search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் தொடர் மழை-காய்கறி வரத்து குறைவு
    X

    ஊட்டியில் தொடர் மழை-காய்கறி வரத்து குறைவு

    • ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
    • தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன.

    ஊட்டி,

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவை தற்போது விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள மலை காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் அறுவடையாகும் காய்கறிகள் உள்ளூர் மார்க்கெட் மட்டுமின்றி ேமட்டுப்பாளையம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தற்போது குறைந்து உள்ளது. அங்கு நாள்தோறும் சாராசரியாக, 25 டன்கள் வரை காய்கறி வரத்து இருக்கும். ஆனால் தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன. எனவே ஊட்டி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.

    Next Story
    ×