என் மலர்

    செய்திகள்

    20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்- திருநாவுக்கரசர்
    X

    20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்- திருநாவுக்கரசர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்திருப்பதால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவி ரத்தாகி இருக்கிறது.

    ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. அதாவது வாக்களித்த 50 லட்சம் வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகள் இல்லை.

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்படி மேல்முறையீடு செய்ய வழி இருந்தாலும் மேல் முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது அவர்களின் விருப்பம். அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

    என்னை பொறுத்தவரை சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    Next Story
    ×