search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Karuppannan"

    ஆட்சி மாறி மாற்றுக் கட்சியினர் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது கட்சி பதவியை உதறினார்.

    அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

    இதனால் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நான் எப்போதும் அ.தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று கூறினார்.

    இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. இன்று தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

    கட்சி பதவியை விட்டு விலகிய அவர் அடுத்து என்ன நடவடிக்கையில் ஈடுபடலாம்? என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன் உள்பட கட்சி முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    எந்த காரணம் கொண்டும் நான் ஒரு போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். அதே சமயம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யாமல் அ.ம.மு.க.வுக்கு வேலை செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

    கருத்து கணிப்பை மீறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அ.தி.மு.க.வை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். வேறு கட்சிக்காரர்கள் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன்.

    மக்களோடு மக்களாக அ.தி.மு.க. தொண்டனாக கரை வேட்டி கட்டி கொண்டு என்றும் அ.தி.மு.க தொண்டனாகவே இருப்பேன்.

    எனது தொகுதி மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சாய கழிவு நீர் பிரச்சனை நிலவி வருகிறது. அதுவும் மழை பொய்த்த காலத்தில் இந்த சாயக்கழிவு குடிநீரில் கலந்து வருகிறது.

    இதனால் குடிநீர் குடிக்க உகந்தது அல்ல என்று அப்போதய தமிழக முதல்வர் அம்மாவிடம் கூறி பெருந்துறை பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். அதுவும் கொடிவேரி அணை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என கேட்டேன். அம்மாவை 2 முறை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். அவரும் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக நிதியை அறிவித்தார்.


    இந்த நிலையில் அம்மா மறைந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் அண்ணன் பழனிசாமியிடம் வைத்தேன். சிறிது காலம் தாமதம் ஏற்பட்டாலும் குடிநீர் திட்டத்துக்கு அவர் ரூ.240 கோடி ஒதுக்கினார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என நான் அவருக்கு துணையாக நின்றேன். இப்போதும் எனது நிலை அதே தான்.

    அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேர்தலில் எதிர்க்கட்சியினரை குறி வைத்துதான் நமது பிரசாரம் இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்களே கட்சிக்கு துரோகம் செய்து உள்ளனர். அப்படிப்பட்ட சிலரை நாங்கள் பிடித்து கொடுத்தோம். தகுந்த ஆதாரத்துடன் இதை கொடுத்தும் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் (அமைச்சர் கருப்பணன்) தலையீட்டின் பேரில் வெளியே விட்டு விட்டார்கள்.

    இதனால் நான் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

    ஒரு முக்கிய நபர் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பணமும் கொடுத்துள்ளார். இதையும் நான் கட்சி தலைமையில் கூறி உள்ளேன்.

    அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு விசாரிப்போம் என்று கூறி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கட்சி பதவியை துறந்தாலும் தொண்டனாக இருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு உழைப்பேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம்.

    இவருக்கும் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணனுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெடித்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சருக்கு எதிராக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினார். “கட்சிக்காக பணி ஆற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் அமைச்சர் வேலை செய்தார் என குற்றம் சாட்டினார். பாராளுமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று புகார்களை அள்ளி வீசினார்.

    அமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போர்க்கொடி தூக்கியதால் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்த கட்சி பதவியான அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.



    இந்த விலகல் (ராஜினாமா) கடிதத்தை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட் டுக்கே சென்று வழங்கினார். அப்போது அவரிடம் முதல்வர் “எதற்கு இந்த அவசரம் சற்று பொறுமை காக்கவும்” என்று கூறியதாக தெரிகிறது.

    எனினும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. “எனது தனிப்பட்ட முடிவு தான் இது. தொடர்ந்து கட்சி பணி செய்வேன்” என்று கூறினார்.

    முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, “எனது சொந்த முடிவு தான் இது. பதவி விலகலால் எந்த மன உளைச்சலும் இல்லை. ரொம்ப சந்தோ‌ஷமும் இல்லை” என்று கூறினார்.

    கட்சி பதவியை விட்டு விலகல் குறித்து இன்று காலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “கட்சிக்கு உழைக்க பதவி ஒன்றும் அவசியம் இல்லை. சிறு வயதில் இருந்தே நான் அ.தி.மு.க. தொண்டன். அம்மா இருந்த போது அமைச்சராக இருந்த நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்து மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்தவன் நான். எனது பணி தொடரும். தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன். ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து பாடுபடுவேன். இதில் எந்த மாறுபாடும் இல்லை” என்று கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பையொட்டி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கட்சி பதவியை ராஜினாமா செய்த விவகாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அமைச்சர் கருப்பணன் தேர்தலின் போது கட்சி பணியாற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டதாக தோப்பு வெங்கடாச்சலம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
    பெருந்துறை:

    முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்துக்கும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

    அமைச்சர் கருப்பணன் குறித்து தோப்பு வெங்காடச்சலம் எம்.எல்.ஏ. கடுமையாக சாடி பேட்டி அளித்தார்.

    அவர் கூறும்போது, “கட்சிக்கு விரோதமாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டு வருகிறார். தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் கட்சி பணியாற்றாமல் மாறாக தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டார்” என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை அள்ளி வீசினார்.


    இதற்கு அமைச்சர் கருப்பணன் கூறும்போது, “யாரும் எதுவும் சொல்லிவிட்டு போகட்டும் என் விசுவாசம் நேர்மை பற்றி கட்சி தலைமைக்கு தெரியும்” என்று கூறினார்.

    இதற்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது விஸ்வாசமும் நேர்மையும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். நான் கேட்டது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் வேலை பார்த்தீர்களா... இல்லையா? இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை காட்டினால் நீங்கள் (அமைச்சர் கருப்பணன்) ஏற்றுக்கொள்வீர்களா? உங்களது விஸ்வாசத்தை, நடத்தையில் காட்ட வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி அமைத்த 3 வருட காலத்தில் எத்தனை அ.தி.மு.க. தொண்டர்களின் பிள்ளைகளுக்கு உங்கள் கல்லூரியில் இலவசமாக பயில நீங்கள் அனுமதி அளித்து உள்ளீர்கள்? பட்டியல்போட முடியுமா? அம்மாவின் விசுவாசி என்று கூறும் நீங்கள் தகுதி உள்ள தொண்டர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் பெற்று கொடுத்துள்ளீர்களா? ஒரு தொண்டனையாவது வாழ வைத்ததாக கூறமுடியுமா?

    “மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார் ஆனால் தன் மக்கள் நலமே ஒன்று என்று இருந்து விடுவார்” புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு உங்களுக்கு பொருந்தும்.

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
    மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை என்று சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் கூறினார். #MinisterKaruppannan #PlasticBan
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன் (தூத்துக்குடி) பேசியதும், அமைச்சர் கருப்பணன் குறுக் கிட்டு அளித்த பதில் வருமாறு:-

    மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

    மறுசுழற்சி செய்ய முடியாத, கேடு விளைவிக்கக் கூடிய, மக்காத மற்றும் ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. 100 சதவீதம் பிளாஸ்டிக்கை தடை செய்யவில்லை.



    மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகளுக்கு தடையில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பில் இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் பல மாற்றங்கள் வரும். அப்போது தெளிவுபடுத்தப்படும்.

    பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தின்பண்டங்களுக்கான பிளாஸ்டிக் பாக் கெட்டுகளை முறைப்படுத்துவதற்கான திட்டமும் அரசிடம் உள்ளது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.#MinisterKaruppannan #PlasticBan
    பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். #PlasticBan #KCKaruppannan
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மற்றும் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் 928 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 301 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், 38 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருந்தாலும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து வருகிறோம். விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.

    கீழ்பவானி வாய்க்கால் 2-ம் போக பாசனத்திற்கு நிலக்கடலை மற்றும் எள் பயிரிடுவதற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும். கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிவாரணத்தொகை கொடுக்கிறதோ இல்லையோ தமிழக அரசு 3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

    2011ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து அப்போதைய முதல்வர் தலைமையில் ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

    அதில் தண்ணீர் பாக்கெட், உணவு பொருள்கள் பயன்பாடு உள்பட 13 பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாது என்பதால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கேடு ஏற்படுகிறது.

    சாக்கடைகளில் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அடைத்து நோய் கிருமி உருவாக காரணமாகின்றன. குளங்களில் பிளாஸ்டிக் பொருட்களாகவே தென்படுகின்றன. பல்வேறு ஆய்வுக்கு பின்னரே பிளாஸ்டிக் தடைக்கு முடிவு செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #PlasticBan #KCKaruppannan
    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளதாக அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #KCKaruppannan
    அம்மாபேட்டை:

    உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதை கொண்டாடும் வகையில் அம்மாபேட்டை ஒன்றியம் சித்தாரில் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமையில் இனிப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.சி.கருப்பணன் சித்தார் மற்றும் செம்படாபளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சில புல்லுருவிகள் அதிமுகவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார்கள் ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை.

    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. வரும் காலங்களில் ஜெயலலிதா ஆசியோடு அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KCKaruppannan
    துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் குறித்து தினகரன் கூறும் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
    ஈரோடு:

    ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஓ. பன்னீர் செல்வம் தன்னை சந்தித்தாக டி.டி.வி. தினகரன் கூறியிருப்பது தொடர்பாக அமைச்சர் கருப்பணனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:-

    தினகரன் கூறி வரும் கருத்து பற்றி கவலை இல்லை. அதற்கு கருத்து கூறவும் விரும்பவில்லை. ஒவ் வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர்.

    கமல்ஹாசன் ஒரு கருத்து கூறுகிறார். தினகரன் ஒரு கருத்து கூறுகிறார். ஆனால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவரகளது ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு, ‘‘இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’’ என்றார்.

    மழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வருவாய்துறை ஊழியர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் விழிப்புடன் செயல்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் மழை குறித்து அச்சப்படத் தேவையில்லை.ஆற்றில் சாயக்கழிவு நீரை கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 சாயப்பட்டறை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

    மேலும் இதுகுறித்து புகார் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி .ராமலிங்கம் , கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் அருகில் இருந்தனர். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
    இலங்கையில் ஒரே நாளில் 1 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக - காங்கிரஸ்தான் காரணம் என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். #MinisterKaruppannan #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு செங்கோடம் பாளையத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சுழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது.-



    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து சாதனை படைத்தவர். ஆனால் தமிழகத்துக்கு காங்கிரசுடன் தி.மு.க.வினரும் சேர்ந்து துரோகம் செய்தார்கள். இவர்களின் கூட்டணி ஆட்சி நடந்த போது தான் இலங்கையில் போர் நடந்தது. ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர்.

    அப்போது மத்திய காங். அரசு இலங்கை ராணுவத்துக்கு முழு உதவியை வழங்கியது. இதை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவே கூறி உள்ளார்.

    ஈழப்படு கொலைக்கு காரணமான காங்கிரஸ்-தி.மு.க.வினரை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க ஐ.நா. சபைக்கு செல்வோம்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    அமைச்சர் கருப்பணன் கூறியதாவது.-

    ஈழத்தமிழர்களுக்காக மறைந்த ஜெயலலிதா பல்வேறு உதவிகளை வாரி வழங்கி உள்ளார். தமிழ் மாநிலமாக உருவாகவும் பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளார்.

    இலங்கை போரின் போது தங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா ராணுவம் உதவி செய்துள்ளதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.

    அங்கு ஒரே நாளில் 1 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்-தி.மு.க. ஆட்சியாளர்களே காரணம். இவர்கள் அ.தி.மு.க.வை அழிக்க ஆட்சியை அகற்ற பகல் கனவு காண்கிறார்கள். ஒரு போதும் அது நடக்காது.

    இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசினார்.

    எம்.பி.சத்தியபாமா, எம்.எல்.ஏ.க்கள், கே.எஸ்.தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், சிவசுப்பிரமணி, ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பகுதி கழக செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜன், ஜெயராஜ், முருகுசேகர், மகளிர் அணி செயலாளர் மல்லிகாபரமசிவம், மாநில வர்த்தகஅணி செயலாளர் சிந்து ரவிசந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம், இணை செயலாளர் மாதையன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், இணை செயலாளர் கோபால், டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன், சூரம்பட்டி தங்கவேலு, ஜீவாரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterKaruppannan #MinisterSengottaiyan

    கட்சி பொறுப்பில் பலர் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் கட்ட, இடத்தை தேர்வு செய்யாமல் அமைச்சர் சென்று ஊரின் மையப்பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. #TNMinister #Karuppannan
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட க.புதூர் இங்கு 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சார்பில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    கட்டிடம் கட்ட பூமி பூஜை போடுவதற்கு சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வந்தார். அந்த பகுதியை சேர்ந்த கட்சிக்காரர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தை தேர்வு செய்து வைத்து, கட்சிக்காரர்கள் புடைசூழ அமைச்சரை அழைத்து சென்றார்கள். சிறிது தூரம் நடந்ததும் அமைச்சர் இப்படி ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் அங்கன்வாடி பள்ளி அமைந்தால் குழந்தைகளுக்கு பதுகாப்பாக இருக்காது? மேலும் ஊரை விட்டு ஒதுக்கு புறமாக உள்ளது. வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று கூறியதும்,

    மீண்டும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஸ்ரீ நகர் என்ற இடத்திற்கு அழைத்து சென்ற கட்சியினர் அங்கும் சரியான இடம் அமையாததால் அமைச்சர் தான் வந்த காரை விட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலில் கட்சிக்காரர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி ஊரின் மைய பகுதியில் உள்ள, ஏவிஎம் நகர் பழைய தண்ணீர் தொட்டி இருந்த இடத்திற்கு சென்று பார்த்து இடத்தை தேர்வு செய்தார்.

    பிறகு அங்கு பூமி பூஜை செய்து வேலையை துவக்கிவைத்தார். கட்சி பொறுப்பில் பலர் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் கட்ட, இடத்தை தேர்வு செய்யாமல் அமைச்சர் சென்று ஊரின் மையப்பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் வியப்பாக பேசப்பட்டதோடு அமைச்சரையும் மக்கள் பாராட்டினர். #TNMinister #Karuppannan
    ×