search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகள்"

    • குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது.
    • கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்தது.

    இதனால் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியது.

    மீதமுள்ள வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணிகளும் ஒருசில இடங்களில் ஆரம்பித்து உள்ளன.

    பொதுவாக அறுவடை காலகட்டங்களில் 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லின் விலை ரூ.800 வரையிலும் குறைந்துவிடும் நிலையில், தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாகவும், அரசின் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவும் ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே பருவ மழைக்கு பின்னர் நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பயிர் பிடிக்கும் கால கட்டத்தில் இருந்து வருகிறது.

    அவைகளுக்காக இந்த மாதம் 31-ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாப நாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,504 கனஅடி நீர் வெளியறே்றப்படும் நிலையில், 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 95 அடியாக குறைந்துள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் இன்றைய நிலவரப்படி 81.89 அடி நீர் இருப்பு உள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி நீர் திறந்து விடப்படு கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.92 அடியாகவும் குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத் திலும் கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 46.70 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 61.25 அடியாகவும் குறைந்துள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் 50.86 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் உள்ளது.

    இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவி களும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது. அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.61 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 798 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.04 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணை கள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.
    • தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணை களுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளவான 25 அடியை எட்டி உள்ளது. இதேபோல் சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.

    48 அடி ெகாள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.26 அடியாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 70.90 அடியாக உள்ளது.அணைக்கு விநாடிக்கு 445 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப் பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது.
    • அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அணை பகுதிகளிலும், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று நாங்குநேரி, சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரி யில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணை பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. பாபநாசம் மற்றும் சேர்வ லாறு அணை பகுதிக ளுக்கு வினாடிக்கு 301 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 504 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 96.62 அடி நீர் உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.65 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 48.25 அடியாகவும் உள்ளது. 52.50 அடியாக உள்ள அந்த அணை நிரம்ப இன்னும் 4 அடி நீரே தேவை. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் அந்த அணை நிரம்பிவிடும்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடு முறை என்பதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வரு கிறது. வெளி மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்துள்ளதால் அருவிக்கரை கள் நிரம்பி காணப்படுகிறது.

    மாவட்டத்தில் செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானமும் மேக மூட்டத்துடன் காணப்படு வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதி களை பொறுத்தவரை கருப்பாநதி மற்றும் அடவி நயினார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது.

    அந்த அணையில் 63.5 மில்லிமீட்டர் மழை கொட்டி யது. அடவிநயினாரில் 28 மில்லிமீட்டர் மழை பதிவாகி யது. 72.10 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. இதேபோல் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 15 அடி நீரே தேவை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது.
    • தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ந்த சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

    மேலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கோத்தகிரியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அங்கு இதமான காலநிலை நிலவி வருகிறது. கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
    • குண்டாறு அணை பகுதியில் 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    தென்காசி

    தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது. தென்காசியில் 4 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 2.2 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொண்ட குண்டாறு அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் 34.62 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 1 அடி நீரே தேவை. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 93 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 94 அடியானது.

    மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி-நெல்லை

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டார பகுதியான கடம்பூரில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடம்பூர், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அங்கு 30 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடம்பூரில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாங்குநேரி மற்றும் நெல்லையில் தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணை பகுதிகளில் மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    • சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது.
    • கயத்தாறு பகுதியில் 5.5 சென்டிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று சாரல் மழை பெய்தது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் பலத்த மழை கொட்டியது.

    அங்கு அதிகபட்சமாக 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சேர்வலாறு, பாபநாசம் அணை பகுதிகளில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் நேற்று முன்தினம் 5 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், நேற்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்துள்ளது. அங்கு 4.5 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகி உள்ளது.

    அடவிநயினார், சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது. தொடரும் கோடை மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த காற்று அடித்தது.

    கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மதியத்திற்கு பின்னர், வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 5.5 சென்டிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 10 மில்லிமீட்டரும், கடம்பூரில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    • சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
    • வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது.

    உடுமலை : 

    பி.ஏ.பி., திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு உள்ளிட்ட 8 தொகுப்பு அணைகளில் இருந்து பாசனம், குடிநீர் மற்றும் கேரள மாநிலத்துக்கு நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது. 72 அடி உயரம் உள்ள பரம்பிக்குளம் அணையில் 18.67 அடி நீர் இருப்பு உள்ளது. வரத்து 35 கனஅடியாக உள்ளது.மொத்தம் 120 அடி உயரம் உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக சரிந்துள்ளது. வினாடிக்கு 136 கனஅடி நீர் வரத்து உள்ளது.நீர்மட்டம் வேகமாக சரிவதால் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா என பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு, கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். திருமூர்த்தி பாசனத்துக்கு நீர் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது. காடம்பாறையில் இருந்து ஆழியாறு அணைக்கு நீர் எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கருப்பாநதி அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் பகுதியில் 9.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாபநாசம் பகுதியில் 4, மணிமுத்தாறில் 4.6, சேர்வலாறு அணை பகுதியில் 4, சேரன்மகாதேவியில் 3.4, பாளையில் 1, நெல்லையில 0.4, அம்பாசமுத்திரத்தில் 3, நாங்குநேரியில் 4.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் 2, அடவி நயினார் கோவில் பகுதியில் 2, ஆய்க்குடியில் 2, சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • அருப்புக்கோட்டை பகுதிகளில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்புகளால் முழுமையாக நிரம்பாத கண்மாய்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    அருப்புக்கோட்டை,

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகி ன்றன. இதனால் மாநிலம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை ஓரளவுக்கே கை கொடுத்துள்ளது. போதிய அளவு மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீத அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளன.

    ஆனால் அருப்புக்கோட்டையில் விவசாயத்திற்கு அங்குள்ள பெரிய கண்மாய், செவல் கண்மாய், தூமைக்குளம் கண்மாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த கண்மாய்களில் எந்தவித சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் கண்மாயில் நீர் தேக்கப்படும் அளவு வெகுவாக குறைந்து ள்ளது. இதை தவிர தற்போது கண்மாய் முழுவதும் 75 சதவீதம் ஆகாய தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தாலும் போதிய தண்ணீர் கண்மாய்களில் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது.

    இதுகுறித்து அந்தப்ப குதி விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்ய வைத்து இறைவன் வரம் கொடுத்தாலும் அதிகாரிகள் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப்பகதியினர் அதிருப்தியுடன் தெரிவித்த னர்.

    • மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 53 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    அணைக்கு வினாடிக்கு 134 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    இதேபோல் பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீடடரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.05 அடி நீர்இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 463.89 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 404.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
    • மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த சாரல் மழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 1014 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தோவாளை சானல், அனந்த னார் சானல் உள்பட அனைத்து சானல்களிலும் ஷிப்டு முறையில் வெளி யேற்றப் பட்டு வருகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.95 அடியாக உள்ளது. அணைக்கு 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 439 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.11 அடியாக உள்ளது. அணைக்கு 304 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.02 அடியாக உள்ளது. அணைக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.12 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.70 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.55 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.70 அடியாக உள்ளது. அணையில் இருந்து பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×