என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் போராட்டம்"
- டெல்லி சலோ பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது.
- இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் டெல்லி சாலைகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடுக்கப்படுகிறது.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. ஆனால் எம்.எஸ்.சுவாமிநாதன் சொன்னதைச் செயல்படுத்த அவர்கள் தயாராக இல்லை.
விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறி உள்ளதை பா.ஜ.க. அரசு செய்யவில்லை.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.
இதேபோல், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் அடிப்படை உரிமைகளுக்காக போராடியதற்காக கண்ணீர் புகைகுண்டுகளால் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?
விவசாயிகள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க மத்திய அரசு தவறிவிட்டது.
விவசாயிகளின் மீதான அடக்குமுறை தேசத்திற்குத் தீங்கு விளைவிக்கும். ஈகோ, அதிகாரவெறி, இயலாமை ஆகியவற்றை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள், இந்த விவசாயிகள் தான் உயர்ந்தவர்கள். நம் அனைவரையும் அவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள். அரசின் அடாவடித்தன செயலுக்கு எதிராக விவசாயிகளுக்கு நாம் துணை நிற்போம் என்றார்.
- போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
- இதில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
பிரமாண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி எல்லைப் பகுதிக்கு படையெடுத்தனர்.
நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மூலம் எல்லைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வரிசைகட்டி செல்கின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது இன்று போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி சென்றனர்.
விவசாயிகள் போராட்டத்தால் இன்று டெல்லியில் உள்ள சாலைகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரமாக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவித்தன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.
#WATCH | Tractor driver puts on a gas mask as police use tear gas to disperse protesting farmers at the Haryana-Punjab Shambhu border.#FarmersProtest2024 pic.twitter.com/iZXR3uxTaz
— ANI (@ANI) February 13, 2024
- விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
- போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.8100 வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு போராட அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தங்களது கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி நின்றனர். மேலும் சில விவசாயிகள் சாலைகளில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
இந்த நிலையில் ராமச்சந்திரன், பரமசிவம், நவீன் குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்த பகுதியில் உள்ள செயின் பால் காம்ப்ளக்ஸில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த டவர் காம்ப்ளக்ஸ் மொட்டை மாடியில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ளது. இதில் 5 விவசாயிகளும் ஏறி நின்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை கீழே இறங்க கூறினர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து இறங்க மறுத்து அடம்பிடித்தனர். அதைத்தொடர்ந்து போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.
பின்னர் தலைவர் வேண்டுகோளை ஏற்று அந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு டவரில் இருந்து இறங்கினர். இதற்கிடையே தலைவரை கைது செய்தால் செல்போன் டவரில் இருந்து குதிப்பதாக அந்த விவசாயிகள் மிரட்டல் விடுத்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- "டெல்லி சலோ" எனும் முழக்கத்துடன் விவசாயிகள் தலைநகருக்குள் செல்ல உள்ளனர்
- மத்திய அமைச்சர்களுடன் விவசாய பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்
புது டெல்லியை நோக்கி "டெல்லி சலோ" (Delhi Chalo) எனும் முழக்கத்துடன் குறைந்த ஆதார விலை (Minimum Support Price) உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த விவசாயிகள் பேரணியை நடத்தி, பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர்.
நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர்.
#WATCH | Police fire tear gas to disperse protesting farmers at Punjab-Haryana Shambhu border. pic.twitter.com/LNpKPqdTR4
— ANI (@ANI) February 13, 2024
ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதட்டமாக இருந்து வருகிறது.
- கலெக்டர் அலுவலகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
- மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 1 - ந்தேதி நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் , மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மேகதாது அணை தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த நகல் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
- விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேச முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட கோரியும் அதற்கு சட்டப்படி உத்தரவு இருந்தும் திறந்து விடாமல் மெத்தன போக்கில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெரியார் கால்வாயில் இருந்து பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த பெரியாறு கால்வாய் மூலம் மேலூர் பகுதியில் 85,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு குடிநீருக்காக 10 நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் தங்கள் பகுதிக்கு விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலமாக மேலூர் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் கடையடைப்பு, ஊர்வலம், பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை ஆகிய போராட்டங்கள் இதுவரை நடத்தி முடித்து விட்டனர்.
ஆனால் இவர்களது கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் இன்று மேலூர் பஸ் நிலையம் அருகே ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மேலூர் அனைத்து வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டது. மேலும் அதன் எதிரொலியாக இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சூழ்நிலையாவது மேலூர் பகுதிக்கு பெரியார் கால்வாயில் இருந்து தாமதிக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
- பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
- மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திர மாநில விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
மின்சார மசோதா 2020 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாய மோட்டார்களுக்கு முன்பணம் செலுத்திய ஸ்மார்ட் மின் மீட்டர்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆட்சிக்கு வந்தவுடன், பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை வசதியாக புறக்கணித்தது. மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
- பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
- தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது.
மேலூர்:
மதுரை மாவட்ட விவசாயத்திற்கு வைகை அணை தண்ணீர் பிரதானமாக உள்ளது. வருடந்தோறும் அணையில் இருந்து பெரியார் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
பெரியார் கால்வாய் மூலம் மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் கடைமடை பகுதியான மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு போக விவசாயமே நடைபெற்று வருகிறது.
பெரியார் கால்வாய் தண்ணீரை நம்பி மேலூர் அருகே வெள்ளலூர் நாடு என அழைக்கப்படும் 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. வருடம் தோறும் இந்த பகுதிக்கு ஆகஸ்டு 15-ந்தேதி வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பாசன பரப்பளவும் பாதியாக குறைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டி உள்ளது.
இதையடுத்து தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது. வைகை பெரியாறு பாசன கால்வாய் மூலம் 180 நாட்கள் முறை வைத்து மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
பருவமழை காரணமாக அணையில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் மேலூர் பகுதியில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் கலெக்டர் மற்றும் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்காமல் கள்ளந்திரி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருப்பது மேலூர் பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்தும் மேலூர் பகுதிக்கும் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இன்று வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டை நத்தம்பட்டி, உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி உட்பட 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் மேலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடையடைப்பு, முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருச்சி:
காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்,
தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை.
- 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
காவிரி நீரை நம்பி புதுக்கோட்டை மாவட்டங்களில் சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்த ஜூன் 12ல், டெல்டா குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அப்போது அணை நீர்மட்டம், 103.35 அடியாக இரு ந்தது. அணையிலிருந்து, 3,000 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 13 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, 5 லட்சம் ஏக்கரில் டெல்டா விவசாயிகள் பயிர் நடவு செய்யும் பணியில் இறங்கினர்.
அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், பல இடங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லவில்லை. டெல்டா மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் போர்வெல் மற்றும் பிற நீர் ஆதாரங்களை நம்பியும், காவிரி நீரை நம்பி, 3.5 லட்சம் ஏக்கரிலும் விவசாயம் நடக்கிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இருப்பினும், கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், குடிநீர் தேவையை காரணம் காட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவையும் மதிக்காத கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து ள்ளனர்.
இந்தாண்டு பருவத்தோடு மழை பெய்யத் தொடங்கியதாலும் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.
தற்போது தண்ணீர் வரத்தும் இல்லை. மழையும் இல்லை. இதனால், சூல் பருவத்தில் நெற்கதிர்கள் வெளிவருவதற்கு பதிலாக, பதர்கள் கருகி வெளிவரும் அபாயம் உருவாகியுள்ளது
இதனால் மன வேதனையடைந்த விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறத்துவிட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் கல்லணை கால்வாய்கடைமடை பகுதி பாசன தாரர்கள் சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்