search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி வெப்பம்"

    • காடுகளை அழிப்பதால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகி வருகிறது.
    • மறுசுழற்சி அல்லது எளிதில் மக்ககூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அனைவரையும் வரவேற்றார்.

    கலெக்டர் சாருஸ்ரீ கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

    பசுமை மிஷன் உதவி இயக்குனர் மனீஸ் மிஸ்ரா, பூவுலகின் நண்பர்கள் இயக்க சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன், பருவநிலை மாற்ற கொள்கை நிபுணர் அருண்பாண்டியன், அண்ணா பல்கலைகழக பேராசிரியர் பவுத்ர பிரியா, டாக்டர் பாலாஜி, டாக்டர் செல்வம், டாக்டர் வேல்முருகன், டாக்டர் பாரதி, சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

    கருத்தரங்கில் காடுகளை அழிப்பதால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகி வருகிறது.

    இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது எனவே காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மறுசுழற்சி அல்லது எளிதில் மக்ககூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை, நீர்நிலை பாதுகாப்பு போன்றவை முக்கியமானவை எதிர்கால சந்ததிகளுக்கு நாம் வளமான பூமியை விட்டு செல்லவேண்டும் என வலியுருத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி குழும பொது மேலாளர் மாறன்,மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி, பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், வனம் அமைப்பை சேர்ந்த கலைமணி, வனத்துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
    • மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம்.

    நியூயார்க்:

    பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது.

    தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி வருகிறது.

    நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பனிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக சீனாவின் 126 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி இருந்ததையும், கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதையும் ஆராயப்பட்டது.

    இந்த வெப்ப நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருவாகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். மேலும் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து உள்ளதாகவும், உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்ப காற்றை உணர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 1.20 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக இந்த ஜூலை இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.

    ஜெர்மனியின் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹவுஸ்டீன் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த வெப்பத்தை விட இந்த ஜூலை மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. முழுமையான உலகளாவிய சராசரி வெப்ப நிலையின் அடிப்படையில் எப்போதும் வெப்பமான மாதமாக இது இருக்கும்.

    மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம். எல் நினோவின் விளைவுகள் ஆண்டின் 2-ம் பாதியில் ஜூன் மற்றும் ஜூலையில் மட்டுமே முழுமையாக வெளி வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அதிக வெப்பம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    ×