search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிமணி"

    • காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார்.
    • பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தலைவர்களும் முற்றுகையிட்டு வருகிறார்கள்.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார். நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்கிறார்.

    அதை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்துக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    விமானத்தில் 15-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடு ஷோ செய்கிறார். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

    கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் பிரியங்கா அங்கிருந்து வேறு மாநில பிரசாரத்துக்கு செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கிருஷ்ணகிரி தொகுதியில் கே. கோபிநாத் போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 46 பேர் இடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    1. திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்

    2. கிருஷ்ணகிரி- கே. கோபிநாத்

    3. கரூர்- ஜோதிமணி

    4. கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத்

    5. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்

    6. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்

    7. கன்னியாகுமரி- விஜய் வசந்த்.

    திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம்.
    • தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின் ஜோதிமணி எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்திற்காக குரல் கொடுக்கும் எம்.பிக்களே பாராளுமன்றத்திற்கு தேவை. மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம். அ.தி.மு.கவை போல அடிமை சாசனம் எழுதி தரவில்லை. மத்திய அரசின் 100 நாள் வேலைதிட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 12 வாரம்வரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்ததைதவிர பா.ஜ.க வேறு ஒன்றும் செய்யவில்லை. சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதிஒதுக்கி தமிழை இருட்டடிப்பு செய்தனர். இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் அளித்து போராட்டம் நடத்தியும் எந்தவித பலனும் இல்லை.


    40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்தது. அப்போது கூட தமிழகத்தில் கட்சி அலுவலகங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் பா.ஜ.க மாவட்டம் தோறும் கட்சி அலுவலகங்களை திறந்து வைத்துள்ளனர். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் பிரதமர் மோடி. அவருக்கு அதானியை பற்றி குறைசொன்னால்மட்டுமே கோபம் வரும். ரெயில்வேயில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.

    இதற்கு காரணம் ரெயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதுதான் காரணம். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள இந்துகோவில்கள் பற்றி பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் அக்கரையுடன் பேசி வருகின்றனர். இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சி எடுத்து வருகின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் சிறுகுறு வியாபாரிகளை பாதுகாக்க ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு வியாபாரிகளை அழிப்பதற்காக இதனை பயன்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அழைத்து சென்றனர்.

    குளித்தலை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வருகை தந்தார்.

    அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆண் ஒருவர், ஜோதி மணியை பார்த்து தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வந்தீர்கள். அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்க முடியவில்லை. நன்றி கூற கூட நீங்கள் வரவில்லை என காட்டமாக கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். நீங்கள் வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்கிறீர்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.

    ஆனால் அந்த நபரோ எதையும் கண்டு கொள்ளாமல் போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்துப் பேசி உள்ளீர்களா? எம்.பி. என்கிற முறையில் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கிராம சபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சூழ்ந்தனர்.

    பின்னர் போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அங்கிருந்து அழைத்து சென்றனர். தற்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும்போது தொகுதிகளை கணிக்கும் வேலையில் கட்சிகள் ஈடுபட்டாலும் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காய் நகர்த்துவார்கள்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை அலசும் வேலையில் இப்போதே இறங்கி விட்டார்கள். இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் சிலர் தொகுதி மாறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையேயான லடாய் எல்லோரும் அறிந்ததே.

    இந்த நிலையில் ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது. இதை சாக்காக வைத்து வருகிற தேர்தலில் அவருக்கு இந்த தொகுதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    முன்பு அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை தொகுதி பக்கம் வருவதில்லை என்பதை சொல்லித்தான் ஜோதி மணியை வெற்றி பெற செய்தோம்.

    இப்போது அதே போல் ஜோதிமணியும் தொகுதி பக்கம் வராமல் இருக்கிறார். எனவே மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க. ஒரு தொகுதியை இழக்க நேரிடும். எனவே இந்த தேர்தலில் கரூர் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் தீர்மானமே போட்டுள்ளனர்.

    இதற்கிடையில் இந்த தொகுதி தி.மு.க.வுக்குதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று பேசியது உறுதிப்படுத்தி உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.

    எனவே சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. அதை விடுதலை சிறுத்தைக்கு விட்டுக்கொடுக்க வற்புறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

    விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் மாணிக்கம் தாகூர் சிவகங்கை தொகுதிக்கு மாற விரும்புகிறார். காரணம் விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கவும் அந்த தொகுதியில் வைகோ மகனை போட்டியிட வைக்கவும் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

    எனவே காங்கிரசுக்கு சாதகமான சிவகங்கையை மாணிக்கம் தாகூர் குறி வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகுதியின் 'சிட்டிங்' எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் விட்டுக் கொடுப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ராகுல் காந்திக்கு கார்த்தி சிதம்பரம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் தனக்கு கிடைக்க ராகுல் உதவுவார் என்று நம்புகிறார்.

    ஆனால் ப.சிதம்பரம் சோனியாவிடம் செல்வாக்குடன் இருப்பவர். எனவே யார் கை ஒங்குமோ அதை பொறுத்தே இந்த தொகுதியின் வேட்பாளரும் முடிவாகும்.

    • விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
    • இதனால் மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அறிவித்தார். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    • டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
    • டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கைமாற்றப்பட்டதில் சட்ட விரோத பணிபரிமாற்றம் நடந்ததாக குற்றம் சட்டப் பட்டது. இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

    இதில் விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத் துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது.

    இதையடுத்து நேற்று முன் தினம் ராகுல்காந்தி டெல்லி யில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக அவரிடம் 11 மணிநேரம் விசாரணை நடந்தது. இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல்காந்தி யிடம் அதிகாரிகள் தெரிவித் தனர்.

    நேற்று விசாரணை முடிந்து இரவு 11.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவல கத்தில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன், கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ள தாய் சோனியா காந்தியை சந்திக்க சென்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று 3-வது நாளாக ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசா ரணைக்கு ஆஜரானார்.

    அவர் காலை 11.35 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் சென்றார். பின்னர் ராகுல்காந்தி மட்டும் அமலாக்கத்துறை அலுவல கத்துக்குள் சென்றார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    ராகுல்காந்தியிடம் விசா ரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்நாள் விசாரணைக்கு ஆஜராக சென்ற ராகுல்காந்தியுடன் மூத்த தலைவர்கள் ஊர்வலம் சென்றனர்.

    அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட் டனர். நேற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

    3-வது நாளாக ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில் காங்கிரசார் இன்றும் போராட்டம் நடத்தினர்.ராகுல்காந்தியிடம் விசா ரணைக்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அவர்களும், தொண்டர்களும் போலீ சாரின் தடுப்புகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட சென்றனர்.

    உடனே போலீசார் மகளிரணியினர் காங்கிரஸ் தொண்டர்களை தடுத்தனர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. போலீசார் தடையை மீறி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அவர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்.

    அதேபோல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். அவர்களை கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    மேலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    காங்கிரசாரின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி சி.ஆர். பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×