என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி ஆட்சியரிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு
- நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்
இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்
பல்வேறு இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் மூலமாக ஏற்படும் விபத்துக்களால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகின்றது ஆகவே சாலை தடுப்புகளினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்
மேலும் மீனவ கிராம மக்களின் கோரிக்கைகளையும் முன் வைத்தார்.
மணக்குடி கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள முகத்துவாரத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரை நீட்டி வளைத்து, கூடுதலாக மேலும் 3 நேர் கற்களை அமைப்பதுடன், காயல் பகுதியில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி பாரம்பரிய நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் மணவாளக்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட சின்னவிளை ஊரில் அமைந்திருந்த மிக பழமையான குருசடி கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இடியால் பாதிக்கப்பட்டது. எனவே ஊர் மக்கள் அந்த குருசடியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட 90% பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு சில நிர்வாக காரணங்களால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
ஆகவே தங்கள் இந்த பிரச்னையை குறித்து ஆராய்ந்து இதனை சுமூகமாக முடித்து வைக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மடத்து பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் ஆண்டாண்டு காலமாக குடிநீர் கட்டணம் மின்கட்டணம் வீட்டுவரி கட்டணம் போன்றவை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் வங்கிகள் மூலமாக கடன்கள் பெற்று வீடுகள் கட்டியுள்ளனர் இந்த இடத்தில் வசித்து வரும் இவர்களின் முன்னோர்கள் தங்கள் வீடு மற்றும் இடத்தை விற்றும் வாங்கியும் மாற்றி மாற்றி பத்திரம் செய்தும் பயன்பாடுகளுக்கும் உட்படுத்தியுள்ளனர்.
மேற்படி மடத்தின் நிலங்கள் தனிநபர்கள் பெயரில் நில உடைமைப்பதிவு மேம்பாட்டு திட்டத்தில் தவறுதலாக இணைத்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் பெயரில் எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் இந்த நிலங்களை ஆய்வு செய்துள்ளனர்.
ஸ்ரீ ராமபகவதி கோவில் என்ற தனியார் கோவில் இவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இதனை தவறுதலாக மடம் சொத்து என்று அறிவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 10-10-2019 -அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தீர்ப்பு படி திருக்கோயில் மடம் நிலத்தை மட்டும்தான் மீட்டிருக்கவேண்டும். ஆனால் குடியிருப்பு பகுதியும் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் கடந்த 24-04-2020 அன்று அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் இந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அகவே இங்கு வசித்து வரும் குடும்பங்களை இந்த நிலத்தில் தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சொத்து வரி செலுத்த அனுமதிக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்