என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையில் வைத்திருந்த தடுப்பில்மோட்டார் சைக்கிள் மோதி லாரி அதிபர் பலி
- பிரகாஷ் (29) இவர் தனது தந்தையுடன் லாரி தொழில் செய்து வந்தார்.
- கந்தம்பாளையம் அருகே சாலை ஓரத்தில் போலீசார் வைத்து இருந்த தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள பச்சாக்கவுண்டர் வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரகாஷ் (29). இவர் தனது தந்தை யுடன் லாரி தொழில் செய்து வந்தார்.இவர் புதன் கிழமை இரவு நண்பர்களை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கந்தம்பாளையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் போலீசார் வைத்து இருந்த தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்