போது 10 நாள் முதல்வராக தாக்கு பிடிப்பாரா? என்று கேட்டார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஆட்சியை கலைக்க வேண்டும் என சொல்லி வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு நாற்காலி மீது தான் ஆசை. மக்களை பற்றிய எண்ணம் இல்லை. நான் உழைத்து இந்த இடத்துக்கு வந்துள்ளேன். கொல்லை பக்கமாக வந்து ஆட்சியை பிடிக்கவில்லை.

    இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை நாம் கட்டிக்காப்போம். மக்களுக்கு நன்மை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami #18MLAsCaseVerdict
    18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை எதிர்த்து வருகிற செவ்வாய்க்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படுகிறது. #18MLAsCaseVerdict #SupremeCourt
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பளித்தார். செல்லாது என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வெளியிட்டார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

    இதைத்தொடர்ந்து 18 தொகுதிகளையும் காலி இடமாக அறிவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மதுரையில் கூடி ஆலோசித்தனர். டி.டி.வி.தினகரன் முன்னிலையில் நேற்று அந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வக்கீல்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மூன்றாவது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்வதா? என்று ஆய்வு செய்தனர். அப்பீல் செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளது. என்றாலும் அதற்கு முன்னதாக அப்பீல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    எங்கள் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களான கபில் சிபில், அசோக் சிங்வி ஆகியோரை தொடர்பு கொண்டு எங்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் வாதாட ஏற்பாடு செய்து வருகிறார். வருகிற செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படும்.

    ஏற்கனவே 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு 650 பக்கம் உள்ளது. இப்போது 3-வது நீதிபதியின் தீர்ப்பு 450 பக்கம் உள்ளது. இவற்றை டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

    முதல்-அமைச்சரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே சபாநாயகரின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம். இதில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    கர்நாடகத்தில் எடியூரப்பா வழக்கிலும் இதேபோல்தான் நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி கிடைத்தது. அதேபோல் எங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் ஆகிய 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால்தான் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார்.

    இவர் ஏற்கனவே சொன்ன 2 நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரி என்று பார்த்துதான் தீர்ப்பு கூற வேண்டும். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக தீர்ப்பு கூறி உள்ளார். இது விதியை மீறியதாகும்.

    இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்து வாதாடுவோம். நாங்கள் மேல்முறையீடு செய்தாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 18 பேரும் மீண்டும் தேர்தலை சந்திக்கவும் தயாராகவே உள்ளோம்.

    தினகரனை ஆதரிக்கும் ஒரே காரணத்துக்காக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உள்ளதாக கேள்விப்படுகிறோம். இவர்கள் 3 பேர் மீதும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது.

    இவ்வளவு ஏன்? எங்கள் 18 பேரையும் அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் நீக்க முடியாமல்தான் உள்ளனர். தைரியம் இருந்தால் நீக்கிப் பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #SupremeCourt
    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளதாக அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #KCKaruppannan
    அம்மாபேட்டை:

    உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதை கொண்டாடும் வகையில் அம்மாபேட்டை ஒன்றியம் சித்தாரில் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமையில் இனிப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.சி.கருப்பணன் சித்தார் மற்றும் செம்படாபளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சில புல்லுருவிகள் அதிமுகவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார்கள் ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை.

    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. வரும் காலங்களில் ஜெயலலிதா ஆசியோடு அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KCKaruppannan
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #ADMK #MRVijayaBaskar
    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதியரசர் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து உருவாக்கி தந்த இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு இது சரியான பாடம்.

    ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். இந்த தீர்ப்பில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம் என டி.டி.வி. தினகரன் சொன்னதாக சொல்கிறீர்கள். இதுவா? அனுபவம், அப்படியென்றால் நிறைய அனுபவம் அவருக்கு காத்திருக்கிறது.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாங்களாகவே தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தால் இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள்.

    நீதிமன்றம் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று கூறியுள்ளது. மீண்டும் தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா சொன்னது போல் இன்னும் 100 ஆண்டுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்.

    கரூரில் ஒரு நபர் (முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி) இரண்டு அமாவாசைக்கு தான் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என அவ்வப்போது கூறி வருகிறார். மாதா மாதம் அமாவாசைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் பல அமாவாசைகளை அவர் பார்க்க தான் போகிறார். எங்கள் இல்லத்திருமண விழாவில் தனியார் பள்ளி பேருந்துகளும் அரசு பஸ்சும் இயக்கப்பட்டதாக கூறுகின்றனர். அரசு விதியின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MRVijayaBaskar #18MLAsCaseVerdict
    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். #18MLAsCaseVerdict #ByElection #PChidambaram
    சென்னை:

    தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தெரிவித்தது. அத்துடன் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது. ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே, அதனுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேபோல், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தாலை தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் தரப்பும் உறுதியாக கூறி வருகிறது. தங்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதாக திமுக கூறியுள்ளது.


    ஆனால் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார். ‘இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது. 18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்’ என ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection #PChidambaram
    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAsCaseVerdict
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

    நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆட்சி, நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமாகும்.

    நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக தப்பிப் பிழைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சி, மக்களால் மிக விரைவில் தண்டிக்கப்பட்டே தீரும் என இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி உறுதியாக நம்புகிறது.

    மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்றபடி, எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலகி, மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியும் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியதன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தீர்ப்பின் முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகுதான் மேற்கொண்டு எந்த கருத்தையும் தெரிவிக்க முடியும். இதில் 18 எம்.எல்.ஏ.க் களும் மேல்முறையீடு செய்வார்களா? இல்லையா? என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க முடியும்.

    ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடத்த வேண்டிய இடைத்தேர்தலை தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

    ஒருவேளை இந்த தீர்ப்புக்கும், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கும் ஏதோ ஒரு உள்ளார்ந்த உளவு இருப்பது மாதிரிதான் எண்ணத் தோன்றுகிறது.

    18 தொகுதியில் உள்ள மக்களுக்கு கிட்டதட்ட 2 ஆண்டாக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை.

    எனவே இனியும் காலம் கடத்தாமல் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். பிறகு இந்த வழக்கு 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு வெளிவந்திருக்கும் 3-வது நீதிபதியின் தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்ட மன்ற உறுப்பினர்களும் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து தான் இறுதி முடிவு கிடைக்கும்.

    தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இறுதியான தீர்ப்பினால் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    இந்த பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றாலும், சுமார் 400 நாட்களுக்கு மேலாக வழக்கில் ஈடுபட்டுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்குட்பட்ட மக்கள், தங்கள் தொகுதி பிரச்சனையை கூற பிரதிநிதியின்றி, தொகுதி வளர்ச்சி குறித்து சட்டமன்றத்தில் தங்களது தேவைகளை கூறும் உறுப்பினரின்றி குழம்பிய நிலையில் இருந்துள்ளனர். இனி வருங்காலங்களில், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு நிர்வாகம் சார்ந்த வழக்குகளையும் அவசர வழக்காக விசாரித்து காலதாமதமின்றி தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்:-

    இந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதன் மூலமாகதான் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் பெரும்பான்மையான மக்கள் தங்களோடுதான் இருக்கிறார்கள் என்று சுயதம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்ற வேளையில் உண்மை தெரிய வேண்டும். பல அரசியல் பிரச்சனைகளுக்கும், ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களுக்கும் அதுதான் தீர்வாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #18MLAsCaseVerdict
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு காலதாமதமாக வழங்கப்பட்டு உள்ளது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #18MLAsCaseVerdict
    குழித்துறை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அதை கோர்ட்டு உறுதி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பு காலதாமதமான தீர்ப்பு. இதற்கு முன்பே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். இந்த தீர்ப்பில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

    18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டு புஷ்கரவிழாவில் புனித நீராடி உள்ளனர். இதன்மூலம் இவர்கள் தங்கள் பாவங்களை தண்ணீரில் கழுவிவிட்டுள்ளனர்.


    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதை எதிர்த்து பெரும்பான்மையோர் போராடி வருகிறார்கள். கேரளாவில் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றுபட்டு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ஒரு சிலர் அதுவும் அய்யப்பன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தனர். அவர்களுக்கு போலீஸ் சீருடை வழங்கப்பட்டு உள்ளது. யார் திட்டப்படி அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishanan #18MLAsCaseVerdict
    சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்திருப்பதால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவி ரத்தாகி இருக்கிறது.

    ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. அதாவது வாக்களித்த 50 லட்சம் வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகள் இல்லை.

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்படி மேல்முறையீடு செய்ய வழி இருந்தாலும் மேல் முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது அவர்களின் விருப்பம். அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

    என்னை பொறுத்தவரை சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் சொகுசு விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்கள். நேராக மதுரை செல்லும் அவர்கள் அங்கு டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். #18MLAsCaseVerdict
    தென்காசி:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது. முன்னதாக தீர்ப்பு குறித்த விபரம் வெளியாகும் முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்கியிருக்குமாறு டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில், தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கதிர் காமு (பெரியகுளம்), சுப்பிரமணியன் (சாத் தூர்), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), முத்தையா (பரமக்குடி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி) ஆகிய 8 பேரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் கடந்த 22-ந்தேதி பழைய குற்றாலம் வந்து, இசக்கி ரிசார்ட்டில் தங்கினர்.


    நேற்று முன்தினம் அவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவையொட்டி புனித நீராடினர். பின்னர் அங்கு நடந்த யாகத்தில் கலந்து கொண்டு மாலையில் குற்றாலத்துக்கு வந்தனர். இரவில் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதிக்கு சென்று தங்கினார்கள்.

    இதற்கிடையே, இடம் மாறிய சொகுசு விடுதிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), ஏழுமலை (பூந்தமல்லி) ஆகியோர் வந்தனர்.

    இந்த நிலையில் இன்று 4-வது நாளாக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான உமா மகேஸ்வரி இன்று காலை அங்கு வந்தார்.

    இதனிடையே டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பானது. கட்சி நிர்வாகிகள் அங்கு வரத்தொடங்கினர். மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா அந்த விடுதிக்கு சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.

    இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். மேலும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்கள். நேராக மதுரை செல்லும் அவர்கள் அங்கு டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ஏற்கனவே மருது பாண்டியர் நினைவு நாளையொட்டி, சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தங்க தமிழ்ச்செல்வன், ஜான் கென்னடி ஆகிய இருவரும் நேற்றே மதுரை புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #18MLAsCaseVerdict
    தவறு செய்யாத தங்களுக்கு தகுதி நீக்க தண்டனையா? என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். #18mlascaseverdict #ThangaTamilselvan
    சென்னை:

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

    முதலில் கோர்ட்டு தீர்ப்பை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுகிறேன். அடுத்ததாக மறைந்த எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் வக்கீல், நீதிபதி குறித்து கருத்து கேட்டபோது 25 வருடமாக பொய்யே பேசி வாதாடிய வக்கீல் நீதிபதியானால் பொய்யை தவிர எதை சொல்வார் என்று சொல்வார்.

    இப்போது நானும் அதையே நினைத்து பார்க்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. கொறடா உத்தரவையும் மீறவில்லை. தவறு செய்யாத நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம். ஆனால் தவறு செய்த ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் துணை முதல்-அமைச்சராகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். நீதித்துறை தடம் மாறினால் நாடு கெட்டு போகும்.


    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? அல்லது மக்களை சந்திப்பதா? என்பது குறித்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் இன்று இரவு மதுரையில் ஆலோசனை நடத்துகிறோம். இது பற்றி அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18mlascaseverdict #ThangaTamilselvan
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #18MLAsCaseVerdict #ADMK #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை அ.தி.மு.க.வுக்கு சாதகம் என்று சொல்ல முடியாது. நீதிமன்றம் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப வழங்கிய தீர்ப்பை சாதகம், பாதகம் என்று கூறக்கூடாது. நீதித்துறை பற்றி அவ்வாறு கருத்து சொல்வது சரியல்ல.

    சட்டப்பேரவை சபாநாயகர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் ஒரு ஜனநாயகத்தை காக்க வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று, சட்டத்திற்கு உட்பட்டு ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறார்.

    அதை சிலர் கொச்சைப்படுத்தியதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. நீதித் துறையும் அவர் எடுத்த முடிவு சரியானது என்று தீர்ப்பின் மூலம் தெரிவித்து இருக்கிறது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லமுடியும்.

    தேர்தல் காலங்களில் அம்மாவுடன் பல பகுதிகளுக்கு சென்றவன் நான். அப்போதெல்லாம் அம்மா தனது உடலை வருத்திக்கொண்டு எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கம் தொடரவேண்டும், மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்று இந்த ஆட்சியை கொண்டு வந்தார். ஆனால் நமது துரதிஷ்டம் அவர் இல்லாமல் போனது.


    அவர் விட்டுச்சென்ற பணிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. யாரும் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்க மாட்டார்கள், அவ்வாறு கூறுவது நியாயமும் இல்லை.

    எந்த ஒரு கருத்து இருந்தாலும் ஜனநாயகத்தில் பேச வேண்டுமே தவிர அதற்கென்று வழிமுறை உள்ளது. வேறு வழியில் சென்று ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் செய்வது சரியல்ல என்பது தான் சரியான தீர்ப்பு.

    1984-89 நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த போது இந்த கட்சி தாவல் சட்டம் வந்தது. கட்சி தாவல் மூலம் கட்சி ஆட்சி மாறினால் ஜனநாயகம் நல்ல முறையில் இருக்காது, மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. எனவே கட்சி தாவல் இருக்ககூடாது, குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க கூடாது என்ற அடிப்படையில் சபாநாயகர் நல்ல முடிவை எடுத்துள்ளார். இது மக்களின் தீர்ப்பு.

    ஜனநாயகத்தில் கோர்ட்டிற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவர்களின் உரிமை. நாங்கள் அப்பீல் செய்ய முடியாது. எங்களுக்கு நகர்வு தேவை இல்லை. அவர்களின் நகர்விற்கு தடையாக இருக்க முடியாது.

    இரு அணிகளையும் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்வது குறித்து எனக்கு தெரியாது. பா.ஜ.க.விடம் தான் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து தி.மு.க. பா.ஜ.க.வை நெருங்கி கொண்டு உள்ளது. அதற்கு பல ஆதாரங்களை கூறியுள்ளேன். முதலில் பா.ஜ.க.வை மதவாதம் என்று திமு.க கூறியது. தற்போது தனது நிலையை மாற்றியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #ADMK #ThambiDurai
    ×