என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிறந்தநாளில் வழக்கமாக ரஜினி சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார்.
    • பிறந்தநாளில் ரஜினியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருகை தந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

    தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளாக ஒரு சகாப்தமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் ஒட்டு மொத்த தமிழகத்திலும் ரஜினி என்ற பெயர் மந்திர சொல்லாக ஒலித்து வருகிறது. அவரது தனி ஸ்டைல்தான், ரஜினியின் தாரக மந்திரம். இந்த மந்திரம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.

    இத்தனை ஆண்டு காலம் திரை உலகில் தனி சகாப்தத்தை உருவாக்கி வரும் ரஜினி நடிப்பில் படம் எப்போது வரும் என காத்திருக்கும் ரசிகர்கள், தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் காத்திருக்கின்றனர்.

    அந்த அளவுக்கு சினிமாவில் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கி உள்ளார் ரஜினிகாந்த். இது நான் சேர்த்த கூட்டம் அல்ல. இது தானாக சேர்ந்த கூட்டம் என ரஜினியின் கம்பீர குரல் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டுவித்து வருகிறது.

    இந்நிலையில் ரஜினி தனது 75-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாட இருக்கின்றனர்.

    பிறந்தநாளில் வழக்கமாக ரஜினி சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார். பிறந்தநாளில் ரஜினியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருகை தந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

    நாளை 75-வது பிறந்த நாள் என்பதால் ரஜினி ரசிகர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இது தொடர்பாக ரஜினி தரப்பில் விசாரித்த போது, 'ரஜினிகாந்த் பிறந்தநாளின் போது எப்போதும் சென்னையில் இருப்பதில்லை. அதுபோல் அவரது பிறந்தநாளான நாளையும் ரஜினி சென்னையில் இல்லை எனவும், ரசிகர்களை சந்திக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.

    • ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
    • தனது மனைவியுடன் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.

    பஞ்சாபின் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள சைடேக் கிராமத்தைச் சேர்ந்த நசீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங், விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.

    ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த சீட்டுக்கு குலுகலில் தேர்வாகவே, ரூ.1.5 கோடி பரிசுத் தொகையை ராம் சிங் வென்றார்.

    இந்த விஷயம் சுற்றியுள்ள கிராமங்களில் பரவினால் யாரவது தங்களை தாக்கிவிட்டு பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் என ராம் சிங்- நசீப் கவுர் தம்பதியினர் பயந்தனர்.

    இதனால் ராம் சிங் வீட்டைப் பூட்டி, தனது செல்போனை அணைத்துவிட்டு, தனது மனைவியுடன் யாருக்கும் சொல்லாமல் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.

    இது குறித்து அறிந்ததும், பரித்கோட் போலீசார் ராம் சிங் மற்றும் நசீப் கவுரைத் தொடர்பு கொண்டனர்.

    மக்களின் பாதுகாப்பிற்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்றும், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் போலீசார் அவர்களிடம் உறுதியளித்துள்ளனர். இதனால் தைரியம் அடைந்தராம் சிங் மற்றும் நசீப் கவுர் வீடு திரும்பினர். 

    • மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
    • தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.

    எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார்.
    • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார்.

    பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து வெங்கட்ராமனுக்கு பதில் பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது.

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் 15 நாட்கள் தொடர் விடுப்பில் உள்ளதால் அபய்குமாருக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    • நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
    • எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று பேசும் போது அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்று அமித்ஷா மிகவும் பதட்டமாக இருந்தார். அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். இவை அனைத்தையும் நேற்று அனைவரும் பார்த்தனர்.

    நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அவர் எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை. களத்துக்கு வாருங்கள், எனது அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பு பற்றியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று நான் அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால், எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.

    சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    திருப்பரங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் நிஷாந்த், தனது மாமா லொள்ளு சபா மாறன் நண்பர்கள் பால சரவணன், கும்கி அஸ்வின் ஆகியோருடன் திருச்சிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு நாயகி காயத்ரியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்திக்கிறார்.

    ஒரு கட்டத்தில் நிஷாந்த் காதலை சொல்லும் போது, காயத்ரி மறுக்கிறார். காதல் தோல்வியை தாங்க முடியாத நிஷாந்த் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது ஆமானுஷ்ய சக்தி கொண்ட மொட்டை ராஜேந்திரன், நிஷாந்த் தற்கொலையை தடுக்கிறார்.

    இறுதியில் நிஷாந்த், காயத்ரியுடன் இணைந்தாரா? மொட்டை ராஜேந்திரன் யார்? நிஷாந்த் தற்கொலையை மொட்டை ராஜேந்திரன் தடுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நிஷாந்த் ரூசோ காதல், ஆக்ஷன், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் காயத்ரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    மொட்டை ராஜேத்திரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஸ்வின் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். அர்ஷத் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.

    இயக்கம்

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் பாண்டியன். இதில் பேண்டஸி, காமெடி கலந்த திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி பேண்டஸி என திரைக்கதையை நகர்த்திருக்கிறார். காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. முதல் பாதி திரைக்கதை வழக்கமான சினிமா தனம் போல் அமைந்திருப்பது படத்திற்கு பலவீனம்.

    இசை

    சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    ரேட்டிங்- 2/5

    • சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .
    • ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார்.

    குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவஹர்லால் நேரு பாபர் மசூதியைக் கட்ட அரசு நிதி நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அதை உறுதியாக எதிர்த்து தடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு ஆதாரமாக அப்போதைய பாஜக தலைவர்கள் மற்றும் சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .

    அந்த நாட்குறிப்பின்படி, 1950 செப்டம்பர் 20 அன்று நேரு, பாபர் மசூதி குறித்து ஒரு கேள்வியை எழுப்பியதாகவும், அதற்குப் படேல், "மசூதி கட்ட அரசு பணம் கொடுக்க முடியாது" என்று தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்களை மறுத்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று சாடினார்.

    மேலும், மணிபென் படேலின் நாட்குறிப்பின் அசல் குஜராத்தி பக்கங்களை இன்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கிடம் ஜெய்ராம் ரமேஷ் தந்துள்ளார்.

    முன்னதாக ராஜ்நாத் சிங் பரப்பும் கருத்துகளுக்கும் அசல் பதிவுகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

    நேரு எப்போதும் கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ என எந்த மத ஸ்தாபனத்திற்கும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவதை எதிர்த்தார் என்றும், மாறாக ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    • தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன.
    • வருகிற 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.
    • டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி..

    இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

    எல்லாரும் இந்திய மக்கள்,

    எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

    எல்லாரும் இந்நாட்டு மன்னர்"- என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.

    டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை.
    • குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தை சேர்ந்த திருமணமான ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் பலமுறை நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.

    சம்பவத்தன்று காதலன் வீட்டுக்கே சென்று அந்த இளம்பெண் ஜாலியாக இருந்துள்ளார். இந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்துள்ளது. காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துள்ளார்.

    இதனால் பதறிப்போன கணவர், தனது காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனால் காதலி பதற்றம் அடைந்தார். காதலனின் மனைவி பால்கனிக்கு வந்து விட்டால் நாம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், காதலி பால்கனியின் மேல் பகுதியில் இருந்து, கீழே உள்ள வீட்டின் பால்கனி நோக்கி இறங்க ஆரம்பித்தார்.

    அங்குள்ள 10-வது மாடியில் இருந்து குழாய் பைப்பை பிடித்து இறங்கினார். இதை அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் கீழே இருக்கும் வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்டுள்ளார். உடனே அந்த வீட்டில் இருந்தவர், வீட்டுக்குள் பாதுகாப்பாக இழுத்து, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டார். இதனை அங்குள்ள குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த ஒரு பயனர், இந்த பெண் ஸ்பைடர்மேன் குரூப்பில் சேர்ந்து கொள்ளலாம் போலயே? என்று கிண்டலாக பதிவிட்டார்.

    மற்றொருவர், இதில் திருப்பம் என்னவென்றால் இந்த பெண்ணை காப்பாற்றிய நபரே அந்த கணவரின் மனைவியிடம் அவள் இங்கேதான் இருக்கார் என்று சொல்லி இருப்பார் போல என பதிவிட்டுள்ளார்.

    சில நெட்டிசன்கள், ஒரு ஆணுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பது சரியல்ல. ஒருத்தனுக்காக உயிரையே ஆபத்தில் விட வேண்டிய அவசியமில்லை. இப்படி ஆபத்தில் விட்டுவிட்டு, தன் மனைவிக்காக வாழ்பவனை நீ உதறி தள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

    • பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.
    • சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி.

    மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்;

    தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள்!

    நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.

    பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.

    பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம்.

    சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சியாஸ் கார் இந்தியச் சந்தையில் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
    • அனைத்து வேரியண்ட்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

    மாருதி சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள், தள்ளுபடி வழங்குகிறது. விற்பனையை அதிகப்படுத்தவும், ஆண்டு இறுதியில் வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மாருதியின் இன்விக்டோ, ஜிம்னி மற்றும் பிரான்க்ஸ் கார் மாடல்களுக்கு டிசம்பர் மாதத்துக்கான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி இன்விக்டோ காருக்கு ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதில், ரொக்கத் தள்ளுபடி ரூ.1 லட்சம் வரை, ஸ்கிராப் அல்லது எக்சேஞ்ச் போனஸ் ரூ.1.15 லட்சம் வரை அடங்கும்.

    சியாஸ் கார் இந்தியச் சந்தையில் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. இருப்பினும் ஸ்டாக் உள்ளவரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் காருக்கு ரூ.1.3 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து வேரியண்ட்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

    மாருதி ஜிம்னி காருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், இக்னிஸ் காருக்கு ரூ.80 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி கிடைக்கும். பலேனோவுக்கு ரூ.60 ஆயிரமும், XL6 மாடலுக்கு ரூ.60 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ×