search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பம்"

    • குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது.
    • கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்தது.

    இதனால் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியது.

    மீதமுள்ள வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணிகளும் ஒருசில இடங்களில் ஆரம்பித்து உள்ளன.

    பொதுவாக அறுவடை காலகட்டங்களில் 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லின் விலை ரூ.800 வரையிலும் குறைந்துவிடும் நிலையில், தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாகவும், அரசின் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவும் ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே பருவ மழைக்கு பின்னர் நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பயிர் பிடிக்கும் கால கட்டத்தில் இருந்து வருகிறது.

    அவைகளுக்காக இந்த மாதம் 31-ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாப நாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,504 கனஅடி நீர் வெளியறே்றப்படும் நிலையில், 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 95 அடியாக குறைந்துள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் இன்றைய நிலவரப்படி 81.89 அடி நீர் இருப்பு உள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி நீர் திறந்து விடப்படு கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.92 அடியாகவும் குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத் திலும் கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 46.70 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 61.25 அடியாகவும் குறைந்துள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் 50.86 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் உள்ளது.

    இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவி களும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது. அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
    • அதிகபட்சமாக பூதலூரில் 44 மி.மீ. பதிவானது.

    தஞ்சாவூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.

    தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் பலத்த காட்சியுடன் கனமழை பெய்தது.

    பின்னர் இரவிலும் மீண்டும் மழை பெய்தது.

    இதேபோல் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி -மின்னலுடன் கனமழை கொட்டியது. தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    இதேபோல் வல்லம், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பூதலூரில் அதிகபட்சமாக 44 மி.மீ. மழை அளவு பதிவானது.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை முடிவடைந்த மழை அளவு (மி.மீ ) வருமாறு :-

    பூதலூர் -44, திருக்காட்டுப்பள்ளி -36.20, வல்லம் -26, கும்பகோணம் -19, பாபநாசம் -18, திருவையாறு -8, தஞ்சாவூர் -5. மாவட்டத்தில் ஒரே நாளில் 166.80 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரானில் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியுள்ளது.
    • நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல நாட்கள் அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி கூறுகையில், "புதன் மற்றும் வியாழன் (நாளை மற்றும் நாளை மறுநாள்) விடுமுறை தினங்களாக இருக்கும். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறியது" என்றார்.

    அதன்படி, நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • புவி வெப்பத்தை குறைக்க மரம் நடுவது அவசியம்.
    • தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை வகித்து பேசும்போது, பொதுமக்களிடையே தூய்மை உறுதிமொழி ஏற்றல், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை,மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்தல், நாப்கின்கள் பயன்ப டுத்துதல், கழிப்பறைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. என்றார்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசும்போது, தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பம் அதிகரித்து வருகிறது.

    இதனால் எதிர்காலத்தில் நாம் பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே மரங்களை நட்டு 33 சதவீத வனபரப்பை அதிகரித்து பூமியை குளிர்ச்சிபடுத்துவதால் மட்டுமே எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தன் கடமையாக கருதி மரக்கன்று நடுவதை இயக்கமாக கொண்டு செல்லவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, அலுவலர்கள் சிற்றரசு, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், செந்தில்குமார் மற்றும் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

    • பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
    • மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம்.

    நியூயார்க்:

    பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது.

    தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி வருகிறது.

    நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பனிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக சீனாவின் 126 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி இருந்ததையும், கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதையும் ஆராயப்பட்டது.

    இந்த வெப்ப நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருவாகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். மேலும் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து உள்ளதாகவும், உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்ப காற்றை உணர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 1.20 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக இந்த ஜூலை இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.

    ஜெர்மனியின் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹவுஸ்டீன் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த வெப்பத்தை விட இந்த ஜூலை மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. முழுமையான உலகளாவிய சராசரி வெப்ப நிலையின் அடிப்படையில் எப்போதும் வெப்பமான மாதமாக இது இருக்கும்.

    மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம். எல் நினோவின் விளைவுகள் ஆண்டின் 2-ம் பாதியில் ஜூன் மற்றும் ஜூலையில் மட்டுமே முழுமையாக வெளி வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அதிக வெப்பம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது
    • வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தன.

    இந்த நிலையில் நேற்று தஞ்சை , பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பொழிந்தது. இதனால் நேற்று வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்தது.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 74.80 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளன.

    தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையுமென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி தஞ்சையில் இன்று வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்பட்டன.

    தொடர்ந்து அடுத்த வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    பாபநாசம் -7, பேராவூரணி -6.40, திருவிடைமருதூர் -6.20, மஞ்சளாறு -5.80, தஞ்சாவூர் -5, பட்டுக்கோட்டை -5, கும்பகோணம் -4.40, அய்யம்பேட்டை - 4, மதுக்கூர்-3.

    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    வளிமண்டலத்தில் நிலவும் வறண்ட நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
    • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

    இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.
    • கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் அளவு 106 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் கடல் காற்று உள்ளே வர தாமதமாவதால் மாலையிலும் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.

    நேற்று பகலில் 106 டிகிரி வெயிலை கடந்த நிலையில் பிற்பகலில் ஆந்திர கடலோரத்தில் இருந்து தெற்கு நோக்கி வீசிய கடல் காற்று சென்னையின் வெப்பத்தை ஓரளவு தணித்தது. அடுத்த சில நாட்களுக்கும் வெயில் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

    நேற்று பகல் 11 மணிக்கு மேல் கடல் காற்று வந்ததால் வெப்பம் குறைந்தது. அதே போல் இன்றும் வருமா? என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

    கொளுத்தும் இந்த வெயிலுக்கு இடையேயும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • 3 நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
    • அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் தஞ்சையில் கனமழை கொட்டியது.

    தஞ்சை அடுத்த திருவையாறில் கனமழை பெய்தது.

    தொடர்ந்து இடைவிடாத பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    திருவையாறில் மட்டும் ஒரே நாளில் 70 மி.மீ. அளவுக்கு மழை கொட்டியது.

    இதேபோல் வல்லம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யுமா? அல்லது அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    திருவையாறு -70, திருக்காட்டுப்பள்ளி -55.40, பூதலூர் -53, அய்யம்பேட்டை -42, பாபநாசம்-32, தஞ்சாவூர் -25, வல்லம் -12.

    • சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
    • ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். காலை யில் இருந்தே மாவட்டம் முழுவதும் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    நாகர்கோவில் நகரில் மதியம் நேரங்களில் அடித்து வரும் சுட்ெடரிக்கும் வெயி லின் காரணமாக சாலைகளில் கானல்நீர் தெரியும் அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக சுற்றுலா தலங்களிலும் கூட்டம் குறைவாகவே காணப் படுகிறது. கன்னியா குமரி, குளச்சல் பீச், சொத்த விளை பீச், வட்டக்கோட்டை பகுதிகளில் வழக்கமாக கோடை நேரங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரிக்கும். ஆனால் தற்பொழுது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

    சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அருந்த தொடங்கியுள்ளனர். இதனால் குளிர்பானங்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இளநீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வேறு மாவட்டங்களில் இருந்தும் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ரோட்டோரங்களில் இளநீர் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    சுங்கான் கடை, சுசீந்திரம், நாகர்கோவில் பகுதிகளில் சாலை ஓரங்களில் அதிக அளவு பல்வேறு விதமான இளநீர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இளநீர் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளதையடுத்து தற்போது விலை அதிக ரித்துள்ளது. சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற இளநீர்கள் ரூ.30 முதல் ரூ.35-க்கும் விற்கப் பட்டு வருகிறது.

    வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளநீர் அருந்த தொடங்கியுள்ளனர். தர்ப்பூசணி விற்ப னையும் அமோகமாக நடந்து வருகிறது.

    கரியமாணிக்கபுரம், கன்னியாகுமரி, மார்த்தாண் டம் பகுதிகளில் தர்பூசணி விற்பனைக்கு அதிக அளவு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நுங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நுங்குகளை வாங்கி வந்து சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமாக விற்ப னை செய்து வருகிறார்கள்.

    வெப்பத்திலிருந்து தப்பிக்கும் வகையில் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று உல்லாச குளியலிட்டு வருகிறார்கள். திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவு அங்கு குவிந்துள்ளனர்.

    ×