search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைவு"

    • குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது.
    • கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்தது.

    இதனால் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியது.

    மீதமுள்ள வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணிகளும் ஒருசில இடங்களில் ஆரம்பித்து உள்ளன.

    பொதுவாக அறுவடை காலகட்டங்களில் 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லின் விலை ரூ.800 வரையிலும் குறைந்துவிடும் நிலையில், தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாகவும், அரசின் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவும் ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே பருவ மழைக்கு பின்னர் நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பயிர் பிடிக்கும் கால கட்டத்தில் இருந்து வருகிறது.

    அவைகளுக்காக இந்த மாதம் 31-ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாப நாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,504 கனஅடி நீர் வெளியறே்றப்படும் நிலையில், 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 95 அடியாக குறைந்துள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் இன்றைய நிலவரப்படி 81.89 அடி நீர் இருப்பு உள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி நீர் திறந்து விடப்படு கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.92 அடியாகவும் குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத் திலும் கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 46.70 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 61.25 அடியாகவும் குறைந்துள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் 50.86 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் உள்ளது.

    இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவி களும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது. அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 83.09 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியாக நீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. குடிநீ ருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 38.99 அடியாக உள்ளது. இதே போல் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து 17 நாட்களாக இருந்து வருகிறது.

    இது ஒரு புறம் இருக்க பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 30 அடியாக இருக்கும் பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 3.51 அடியாக குறைந்து உள்ளது.

    • பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ,000 மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.கறிக்கோழி நுகா்வை பொறுத்தே பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். புரட்டாசி விரதம் காரணமாக தற்போது கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது.இதனால் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன. தற்போது புரட்டாசி மாத விரதம் காரணமாக கோழி இறைச்சி நுகா்வு குறைந்துவிட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கம் அடைவதை தவிா்க்கும் வகையில் 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

    • தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.
    • எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-–24ம் ஆண்டிற்கு, நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,183 எனவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ, 2,203 என மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளது.

    தமிழக அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 82 கூடுதலாகவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 107 கூடுதலாகவும் அறிவித்து விலை நிர்ணயம் செய்துள்ளது.

    தமிழக அரசு அறிவித்த விலைப்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,265, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,310 என, செப். 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

    2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, வேலை ஆட்கள் கூலி மிகவும் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்து. மேலும், உரம், மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும், பல மடங்கு உயர்ந்துள்ளது.

    தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.
    • கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.

    மூலனூர்

    தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் சந்தை நடந்தது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து இருந்தது.

    இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மூலனூர் பகுதியில் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
    • தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன.

    ஊட்டி,

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவை தற்போது விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள மலை காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் அறுவடையாகும் காய்கறிகள் உள்ளூர் மார்க்கெட் மட்டுமின்றி ேமட்டுப்பாளையம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தற்போது குறைந்து உள்ளது. அங்கு நாள்தோறும் சாராசரியாக, 25 டன்கள் வரை காய்கறி வரத்து இருக்கும். ஆனால் தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன. எனவே ஊட்டி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. 

    • கடற்கரை வெறிச்சோடியது
    • மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசனை யொட்டியும் வருகை அதிகமாக இருக்கும்.

    தற்போது சீசன் இல்லாத இந்த நேரத்திலும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இருப்பினும் நாளொன்றுக்கு சராசரி 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடைபடுகிறது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து வருகிறது.

    சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை. இதனால் அதிகாலை வேளையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும், மாலை வேளையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிட்டது.

    • சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.
    • மொத்தம் உள்ள 34 அங்காடிகளில் தலையாட்டி பொம்மைகள் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் முன்பு தலையாட்டி பொம்மை விற்பனை கடைகள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு இந்த கடைகள் அகற்றப்பட்டன.

    இதையடுத்து மீண்டும் பெரிய கோவில் பகுதியில் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் என்று பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், வியாபாரிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் 34 தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் என்ற பெயரில் அங்காடி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.

    இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலரின் முயற்சியால் ஒரே இடத்தில் அங்காடிகள் அமைக்கப்பட்டு இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மொத்தம் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன.

    இங்கு விலை குறைவாகவும் தரமாகவும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும் என்றார்.

    தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.

    தற்போது ஒரே இடத்தில் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • செண்டு மல்லி பூக்கள் விலை குறைந்ததால் விற்பனை இல்லை
    • பெரும்பாலான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காருவள்ளி, கொங்கு பட்டி, பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி, கொங்காரப்பட்டி, ஜோடுகுளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவ சாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வருகின்றனர்.

    இதில் சாமந்தி பூ கிலோ வுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையும், தக்காளி ரோஸ் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.120-க்கும், செண்டுமல்லிரூ.20 மற்றும் பல வகையான பூக்கள் வரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நேரங்களில் வியாபாரிகள் போட்டி போட்டு குறைந்து விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதில் செண்டுமல்லி ரூ.20க்கு விற்கப்படுவதாலும், விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவ தாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். பெரும்பா லான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைந்துள்ளது.
    • இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    வட மாநிலங்களில் பண்டிகைக் காலமாக இருப்பதால் முட்டை விற்பனை சரிந்துள்ளது, இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. ஆடி மாதம் பிறக்க உள்ளதால், மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்துள்ளது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே கடந்த வாரம் 60 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 30 காசுகள் குறைத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

    தொடர் மழையால் தாராளமாய் கிடைக்கும் பசுந்தீவனங்கள்: மின்னாம்பள்ளி மாட்டு சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பேளூர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில், விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், பால் உற்பத்தியில் வருவாய் ஈட்டி கொடுக்கும் கறவை மாடுகளை விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    கறவைமாடுகளுக்கு 'உறைவிந்து' செலுத்தி, குறைந்த பராமரிப்பு செலவில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதிக பால் கறக்கும் உயர்ரக கலப்பின பசுக்களை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கி கொடுத்ததாலும், சேலம் மாவட்டத்தில் கறவைமாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் தொழிலாக உயர்ந்தது.

    வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி கருமாபுரம், அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம், முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெரிய அளவில் பிரபல தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் பால் பொருட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாடு முழுவதும் மதிப்புக்கூட்டப்பட்ட பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம், பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.

    இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில், குக்கிராமங்களிலும் அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்துள்ளன. கறவைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, கால்நடைகளுக்கான பிரத்தியேக வர்த்தக மையமாக விளங்கி வருகிறது.

    மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கோடைகாலத்திலும் கால்நடைகளுக்குத் தீவனமாக மக்காச்சோளம், சோளத்தட்டை, புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் தாராளமாக கிடைத்து வருகிறது. இதனால், குறைந்த செலவில் பால் உற்பத்தி அதிகரித்து, கால்நடை வளர்ப்போருக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் கறவை மாடுகளை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நேற்று திங்கட்கிழமை கூடிய மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனைக்கு வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து மின்னாம்பள்ளி சேர்ந்த கால்நடை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:

    வாரத்திற்கு சராசரியாக 500 மாடுகள் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 200 மாடுகள் கூட விற்பனைக்கு வரவில்லை. வற்ற கறவை மாடுகளை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர்.

    ×