search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    • மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
    • லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கம்பங்குடி ஆர்ச் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 30 ) கொத்தனார்.

    இவருக்கு திருமணமாகி சுதா ரஞ்சனி என்ற மனைவியும் மகதிஷ் ( 7) என்ற மகனும் , இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திருத்துறைப்பூண்டி சாலையில் செம்மொழி நகர் எனும் இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இள ங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம் கணப திபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜை (33) கைது செய்தனர்.

    Next Story
    ×