search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி"

    • அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி செல்லும் சாலையில் சத்தியமங்கலம் முக்கிய வீதியில் கரும்பு பாரம் திடீரென ரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஆனாலும் நடுரோட்டில் கரும்பு சரிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    பிறகு சிறிது நேரத்தில் கரும்புகளை முற்றிலு மாக அகற்றி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை தனியார் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகிறது.
    • சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    விழுப்புரம்- நாகை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த விரிவாகப் பணிக்காக விவசாய நிலங்கள் மற்றும் மனை பிரிவு, வீடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    சீர்காழி தாலுகாவை பொறுத்தவரை சட்டநாதபுரம், செம்ப தனிருப்பு, காரைமேடு, காத்திருப்பு, அரசூர், சோதியக்குடி, எருக்கூர், தாடாளன் கோவில், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 5000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு ஒரு சில விவசாயிகளிடம் முன் பணத்தை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் மட்டுமில்லாமல் கூடுதல் நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பணம் கொடுக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனுக்களும் அளித்துள்ளனர்.

    அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் சீர்காழி புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடத்திற்ககு சென்று சாலை விரிவாக்க பணிக்காக சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

    விவசாயின் முக்கிய கோரிக்கையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அரசின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் வினை நிர்ணயம் செய்துள்ளதாகவும் இன்றைய சந்தை விலைக்கு நிர்ணயம் செய்து தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.
    • ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரி கண்ணாடிகளை உடைத்தனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கவி பாலன் (வயது 5). தனியார் பள்ளி மாணவன்.

    நேற்று மாலை பள்ளி விட்டு தனியார் வேனில் வீட்டுக்கு திரும்பி கவிபாலன் வேனில் இருந்து இறங்கி சாலையை கடந்து வீட்டுக்கு சென்ற போது திருவையாறு பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கவிபாலன் உயிர் இழந்தான்.

    இதனால் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரியில் கண்ணாடிகளை உடைத்தனர் .அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு தந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    இந்ததுயர சம்பவம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
    • பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவிநாசி,ஜூலை.26-

    அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.

    லாரியில் சென்ற எருமை மாடு கட்டப்பட்ட கயிறு துண்டாகி விட்டது. இதன் காரணமாக எருமை மாடு தடுமாறு ஓடும் லாரியிலிருந்து கீேழ விழுந்தது. மிகவும் வேகமாக சென்ற லாரியிலிருந்து கீழே விழந்த சமயம் பின்னால் லாரியை தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் எருமை மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதையறிந்த சமூக ஆா்வலா்கள், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

    இதையடுத்து பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் எருமை உயிரிழந்தது. 

    லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்ததால் மரங்கள் கீழே விழுந்தன.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த ஒன்னட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரி ஒன்னட்டியை அடுத்த எஸ்.கைகாட்டி 2-வது வளைவில் திரும்ப முயன்ற போது அதிக பாரத்தின் காரணமாக லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலியானார்.
    • லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

    மதுரை

    மதுரை அருகே மங்களக் குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது41). இவரது மனைவியும், 9 வயது மகள் அஜிதாவும் ஸ்கூட்டரில் சென்றார். பைக் மூன்றுமாவடி பகுதி யில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

    இதில் தாயும் குழந்தையும் கீழே விழுந்தனர். இதனால் படுகாயம் அடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் காளிதாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் தனஇந்திரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
    • லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கம்பங்குடி ஆர்ச் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 30 ) கொத்தனார்.

    இவருக்கு திருமணமாகி சுதா ரஞ்சனி என்ற மனைவியும் மகதிஷ் ( 7) என்ற மகனும் , இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திருத்துறைப்பூண்டி சாலையில் செம்மொழி நகர் எனும் இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இள ங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம் கணப திபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜை (33) கைது செய்தனர்.

    • பிரகாஷ் (29) இவர் தனது தந்தையுடன் லாரி தொழில் செய்து வந்தார்.
    • கந்தம்பாளையம் அருகே சாலை ஓரத்தில் போலீசார் வைத்து இருந்த தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள பச்சாக்கவுண்டர் வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரகாஷ் (29). இவர் தனது தந்தை யுடன் லாரி தொழில் செய்து வந்தார்.இவர் புதன் கிழமை இரவு நண்பர்களை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கந்தம்பாளையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் போலீசார் வைத்து இருந்த தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
    • சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில், கோவையில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த லாரி திடீெரன பழுதானது. இதனால் லாரியை ஓடி வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் என்பவர் லாரியை உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

    ஆம்னி பஸ் மோதியது

    அப்போது சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்து நிகழ்ந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்டு இருந்தது. வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதி

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தினால் பயணிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர். காயம் அடைந்த பயணிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைரம் குட்டை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருவதாக, தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமாருக்கு புகார் சென்றது.
    • விஏஓ கலியபெருமாள் மற்றும் வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் வைரம்குட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    சேலம்:

    வீரகனூர் அருகே புளியங்குறிச்சி ஊராட்சி, வைரம் குட்டை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருவதாக, தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமாருக்கு புகார் சென்றது. அதன்பேரில், விஏஓ கலியபெருமாள் மற்றும் வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் வைரம்குட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொக்லைன் மூலம் டிப்பர் லாரியில் மணல் அள்ளுவது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலின் பேரில், விரகனூர் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமார், ஆர்ஐ ஜெயா விசாரணை நடத்தியதில், மணல் அள்ளி யது புளியங்குறிச்சியைச் சேர்ந்த செந்தில் (வயது 35) என்பவரது பொக்லைன் மற்றும் லாரி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

    • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
    • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • பூதலூர் தாலூகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
    • மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் நேரக்கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை.

    பூதலூர்:

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி மாணவ - மாணவி களுக்கு இடையூறாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை (8.30 முதல் 9.30) மாலை (3.30 முதல் 5.30) வரை தடுத்திடவும், மணல் லாரியின் மேல் தார் படுதா போட்டு மூடி ச்செல்லவலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நாளை (11.7.23)நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகாஅலுவலகத்தில் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்ட உதவி செயற்பொறியாளர், ராஜா, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் ஏட்டு நெடுஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்காந்தி, கலைச்செல்வி, பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மணல் லாரியின் மேல் தார் படுதா போடாமல் வருபவர்கள் மீது உரிய அபராதத்தொகை காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் விதிக்கப்படும்.

    குவாரிகளில் இருந்து மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை 9.30 மணிவரையும் மாலை (3.30 முதல் 5.30) தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளி மாணவ -

    மாணவிகளுக்கு இடையூறு இல்லாமலும் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பின்றியும் வேக்கட்டுப்பாட்டுடன் லாரிகளை இயக்கிட அறிவுறுத்தப்படும் முடிவெடுக்க ப்பட்டதை தொடர்ந்து நாளை நடத்தயிருப்பதாக இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×