search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

    • போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
    • இதில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    பிரமாண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி எல்லைப் பகுதிக்கு படையெடுத்தனர்.

    நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மூலம் எல்லைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வரிசைகட்டி செல்கின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது இன்று போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி சென்றனர்.

    விவசாயிகள் போராட்டத்தால் இன்று டெல்லியில் உள்ள சாலைகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரமாக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவித்தன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

    Next Story
    ×