search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வசந்த்"

    • கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கிருஷ்ணகிரி தொகுதியில் கே. கோபிநாத் போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 46 பேர் இடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    1. திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்

    2. கிருஷ்ணகிரி- கே. கோபிநாத்

    3. கரூர்- ஜோதிமணி

    4. கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத்

    5. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்

    6. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்

    7. கன்னியாகுமரி- விஜய் வசந்த்.

    திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி விட்டனர்.
    • பொதுமக்களுக்கு செய்யப் போகிற புதிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க. அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் 4 ஆண்டுகளாக களத்தில் உள்ளன.

    இந்த கட்சிகளின் தலைமையின் கீழ் உள்ள கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டன. தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

    வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி விட்டனர். பொதுமக்களின் வாக்குகளை பெற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது வழக்கம். பிரசாரத்தின் போது நாங்கள் ஜெயித்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பார்கள்.


    பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், பட்டதாரிகள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்றாற் போல் செயல் திட்டங்களை அறிவிப்பார்கள். தேர்தல் அறிக்கையாக இதனை புத்தக வடிவில் ஒவ்வொரு கட்சியினரும் தயாரித்து பிரசாரத்திற்கு முன்னதாக வெளியிடுவார்கள்.

    அந்த வகையில் தி.மு.க. அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    ஒருசில நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய இந்த அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைகிறது. விரைவில் அக்கட்சிகளின் தலைவர்கள் இதனை வெளியிட உள்ளனர்.


    தி.மு.க., அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு என தனி குழுக்கள் அமைத்து அந்த பணியை செய்து வருகின்றனர். பொது மக்களுக்கு செய்யப் போகிற புதிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும்.

    பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் நாடு முழுவதும் ஒரே வகையான தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டனர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்காளர்களை சந்திப்பதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்திற்கு செல்வார்கள். அதன் அடிப்படையில் அடுத்து வரும் நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட கட்சி தலைவர்கள் தயாராகி விட்டனர்.

    • நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோல் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வும், பாரதிய ஜனதாவுடன் பா.ம.க.வும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதேபோல் அ.தி.மு.க.வும், பாரதிய ஜனதாவும் களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் விஜய் வசந்த் எம்.பி. களம் இறக்கப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும், அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத்தும் களம் இறங்குகிறார்கள். தேர்தலுக்கான மனுதாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அவர் குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி பிரசாரம் செய்தார். இது பாரதிய ஜனதாவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் நாகராஜாதிடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக வருகைதர உள்ளனர். மேலும் விளவங்கோடு தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரிக்க உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விரைவில் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைவர்கள் பிரசாரம் செய்ய வருகை தருவதையடுத்து கன்னியா குமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன.
    • அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.

    குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை மந்திரி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன் ராதா கிருஷ்ணனை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து 2022-ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது.


    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இதில் விஜய்வசந்த் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய்வசந்த் களம் இறக்கப்படுகிறார். வேட்பாளருக்கான முறையான அறிவிப்பு இன்னும் வராமல் இருந்தாலும் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


    பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறக்கப்படுகிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டார். இது பாரதிய ஜனதாவினருக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. ஆகிய இருவரும் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். தி.மு.க.வும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டது. அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளராக உள்ள பசிலியான் நசரேத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் பிரிவு உட்பட அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி தேர்தலில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கிவிட்டார். வெற்றிக்கனியை பறிப்பதற்கு காங்கிரஸ், பாரதி ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் முட்டி மோதுகின்றன.

    நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் நான்கு முனைபோட்டி நிலவுகிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

    • பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி கோவளம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.


    இதேபோல் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் ஒதுக்கி கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
    • அனுமதியும் இன்றி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை:

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலையில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.


    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    எந்த ஒரு அனுமதியும் இன்றி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட 217 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்

    இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்

    பல்வேறு இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் மூலமாக ஏற்படும் விபத்துக்களால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகின்றது ஆகவே சாலை தடுப்புகளினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்

    மேலும் மீனவ கிராம மக்களின் கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

    மணக்குடி கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள முகத்துவாரத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரை நீட்டி வளைத்து, கூடுதலாக மேலும் 3 நேர் கற்களை அமைப்பதுடன், காயல் பகுதியில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி பாரம்பரிய நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மேலும் மணவாளக்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட சின்னவிளை ஊரில் அமைந்திருந்த மிக பழமையான குருசடி கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இடியால் பாதிக்கப்பட்டது. எனவே ஊர் மக்கள் அந்த குருசடியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட 90% பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு சில நிர்வாக காரணங்களால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    ஆகவே தங்கள் இந்த பிரச்னையை குறித்து ஆராய்ந்து இதனை சுமூகமாக முடித்து வைக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மடத்து பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் ஆண்டாண்டு காலமாக குடிநீர் கட்டணம் மின்கட்டணம் வீட்டுவரி கட்டணம் போன்றவை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் வங்கிகள் மூலமாக கடன்கள் பெற்று வீடுகள் கட்டியுள்ளனர் இந்த இடத்தில் வசித்து வரும் இவர்களின் முன்னோர்கள் தங்கள் வீடு மற்றும் இடத்தை விற்றும் வாங்கியும் மாற்றி மாற்றி பத்திரம் செய்தும் பயன்பாடுகளுக்கும் உட்படுத்தியுள்ளனர்.

    மேற்படி மடத்தின் நிலங்கள் தனிநபர்கள் பெயரில் நில உடைமைப்பதிவு மேம்பாட்டு திட்டத்தில் தவறுதலாக இணைத்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் பெயரில் எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் இந்த நிலங்களை ஆய்வு செய்துள்ளனர்.

    ஸ்ரீ ராமபகவதி கோவில் என்ற தனியார் கோவில் இவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இதனை தவறுதலாக மடம் சொத்து என்று அறிவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 10-10-2019 -அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தீர்ப்பு படி திருக்கோயில் மடம் நிலத்தை மட்டும்தான் மீட்டிருக்கவேண்டும். ஆனால் குடியிருப்பு பகுதியும் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் கடந்த 24-04-2020 அன்று அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் இந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அகவே இங்கு வசித்து வரும் குடும்பங்களை இந்த நிலத்தில் தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சொத்து வரி செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    • சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.
    • மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கொல்லங்கோடு வள்ளவிளை கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த வள்ளவிளை இடப்பாடு கடலோர சாலையை சரி செய்ய தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களுடன் சேர்ந்து தொடர் முயற்சிகள் எடுத்த பலனாக சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.

    இந்த சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


    அதனை தொடர்ந்து நீரோடி கிராமத்தில் இருந்து மார்த்தாண்டம் வரை புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பங்கு தந்தையர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் எழுதிய "மன் கீ பாத். மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்" எனும் புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெய ரஞ்சன் புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி மண்டல வாணிப அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்று பேசுகையில், நாட்டில் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை மோடி தனது கைப்பாவையாக வைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியாவில் உடனுக்குடன் தரவுகளை எடுக்க முடியும். ஆனால் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமா்ப்பிக்க 4 மாதங்கள் ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டுள்ளது. ஸ்டேட் வங்கி இப்படி கூற பிரதமர் நரேந்தி ரமோடி அளித்துள்ள அழுத்தமே காரணம். எனவே கால அவகாசம் இன்றி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், டாக்டர் சிவக்குமார், மண்டல தலைவர் சிவபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சுசீந்திரம்:

    உலக பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. இந்த சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், அழகப்பபுரம் பேரூராட்சி, ஆரோக்கியபுரம் பேரூராட்சி மற்றும் லீபுரம் பேரூராட்சியில் அமைத்த விளக்குகளை மக்கள் தேவைக்காக காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×