search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Earth Is Hot"

    • காடுகளை அழிப்பதால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகி வருகிறது.
    • மறுசுழற்சி அல்லது எளிதில் மக்ககூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அனைவரையும் வரவேற்றார்.

    கலெக்டர் சாருஸ்ரீ கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

    பசுமை மிஷன் உதவி இயக்குனர் மனீஸ் மிஸ்ரா, பூவுலகின் நண்பர்கள் இயக்க சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன், பருவநிலை மாற்ற கொள்கை நிபுணர் அருண்பாண்டியன், அண்ணா பல்கலைகழக பேராசிரியர் பவுத்ர பிரியா, டாக்டர் பாலாஜி, டாக்டர் செல்வம், டாக்டர் வேல்முருகன், டாக்டர் பாரதி, சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

    கருத்தரங்கில் காடுகளை அழிப்பதால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகி வருகிறது.

    இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது எனவே காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மறுசுழற்சி அல்லது எளிதில் மக்ககூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை, நீர்நிலை பாதுகாப்பு போன்றவை முக்கியமானவை எதிர்கால சந்ததிகளுக்கு நாம் வளமான பூமியை விட்டு செல்லவேண்டும் என வலியுருத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி குழும பொது மேலாளர் மாறன்,மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி, பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், வனம் அமைப்பை சேர்ந்த கலைமணி, வனத்துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    ×