என் மலர்
உள்ளூர் செய்திகள்

உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
- விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேச முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட கோரியும் அதற்கு சட்டப்படி உத்தரவு இருந்தும் திறந்து விடாமல் மெத்தன போக்கில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






